Category: Uncategorized
-
நேற்று நடந்தது புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க…
-
சமீபத்தில் தமிழமுது அமைப்பு நடத்திய இணைய வழி சந்திப்பில் என் புத்தகம் – சக்கரவாளம் – குறித்த மதிப்புரையை திருமதி சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கினார். மதிப்புரையைத் தொடர்ந்து நடந்த கேள்வி – பதில் பரிமாற்றத்தில் நான் பங்கு கொண்டேன். கேள்வி – பதில் காணொளியின் யூ-ட்யூப் லிங்கை இத்துடன் பகிர்கிறேன்.
-
சிறப்புப் பதிவு – பாலசுப்ரமணியம் முத்துசாமி மேலாண்மை, கிராமப் பொருளாதாரம், இலக்கியம் என்று பல துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் நண்பர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி அவர்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் வசித்தாலும் இந்தியாவின், குறிப்பாக தமிழ் நாட்டின் பொது நலம் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வருபவர். சில மாதங்கள் முன் தமிழினி இணைய இதழில் அவர் எழுதிய உழவர்கள் சத்தியாக்கிரகம் எனும் கட்டுரை அவருடைய அனுமதியுடன் இங்கு சிறப்புப் பதிவாக வலையேற்றம் பெறுகிறது. நண்பர் முத்துசாமிக்கு…
-
நினைவிலிருந்து தொலைந்து போன ஒரு பாடல். அப்படி ஒரு பாடலை சில நாட்களாக ஞாபக மீட்பு செய்ய முயன்று வந்தேன். அதன் ட்யூன் சுத்தமாக மறந்து விட்டது. முதல் வரி ஞாபகமில்லை. பாடகர்கள் யாரெனவும் மறந்துவிட்டது. சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் அடிக்கடி முணுமுணுத்த பாடல். இப்படி நினைவிலிருந்து அகன்றுவிட்ட பாடலோடு அப்படி என்ன உறவு? நான் தங்கி பயின்று வந்த கல்லூரியில் மாணவர்களை ஐந்து மணி வாக்கில் எழுப்பிவிட தெய்வப்…
-
பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அஸ்திவாரமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதானும் தீர்வுகளை அளிக்க முனைகிறதா?. சூழல் பாதுகாப்பு முறைகள் மற்றும் சூழலியல் சீர்கேடு காரணமாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் – இவை ஒப்பீட்டளவில் புதிய பிரச்னைகள். சுற்றுப்புறம் மாசுபடுதல் பௌத்த சிந்தனை துவங்கிய காலத்தில் அறியப்படாத ஒரு பிரச்னை. எனவே சூழலியல் பிரச்னை குறித்த நேரடிக்…
-
ஆற்றின் குறுக்கே ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று கொண்டிருந்தது ஓர் ஆமை. அதன் முதுகின் மேல் படர்ந்திருந்தது ஒரு தேள். தன் மேல் அமர்ந்திருக்கும் தேளின் மேல் ஆமைக்கு பரிதாபம். அடுத்த கரையை அடைந்தவுடன் தேளை இறக்கிவிட்டு விடலாம் எனும் எண்ணத்துடன் கற்கள் மேவிய நதியின் படுகையை மெல்ல கடந்து கொண்டிருந்தது ஆமை. அதிக ஆழமில்லாவிடினும் நீரின் விசை அதிகமாயிருந்தது. கவனத்துடன் பாதி ஆற்றை கடந்து வந்தாயிற்று. மீதிப் பாதியில் நதி சீரான வேகத்தில் ஓடிக்…
-
சின்ன வயதில் அறிவியல் எனில் வேப்பங்காய். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் அறிவியல் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்தது கிடையாது. வணிகவியல் படிப்பு. விற்பனைத் துறையில் வயிற்றுப் பிழைப்பு. ஆளைக்குறை சம்பளத்தைக் குறை என கொஞ்சங்கொஞ்சமாக கடந்த இரண்டு வருடங்களாக டெக்னிகல் அஸிஸ்டென்ஸ் ஆட்கள் இல்லாமல் போய்விட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்றிருப்பவரும் குவாரன்டைனில் இருக்க தலையில் வந்து விழுந்தது ஒரு டெக்னிகல் வேலை. வாடிக்கையாளருக்கு அவசரமாக ஒரு ஊட்டச்சத்து ஃபார்முலேஷன் தேவைப்பட்டது. சரி நாமே…
-
சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது. சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை…
-
தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசி – திஸ்ஸாரக்கா – போதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக்…
-
வரலாற்றை எப்படி அணுகுவது? காலத்தின் பாய்ச்சல், கருத்துகளின் வெள்ளோட்டம், நிகழ் கலாச்சாரத்தின் உற்பத்தி ஸ்தானம், மனித இனம் முன்னர் செய்த தவறுகளின் பகுப்பாய்வு, இன்னும் எத்தனையோ விதமாக படிக்கலாம்! ஆனால் பெருமிதவுணர்வுடன்? கழிவிரக்கத்துடன்? முன்னர் நடந்த அநியாயங்களுக்கான பழி வாங்கும் உணர்வை தூண்டும் கதையாடலாக? ஓர் உதாரணமாக – ஜொராஸ்டிரர்களின் குறைந்த மக்கள் தொகையைப் பற்றி கேள்விப்படும் போது, விரைவாக மறைந்து போகத்தக்கதொரு கலாச்சாரக் குழுவாக அவர்களை எண்ணும் போது உடனடியாகத் தோன்றும் வருத்தம் / பரிதாப…
-
இதுவரை தமிழ் கதைப்பரப்பில் அதிகம் பேசப்படாத களம் மற்றும் நிலப்பரப்பு ; வரலாற்றின் முக்கிய காலகட்டம் ; வெறும் தகவல்களை அடுக்கினாலே ஒருநாவலுக்கிணையான விறுவிறுப்பை தரக்கூடிய வரலாற்றுக் காலம் ; ஆனால், தகவல்களின் குவியல் கட்டுரையாகும். நாவலாக முடியுமா? தகவலையும் கற்பனையையும் கலந்து கொத்திப்பூசி ஒரு கதையை எழுப்பும் பிரயத்தனத்தில் இரவுபகலாக எண்ணங்களை பதனப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சிறுதுளையிலிருந்து பீறிடும் நதிக்கான காத்திருப்பில் அலைவுறுகிறேன். தலைப்பை கூட முடிவுசெய்தாயிற்று – ஒருமுறை தொட்ட நதி.
