Category: Poems

  • றியாஸ் குரானா தெரு   இங்கிருந்து தொடங்குகிறது தெரு. இல்லை, இது தெருவின் நடுவிலோர் இடம். அந்த தெருவின் முடிவடைகிற இடம். ஒன்று போல் தென்பட்டாலும், ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்களாலும், அடையாளங்களாலும் நீண்டு கொண்டே இருக்கிறது. எனது தெருவாகத் தொடங்கி உனது தெருவாக முடிவடைவதுகூட ஒரு வசதிக்காகத்தான். யாருடைய தெருவில் நாம் நிற்கிறோம்? அதைக் கண்டு பிடிக்கும் போது அடையாளமொன்றை பெற்றுக் கொள்கிறோம். எங்கிருந்து தொடங்குகிறது இந்தத் தெரு என ஒரு குழந்தை கேட்கும் போது,…

  • ஞாபகார்த்த இலை காணாமல் போனது மரத்திலிருந்து விடுபட்ட இலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை புத்தகப்பக்கங்களுக்கு நடுவில் சிறைப்படுத்தி வைத்திருந்தாய் புத்தகயாவின் புனித மரத்தின் இலையது என்பதை மறந்து போனாயா?

  • செருப்படி சத்தம் காதைக் கிழித்தது பொறுக்கவியலாமல் சத்தம் நின்றதும் வாசல் வெளியே ஒரு ஜோடி செருப்பு பாதங்கள் எங்கேயென திசையெல்லாம் அலைகையில் செருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம் திரும்பவும் அறையில் அடைந்தேன் செருப்படி சத்தம் மீண்டுமொருமுறை கேட்குமெனும் நம்பிக்கையில்

  • தலைகளில்லா முண்டங்கள் ஒரு படை அமைத்தன தலைவன் ஒருவனை நியமிக்க தலை தேடும் பணியில் இறங்கின கிடைக்காமல் போன தலைக்கு பதிலாய் தலையின் சித்திரம் வரைந்த பலகையொன்றை எடுத்து ஒரு முண்டத்தின் மேல் ஒட்டி வைத்தவுடன் அதன் உயரம் பன்மடங்காகி எடை பல்கிப் பெருகி அதன் காலடி நிழலின் சிறு பகுதிக்குள் மற்ற முண்டங்களெல்லாம் அடங்கின.

  • மண்டியிட்டு திட்டில் தலை வைத்து பார்க்கையில் ஆழத்தில் போய்விட்ட நீர் மட்டம் ஈரமிலா தொண்டையில் சொற்களின் உற்பத்தி முடக்கம். வறண்ட கோடைக்கு நடுவே பெய்த சிறு தூறலின் ஒற்றைத் துளி நாக்கை நனைத்தவுடன் பெருகிய வெள்ளத்தில் கிணறு பொங்கி வழிந்தது.

  • ஒவ்வொரு கனவுகளுக்குள்ளும் நுழைவதும் வெளிவருவதுமாகவும் இருந்தேன். ஒவ்வொரு கனவிலும் எண்ணற்ற நிகழ்வுகள் எல்லா நிகழ்வுகளிலும் நான்! கனவுகளுக்குள் நான் நுழையவில்லையென்று பின்னர் தான் தெரிந்தது என்னைச் சுற்றிலும் கனவுகள் ஓடியும் பாய்ந்தும் சென்று கொண்டிருக்கின்றன நான் பாய்ந்து செல்லும் கனவுகளை நோக்கும் சாட்சியாக மட்டும் நின்று கொண்டிருக்கிறேன்.

  • ( My daughter Puja Ganesh is thirteen years old. I have heard her mom telling that Puja is trying to write poems, but never once poems were shown to me. Puja is very inventive of finding odd places to hide her little copy in which she scribbles. This evening, I read the above lines in…

  • தீனீ போட்டு கட்டுப்படியாகாமல் விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள் தெருக்களில் திரிந்தன வெள்ளைப் பசு முள்மரங்களை சுவாசம் பிடித்த படி நின்றது மஞ்சள் பசு சாலையோரங்களில் போடப்பட்ட கற்குவியற்களை நாவினால் தொடுகிறது. வெள்ளைப்பசுவின் இளங்கன்று பிளாஸ்டிக் குப்பைகளை ஆர்வத்துடன் நோக்குகிறது மாலை வீடு திரும்பாத பசுக்களைத் தேடி வந்த உரிமையாளன் மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான். இப்போதெலாம் பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை நவநாகரீக கோசாலையில் சுகமாய்க் காலங் கழிக்கின்றன காசு கொடுத்து பசுக்களுக்கு…

  • பட்டுப்போன மரமொன்று பரம சிவன் போல் தெரிந்தது உயரமான மரத்தின் இரு புறத்திலும் இரு கரங்களென பெருங்கிளைகள் மேல் நோக்கி வளைந்த இடப்புற கிளையின் இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும் திரிசூலக் கிளைகள் முன் நோக்கி வளைந்து கண்ணில் படா தண்டத்தின் பிரிவில் தொங்கும் கையென வலப்புறக் கிளை தண்டின் உச்சியில் உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும் கொத்தான கிளைகள் பறவைகள் காலி செய்துவிட்டுப் போன கூடுகள் சிரப்பாகத்திற்குக் கீழ் சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன் சிவனே என்று இருந்த…

  • மகாப்பிரளயத்தில் எல்லாரும் அழிந்துவிட்டனர் கொல்லாமல் விடப்பட்ட ஜீவர்களைத்தேடி ஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ. அவன் பாசக்கயிறிட்டு எல்லாரையும் அழித்துவிட்டான். ஒரே ஒருவனைத் தவிர, “பிரம்ம”ப்பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. எஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான். “எல்லோரையும் நீ அழித்துவிட இயலாது. ஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே அவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்” என்றான் எமன். சாகாமல் எஞ்சியிருந்தவனின் கருமங்களைத் தேடி பிரபஞ்சமெங்கும் தேடி அலைந்தான் மிருத்யூ எஞ்சிய கருமங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வெறும்…

  • நீருக்குள் நிலா பிம்பம் வானில் நிலா அசையாது நின்ற வான்நிலவில் களங்கங்கள் நீர் மேல் தோன்றிய அலைகளில் அளைவுற்றுச் சுத்தமான பிம்பத்தில் கறைகளில்லை நுரைத்து உருவான குமிழிகளில் நூறு நிலாக்கள் வான்நிலவு முகிலாடை பூணவும் பிம்பங்கள் எல்லாமும் ஒரேயடியாய் காணாமல் போயின

  • நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன். மாயை எந்த மனநிலையிலிருப்பினும் ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது, இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும் ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது, எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும் வெகு உயரே…

  • பிளாஸ்டிக் பூங்கொத்தை சுற்றியவாறு இருக்கும் வண்ணத்துப்பூச்சியும் பிளாஸ்டிக் கண்ணுக்கு எளிதில் புலப்படா இழையால் பூங்கொத்துடன் இணைக்கப் பட்டிருப்பது தெரிய வர உற்று நோக்க வேண்டியிருந்தது.

  • “சொற்ஜாலங்கள் கவிதை இல்லை கடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை புதிர்கள் கவிதை இல்லை பிரகடனங்கள் கவிதை இல்லை முழக்கங்கள் கவிதை இல்லை பிரச்சாரங்கள் கவிதை இல்லை வசனங்கள் கவிதை இல்லை” எழுதிய எல்லாவற்றையும் கிழித்துப் போட்டு விட்டு வெண் தாளொன்றை எடுத்து தயாராக வைத்துக்கொண்டு ”எது கவிதை இல்லை என்பது புரிந்தது; ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?” என்று கேட்ட போது மௌனமே பதிலாய்க் கிடைத்தது. வெண் தாளில் ஒரு கறுப்பு புள்ளி மட்டும்…

  • வித விதமான கவலைகள் படைப்பூக்கமிழக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றிய வண்ணம் சங்கிலியை அறுத்தெறிந்து ஓரிரு மகிழ்ச்சியை உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு உவகை தலை தூக்குகையில் அதீத மகிழ்ச்சி அபாயம் தரும் என்று உள்ளுணர்வு சொல்ல மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன் இனி அபாயமில்லை என்ற நிம்மதியுணர்வை அடையாளம் காணாமல் முழுநேரக் கவலையில் என்னை புதைத்துக் கொண்டேன்  +++++  என் கண்ணீர்த்துளிகளை மழைத் துளிகள் மறைத்து விடுதல் சவுகர்யம். நதி உற்பத்தியாகும் இடத்தை மலைகளும் குகைகளும் மறைத்திருக்குமாம்…

  • கணிதத்தில் முற்றொருமைகளில் வரும் அடுக்குகளின் விதிகளை மகளுக்கு கற்றுவிக்கும் முயற்சியில் தோற்று துவண்டு ஓய்ந்தேன். “அடுக்குகளை கூட்டினால் மதிப்பு பெருகும். அடுக்குகளை கழித்தால் மதிப்பு குறையும் அடுக்குகளை வகுக்க மேலடுக்குகளிலிருந்து கீழடுக்குகளை கழிக்க வேண்டும்” ஆறாம் வகுப்பு மாணவிக்கு சமூகவியல் நியதிகள் புரியுமா என்ற கேள்வி கூடவா கணிதப் புத்தக ஆசிரியர்களுக்கு தோன்றியிராது?

  • இன்னும் இருக்கிறது வாசலில் சில செருப்புகள் மோகத்தைக் கொன்று விடு விலை போகாத எனது 3 கதைகளின் தலைப்புகளை மாற்றி எழுதிப் பார்த்தேன் சில செருப்புகள் இன்னும் வாசலில் இருக்கிறது கொன்றுவிடு மோகத்தை! வேறு மாதிரி மாற்றிப் பார்த்தேன் வாசலில் கொன்றுவிடு மோகத்தை இன்னும் சில செருப்புகள் இருக்கிறது வேற்றுமை உருபை மாற்றி இன்னொரு சொல்லையும் சேர்க்கலாமா? என்னுடைய கதையின் தலைப்புகள் தானே! யாரைக் கேட்க வேண்டும்? வாசலில் இன்னும் இருக்கும் சில செருப்புகளால் அடிப்பர் மோகத்தை…

  • நிறைவு என்ற பதத்துக்கு நிறைய என்று பொருள் கொண்டு கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது நிறைய வகைகளில் “நிறைய”.. “கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய” “சென்ற வருடத்தை விட நிறைய” “மைத்துனரின் வீட்டை விட நிறைய” என! கொஞ்சமிருப்பவரும் “நிறைய” காண்பிப்பதற்கு நிறைய கடன்களைப் பெற நிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும். அந்தஸ்தை நிரூபிக்க நிறைய பரிசுகள் ! நிறைய உடைகள் ! நிறைய இனிப்புகள் ! நிறைய விருந்துகள் ! நிறைய வாழ்த்தட்டைகள் ! நிறைய மனநிறைவும்…

  • நடந்து கொண்டேயிருக்கையில் திடீரென்று நான் அணிந்திருந்த என் செருப்புகள் காணாமல் போயின அவற்றை தேடி பல இடங்களிலும் அலைந்து திரிந்தேன் வெகு நேரத் தேடலுக்குப் பின் கிடைத்தன என் செருப்புகள் அவற்றை என் கையில் பத்திரமாய் பிடித்துக் கொண்டு இல்லம் வந்தடைந்தேன்.

  • அமைதியை குலைத்து அறைக்குள் நுழைந்த இசையை விரட்டியடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி காதை பொத்திக்கொண்டேன் இசை இப்போது தென்படவில்லை. இசை கண்ணுக்கு தெரியாமல் எங்காவது ஒளிந்திருக்கக்கூடும் என்று காதிலிருந்து கைகளை எடுக்கவில்லை கை வலிக்கத் துவங்கியபோது இரு கைகளை தொங்கப்போட்டு வலியை துரத்தினேன். இசை அவ்விடத்திலிருந்து ஏற்கெனவே விலகிச் சென்றிருக்கலாமென எண்ணிக்கொண்டு மீண்டும் உறக்கத்தை தேடும் முயற்சியில் இறங்கினேன்

    நோயாளி