• அத்தரும் ரூமியும்

    அத்தரும் ரூமியும்

    அன்றைய ‘பட்டுப் பாதை’யில் அமைந்திருந்த நிஷாபூரின் அந்தத் தெரு, ஒரு வணிக வீதியாகக் காட்சியளிக்கவில்லை; அது அச்சமும் தூசியும் சுருண்டோடும் வற்றிய நதிபோல் கிடந்தது. வீசிய காற்றில் இரும்பின் கசப்பு கலந்திருந்தது; அது போர் நெருங்கி வருவதன் எச்சரிக்கை. அத்தரின் அந்தச் சிறு மருந்தகத்தின் கதவு திறந்திருக்க, உள்ளே பரீதுத்தீன் அத்தர் காய்ந்த சாமந்தி மலர்களைப் பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அங்கே நிலவியது நறுமணங்களின் தியானம். சட்டென்று யாரோ உள்ளே நுழைந்தார்கள். அத்தர் நிமிர்ந்து பார்த்தார். எல்லாவற்றையும் மீறி…