-
பொறியியல் இரண்டாமாண்டு பயிலும் என் மகள் – பூஜா – வலைப்பதிவு எழுதத் துவங்கியுள்ளார். அவர் எழுதிய முதல் பதிவு – சிங்கங்களும் மான்களும்
-
-
இந்த வலைப்பக்கத்தில் பதிவான பௌத்தக் கட்டுரைகள் – சக்கரவாளம் – எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவரவிருக்கிறது. காலச்சுவடு நிறுவனம் பதிப்பிக்கிறது. பௌத்த நெறிமுறை மூல நூல்களில் – பாலி ஆகமங்களாக இருந்தாலும் சரி சம்ஸ்கிருத சூத்திர வகைமை நூல்களாக இருந்தாலும் சரி – அவற்றுக்கு நடுவே ததாகதரின் அகக்குரலின் மொழி அவ்வப்போது வரும். அந்த அகக்குரலின் மொழியை வாசிக்கும் போதெல்லாம் அவருடைய சிந்தனைக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரமை வருவது எனக்கு மட்டுமா எனத் தெரியவில்லை. — மாகண்டிகர்…
-
Been avoiding the mini series Chernobyl despite very good reviews. Didn’t have the heart to watch it for no specific reasons. My daughters persuaded me to watch it and I succumbed. I have a faint memory of hearing about Chernobyl accident through radio news when I was waiting for my results of 12th standard board…
-
Clinical Depression-ஐ வெறும் துக்கம் என்று கற்பிதம் செய்து கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருக்கையில் ஒரு நாள் சற்றே முயன்று என்னை நானே கவனித்துக்கொண்டு எழுத முயன்ற போது… என்னுள்ளில் நிகழும் உரையாடல்கள் இரைச்சலாக ஒலிக்கின்றன காதுகளை அடைத்துக் கொண்டாலும் இரைச்சல் அடங்குவதில்லை என்னைத் துரத்தும் நிழல்களிலிருந்து தப்பியோட முடிவதில்லை விடியலை தவிர்க்க தூங்காமல் இருத்தலும் விடிந்த பின் போர்வைக்குள் ஒளிந்து கிடப்பதுமாய் என் தினங்கள் நகர்கின்றன உண்மையில் தினங்கள் நகர்கின்றனவா துக்கம் என்றால் அழுது அதனைத்…
-
சர்வாதிகாரத்துக்கும் ஜன நாயகத்துக்கும் இடையிலான ஊசலாட்டம் மெக்ஸிகோவின் வரலாற்றில் பன்னெடுங்காலம், கிட்டத்தட்ட எண்பது வருட காலம் நீடித்தது. சுதந்திரம் வெறும் சாளர அலங்காரங்களாக நகரங்களில் ஒரு பாவனையாக பேணப்பட்டு கிராமப்புறங்களில் அரசு வன்முறை உயிர்களை குடித்துக் கொண்டிருந்தது. அரசாங்கத்துக்கெதிரான கருத்துகள் சகித்துக் கொள்ளப்படவில்லை. பத்திரிக்கை சுதந்திரம் ஒரு வெற்று பாவ்லாவாக நடைமுறையில் இருந்தது. நிலங்களை பங்கிட்டுத் தருகிறோம் என்ற வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு கிராமப்புற மக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருந்த சர்வாதிகார அரசுகள் நகரங்களில் மட்டும் ஒரு…
-
-
The resting mind was happy. It was soaking merrily in imagination. To explain to itself in its imagination scenes to come in the outside world is its favourite game. Without prior notice, the mind’s climate changed. A small depression was formed. There was the danger of its enlargement. To turn towards disastrous consequences, changes came…
-
சமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால…