• சேறு சேறில் விழுந்த அனுபவம் ஒன்று அண்மையில் ஏற்பட்டது. அலுவலகம் முடிந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்வது வழக்கம். என்றுமில்லாத அதிசயமாக ஒரு மாலையில் கேட்-டுக்கருகில் என் அதிகாரி என்னை தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டு விடுவதாக திட்டம். வழக்கமாக அவருடைய காரில் பயணிக்கும் செகரட்டரி ஷிகா அன்று வேலைக்கு வராததால், இப்பாக்கியம் எனக்கு கிடைத்தது. செக்டர் 55-ஐ அடைய… Read more

  • ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளும் கட்டாயமில்லாமல், தன் நேரத்தை தன் விருப்பப்படி பயனபடுத்திக்கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆரம்ப நாட்களை அனுபவித்தான் மாதவன். ஆனால் மிக விரைவில் மனத்தளர்ச்சிக்கு ஆளானான். தன்னை எதற்கும் பயனற்றவனாக எண்ணத் துவங்கினான் ; சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவன் போல் வளைய வந்தான் ; வளர்ந்து விட்ட தம் குழந்தைகளால் கைவிடப்பட்டவனானான் ; “நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” என்னும் மிகப் பழைய வினாவுக்கு பதில் தேடும் சிரமத்தை அவன் என்றுமே… Read more

  • யதார்த்தத்தின் நிறம். இருட்டு, வெளிச்சம் – இவற்றின் கலவை. களைத்துப் போன வானம் போர்த்திக்கொள்ளும் அமைதி. ஒளிரும் பகலை தன் கைகளால் தாழடைக்கும் இரவின் நிழல். இளம் கருநிறச்சாயலில் மெல்ல கட்டவிழும் பதாகை. கனிந்த, முதிர்ந்த இசைக்குள் ஐக்கியமாகப் போகும் இளம் சுருதி. அதிரப் போகும் இடி மற்றும் பெய்யப் போகும் மழைக்கான அறிகுறி. சொற்களின் செயல்களின் நிறம். கறுப்புமின்றி வெளுப்புமின்றி இரண்டுக்கும் நடுவிலான சாம்பல் நிறம் ; ஒப்புதலின் நிறம். (பேராசிரியர் மாலதி மாதுர் எழுதிய… Read more

  • மாதவன் முப்பது வருடங்கள் கடினமாக உழைக்கிறான். குழந்தைகளை வளர்க்கிறான் ; சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறான் ; தன் எல்லா நேரத்தையும் தன் வேலைக்காகவே ஒதுக்குகிறான். ஒரு முறை கூட “தான் செய்யும் இவ்வேலைக்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொள்வதில்லை. அவனுடைய ஒரே எண்ணம் “ நான் எந்த அளவுக்கு பிசியாக இருக்கிறேனோ, அந்த அளவுக்கு முக்கியமான ஆளாக பிறரால் கருதப்படுவேன்” என்பது தான். அவனுடைய குழந்தைகள் வளர்கிறார்கள். தம் படிப்பை முடிக்கிறார்கள். வீட்டை… Read more

  • மாதவனுக்கு எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும். அப்படியிராவிடில், தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தமில்லையென்று அவன் நினைக்கத் தொடங்கிவிடுவான் ; சமூகத்திற்கு தாம் தேவையில்லாமல் போய் விடுவோம் என்றும் யாரும் தன்னை விரும்பவில்லையென்றும் கூட எண்ணத் தொடங்கிவிடுவான். எனவே, காலையில் விழித்தெழுந்தவுடனேயே, செய்வதற்கென தொடர்ச்சியான பணிகள் இருக்கும் ; தொலைக்காட்சி காணுதல் (முந்தைய நாள் இரவில் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்), செய்தித்தாள் வாசித்தல் (முந்தைய நாள் பகல் பொழுதில் நிகழ்ந்தவற்றை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே!), குழந்தைகளை பள்ளிக்கு கால தாமதமாகாமல்… Read more

  • நேரமில்லை

    நேரமில்லை..நேரமேயில்லை… நான் செய்யவிரும்பும் அனைத்தையும் செய்தற்கு… ஏறுவதற்கு சிகரங்களின் உச்சிகள்,,, உலாவுவதற்கு உகந்த காடுகள்… படகில் பயணிக்க அலை திரள் கடல்கள்.. செல்வதற்கு எல்லா இடங்களும்… அறிவதற்கு பூமிவாழ் எல்லா மனிதரும்… இருக்கும் நேரமோ… சிலரை அறிதற்கும் சிலவற்றை செய்தற்கும் செய்ய மீதமிருப்பவை பற்றி செய்யுள் புனைதற்கும் – எலீனோர் பார்ஜான் Read more

