-
ஜான் லீகார்ரே (John Le Carre) யின் “The Constant Gardener” நாவல் திரைப்படமாக 2005இல் வெளியானது. நாவலின் தலைப்பே திரைப்படத்துக்கும். எட்டாண்டுகள் முன் வெளியான இத்திரைப்படத்தை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். தூங்கப் போகலாமா என்று யோசித்துக் கொண்டே சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த போது ஜீ தொலைக்காட்சியில் இப்படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். நடிகை ரேச்சல் வெய்ஸ் (Rachel Weisz) –க்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற படம் என்று என்று எனக்கு தெரியும். கொஞ்ச நேரம்… Read more
-
ஒவ்வொரு கனவுகளுக்குள்ளும் நுழைவதும் வெளிவருவதுமாகவும் இருந்தேன். ஒவ்வொரு கனவிலும் எண்ணற்ற நிகழ்வுகள் எல்லா நிகழ்வுகளிலும் நான்! கனவுகளுக்குள் நான் நுழையவில்லையென்று பின்னர் தான் தெரிந்தது என்னைச் சுற்றிலும் கனவுகள் ஓடியும் பாய்ந்தும் சென்று கொண்டிருக்கின்றன நான் பாய்ந்து செல்லும் கனவுகளை நோக்கும் சாட்சியாக மட்டும் நின்று கொண்டிருக்கிறேன். Read more
-
தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது. இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக… Read more
-
( My daughter Puja Ganesh is thirteen years old. I have heard her mom telling that Puja is trying to write poems, but never once poems were shown to me. Puja is very inventive of finding odd places to hide her little copy in which she scribbles. This evening, I read the above lines in… Read more
-
இளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது. குரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும்! 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories சிறுகதைத் தொகுதியில் ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக்… Read more
-
மன அமைப்பு ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும். மனம் இயங்குவதும் இப்படித்தான்! ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி)! ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு… Read more
-
தைரியத்துடன் செயல் படுங்கள். அரச குடும்பத்தின் செல்வம் இங்கிருந்து மீளாமல் இருக்கட்டும். சாதாரண பெண்கள் தத்தம் வர்க்கத்தில் பிறந்த காதலர்களையே ஈர்ப்பார்கள்; ஆனால் உயர்ந்தோர் தாழ்ந்தோர், எல்லா வர்க்கத்தோரையும் உணர்வால் வளைப்பவரே சிறந்த பெண்கள்” உதயனின் பேச்சைக் கேட்ட பெண்கள் உடன் இளவரசனைக் கவரும் வேலையில் இறங்கினர். ஏதோ பயம் கொண்டவர்கள் போல ஆனந்தம் தரும் சில சைகைகளை புருவங்களினால், பார்வைகளால், கொஞ்சும் வார்த்தைகளினால், புன்னகைகளால், அங்க அசைவுகளால் செய்தார்கள். அரச ஆணையின் விளைவால், இளவரசனின் மென்மைத்… Read more
-
தத்துவங்களின் குறியீடாக விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்களை ஆழமாக தியானிக்கும் பொருட்டு உருவான மதங்கள் சிந்திக்கும் பயிற்சியில்லாத சாமானியர்களுக்காக விக்கிரகங்களை படைத்துக்கொண்டன. “புத்தரைத் தேடாதே ; புத்த நிலையைத் தேடு” என்று முழங்கினார் புத்தர். ஆனால் தேரவாத பௌத்தத்திலிருந்து கிளைத்த பல்வேறு பௌத்த பிரிவுகள் புத்தரை ஆசானாக குருவாக மனிதராக மட்டும் எண்ணாமல் பரமனாகவும் ஆக்கின. பிரம்மாண்ட புத்தர் சிலைகள் காந்தாரத்தில் உருவாகத் தொடங்கின. பின்னர் பௌத்த உலகெங்கும் புத்தர் சிலைகள், விக்கிரகங்கள் பல்கிப் பெருகின. தியான நிலைப்… Read more
-
”மனதின் சாராம்சம் நிரந்தரமான தூய்மையை கொண்டதாக இருந்தாலும், அறியாமையின் தாக்கம் சூழல்-சார் மனதை சாத்தியமாக்குகிறது. சூழல் சார்ந்ததாக இருந்தாலும், மனம் நிரந்தரமானது ; மாசுமறுவற்றது ; சுத்தமானது ; மாற்றங்களுக்கு உட்படாதது. அதனுடைய மூல இயல்பு பிரத்யேகத்தன்மையில்லாமல் இருப்பதால், பல்வேறு முறையிலான இருப்பை எங்கும் சிருஷ்டி செய்தவாறு இருந்தாலும், அது தனக்குள் ஒரு மாற்றமுமிலாமல் தன்னை உணர்கிறது. விஷயங்களின் ஒட்டுமொத்தத்தின் ஒற்றைத் தன்மை ஏற்கப்படாத போது, பிரத்யேகத்தன்மையுடன் கூடிய அறியாமை எழுகிறது ; சூழல்-சார் மனதின் எல்லா… Read more
-
தீனீ போட்டு கட்டுப்படியாகாமல் விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள் தெருக்களில் திரிந்தன வெள்ளைப் பசு முள்மரங்களை சுவாசம் பிடித்த படி நின்றது மஞ்சள் பசு சாலையோரங்களில் போடப்பட்ட கற்குவியற்களை நாவினால் தொடுகிறது. வெள்ளைப்பசுவின் இளங்கன்று பிளாஸ்டிக் குப்பைகளை ஆர்வத்துடன் நோக்குகிறது மாலை வீடு திரும்பாத பசுக்களைத் தேடி வந்த உரிமையாளன் மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான். இப்போதெலாம் பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை நவநாகரீக கோசாலையில் சுகமாய்க் காலங் கழிக்கின்றன காசு கொடுத்து பசுக்களுக்கு… Read more
-
பட்டுப்போன மரமொன்று பரம சிவன் போல் தெரிந்தது உயரமான மரத்தின் இரு புறத்திலும் இரு கரங்களென பெருங்கிளைகள் மேல் நோக்கி வளைந்த இடப்புற கிளையின் இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும் திரிசூலக் கிளைகள் முன் நோக்கி வளைந்து கண்ணில் படா தண்டத்தின் பிரிவில் தொங்கும் கையென வலப்புறக் கிளை தண்டின் உச்சியில் உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும் கொத்தான கிளைகள் பறவைகள் காலி செய்துவிட்டுப் போன கூடுகள் சிரப்பாகத்திற்குக் கீழ் சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன் சிவனே என்று இருந்த… Read more
-
மகாப்பிரளயத்தில் எல்லாரும் அழிந்துவிட்டனர் கொல்லாமல் விடப்பட்ட ஜீவர்களைத்தேடி ஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ. அவன் பாசக்கயிறிட்டு எல்லாரையும் அழித்துவிட்டான். ஒரே ஒருவனைத் தவிர, “பிரம்ம”ப்பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. எஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான். “எல்லோரையும் நீ அழித்துவிட இயலாது. ஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே அவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்” என்றான் எமன். சாகாமல் எஞ்சியிருந்தவனின் கருமங்களைத் தேடி பிரபஞ்சமெங்கும் தேடி அலைந்தான் மிருத்யூ எஞ்சிய கருமங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வெறும்… Read more
-
இசைக்கருவியொன்றை மீட்டும் ஒருவர் சரியான கம்பிகளை அழுத்துகிறோமா என்றோ கருவியை சரியாக ஏந்திக்கொண்டிருக்கிறோமா என்றோ யோசித்துக் கொண்டே வாசிப்பாரானால் அவரால் கேட்பவர்களை மகிழ்விக்க இயலுமா? இலக்கணப்பிழை அல்லது சொற்பிழை பற்றிய ஐயங்களுடன் தன்னுடைய வாழ்நாளின் அதிமுக்கியமான படைப்பை ஒரு எழுத்தாளரால் எழுதி விட முடியுமா? நாட்டியக் கலைஞர் கால்களை சரியான திசையில் உயர்த்தியிருக்கிறோமா என்ற குழப்பத்துடன் ஆடுகையில் அழகான நாட்டிய அனுபவத்தை பார்வையாளர்கள் பெறுவார்களா? கட்டுக்கோப்பான பயிற்சி கலைக்கு அத்தியாவசியமாகிறது. அயராத ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சியின் மூலமாக… Read more
-
நீருக்குள் நிலா பிம்பம் வானில் நிலா அசையாது நின்ற வான்நிலவில் களங்கங்கள் நீர் மேல் தோன்றிய அலைகளில் அளைவுற்றுச் சுத்தமான பிம்பத்தில் கறைகளில்லை நுரைத்து உருவான குமிழிகளில் நூறு நிலாக்கள் வான்நிலவு முகிலாடை பூணவும் பிம்பங்கள் எல்லாமும் ஒரேயடியாய் காணாமல் போயின Read more
-
நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன். மாயை எந்த மனநிலையிலிருப்பினும் ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது, இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும் ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது, எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும் வெகு உயரே… Read more
-
கறுப்பு-வெள்ளை திரைப்படங்களில் பாத்திரங்கள் கனவு காணத் துவங்கும் போது சுழன்று ஒரு மையப்புள்ளியில் குவியும் வட்டங்களை காட்டுவார்கள். வெளிப்புறத்தில் உருவாகும் வட்டம் பல வட்டங்களை உருவாக்கியவாறு மையப் புள்ளியை நோக்கி நகர்வது போல தோன்றும்; மையப் புள்ளியிலிருந்து புதிதாக ஒரு வட்டம் தோன்றி பல வட்டங்களை வடிவமைத்தவாறே வெளிப்புற வட்டத்தை நோக்கி வளர்வது போலவும் தோன்றும். ஆரம்பம் முடிவு போலவும் முடிவே ஆரம்பம் போலவும் காட்சி தரும் கனவுச் சுழற்சி வட்டத்தின் மையத்தில் ஓர் உள் நோக்கிய… Read more
-
பிளாஸ்டிக் பூங்கொத்தை சுற்றியவாறு இருக்கும் வண்ணத்துப்பூச்சியும் பிளாஸ்டிக் கண்ணுக்கு எளிதில் புலப்படா இழையால் பூங்கொத்துடன் இணைக்கப் பட்டிருப்பது தெரிய வர உற்று நோக்க வேண்டியிருந்தது. Read more
-
“சொற்ஜாலங்கள் கவிதை இல்லை கடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை புதிர்கள் கவிதை இல்லை பிரகடனங்கள் கவிதை இல்லை முழக்கங்கள் கவிதை இல்லை பிரச்சாரங்கள் கவிதை இல்லை வசனங்கள் கவிதை இல்லை” எழுதிய எல்லாவற்றையும் கிழித்துப் போட்டு விட்டு வெண் தாளொன்றை எடுத்து தயாராக வைத்துக்கொண்டு ”எது கவிதை இல்லை என்பது புரிந்தது; ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?” என்று கேட்ட போது மௌனமே பதிலாய்க் கிடைத்தது. வெண் தாளில் ஒரு கறுப்பு புள்ளி மட்டும்… Read more
-
வித விதமான கவலைகள் படைப்பூக்கமிழக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றிய வண்ணம் சங்கிலியை அறுத்தெறிந்து ஓரிரு மகிழ்ச்சியை உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு உவகை தலை தூக்குகையில் அதீத மகிழ்ச்சி அபாயம் தரும் என்று உள்ளுணர்வு சொல்ல மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன் இனி அபாயமில்லை என்ற நிம்மதியுணர்வை அடையாளம் காணாமல் முழுநேரக் கவலையில் என்னை புதைத்துக் கொண்டேன் +++++ என் கண்ணீர்த்துளிகளை மழைத் துளிகள் மறைத்து விடுதல் சவுகர்யம். நதி உற்பத்தியாகும் இடத்தை மலைகளும் குகைகளும் மறைத்திருக்குமாம்… Read more
-
கணிதத்தில் முற்றொருமைகளில் வரும் அடுக்குகளின் விதிகளை மகளுக்கு கற்றுவிக்கும் முயற்சியில் தோற்று துவண்டு ஓய்ந்தேன். “அடுக்குகளை கூட்டினால் மதிப்பு பெருகும். அடுக்குகளை கழித்தால் மதிப்பு குறையும் அடுக்குகளை வகுக்க மேலடுக்குகளிலிருந்து கீழடுக்குகளை கழிக்க வேண்டும்” ஆறாம் வகுப்பு மாணவிக்கு சமூகவியல் நியதிகள் புரியுமா என்ற கேள்வி கூடவா கணிதப் புத்தக ஆசிரியர்களுக்கு தோன்றியிராது? Read more