  • (தில்லிகை இலக்கிய வட்டத்தில் 11.8.2012 அன்று ஆற்றிய உரை) எல்லோருக்கும் வணக்கம். நான் மேடையேறிப் பேசுவது இதுதான் முதல் முறை. நெஞ்சுக்குள் நடுக்கம். கொஞ்சம் பதற்றம். நாக்கு குழறலாம். உச்சரிப்பு குளறுபடியாகலாம். வானிலை அறிக்கை வாசிப்பது மாதிரி உன் மனதின் கால நிலை பற்றி எங்களுக்கு ஏன் சொல்லுகிறாய் என்று யாரும் எழுந்து என்னைக் கேட்பதற்கு முன்னால், நான்கு வரி பாரதி கவிதையை சொல்லி விட்டு என் உரையை ஆரம்பித்து விடுகிறேன். ”பயமெனும் பேய் தனை அடித்தோம் –… Read more

  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வரும் சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்த கவிதையை தினமணி (5.8.2012) அன்று தமிழ் மணி பகுதியில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த கவிதை. கவிஞர் சுவாதி முகில் அவர்களின் சம்மதத்துடன் என் வலைப்பூவில் இடுகிறேன். திணைப்பெயர்ச்சி டோல்கேட்..ஃப்ளை ஓவர்… ஃபோர் லான்..சர்வீஸ் ரோட்… மோட்டல்… பெட்ரோல் பங்க்… என்று விரல் விட்டு எண்ணிக்கொண்டே வருகிறாள் ஹேமா நெல்லு வயல்… வாழத்தோப்பு… கம்மாயி…வெத்தலை கொடிக்கால்… செவ்வந்தித் தோட்டம், கமலைக்கிணறு… என்று சிறு வயதில் என் விரல்… Read more

  • நண்பர் பெரியசாமி சமீபத்தில் எழுதிய ஒரு கவிதையை முகநூலில் பங்கிட்டிருந்தார். மிக அழகான ஒரு கவிதை. படித்துப் பாருங்களேன். எஞ்சியவை பிளந்த மாதுளையிலிருந்து உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள் எறும்பு ஒன்று ஒரு துளியை இழுத்துச்செல்ல மீந்ததை பங்கிட்டனர் மகன்கள் எதிர் இல்ல யுவதி பிணி நீக்க எடுத்துச் சென்றாள் தொலிகளை கழுவத் துவங்கினேன் கையிலிருந்த பிசுபிசுப்பை…   Read more

  • அவளின் உதடுகள் மூடியிருந்தும் அவள் சிரிப்பு காணக் கிடைக்கிறது. விழிகள் திறந்திருக்கின்றனவே ! உறங்குகையிலும் அவளின் சிரிப்பு தொடருமோ என்றறிய ஆவல் எனது ஆவலை அவள் அறிந்தாளில்லை. தோள் தருகிறேன் தோழி தன் கவலைகளை சொல்லி அழ மனப்பாரம் தீர்ந்தவுடன் நன்றி சொல்லி நகர்ந்து விடும் தோழி. மனதை பாரமாக்கி சென்று விடுகிறாள் பாரத்தை இறக்கி வைத்தால் தோழி தொலைந்து போய் விடுவாளோ? அலை புரளும் குழல்கள் – அவற்றை ஒதுக்கி விடும் விரல்கள் நெருங்கி வரும்… Read more

  • இளைப்பாறும் மனது களித்திருந்தது. உல்லாசமான கற்பனைகளில் திளைத்திருந்தது. புறவுலகில் வரப்போகும் காட்சிகளாக சிலவற்றை முன்னரே தன் கற்பனையில் விரித்துரைத்து தனக்கே சொல்லிக்கொள்ளும் விளையாட்டு அதற்கு விருப்பமான விளையாட்டு. முன்னறிவிப்பின்றி மனதின் தட்பவெப்பம் மாறியது சிறு காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூள் கொண்டது. அது பெரிதாகும் அபாயமிருந்தது. கற்பனைக் காட்சிகள் மோசமான நிகழ்வுகளுக்கு மாறும் வகையில் திரைக்கதை மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்தன. பயவுணர்ச்சி பரவி நரம்புக் குழாய்களிலிருந்து சில ரசாயன திரவங்கள் சுரக்கத் துவங்கின. காட்சிகளை உறையச் செய்யுமாறும்… Read more

  • ஓடும் ஆறு போல இரு இரவுகளில் அமைதியாக. இருண்டிருக்கும் போது அச்சப்படாதே வானில் நட்சத்திரங்கள் தெரிந்தால் அவற்றை உன்னுள் பிரதிபலி வானில் மேகங்கள் சூழ்ந்திருந்தால் மேகமும் நீரின் வடிவம் என்பதை நினைவுபடுத்திக் கொள் கவலையை விட்டு அவற்றையும் பிரதிபலி உன் அமைதி நிறைந்த ஆழங்களில்     (பிரேசில் நாட்டுக் கவிஞர் மானுவல் பண்டெய்ரா (Manual Bandeira) எழுதியது) Read more

  • பிரேசிலின் ரியோ-டீ-ஜெனீரோ நகரில் உள்ள புனித ஜோசப் மருத்துவமனையில் நான் பிறந்தேன். அது ஒரு சிரமமான பிரசவமாக இருந்தது. எனவே, என் அன்னை நான் உயிர் பிழைக்க அருள் புரியுமாறு புனித ஜோசப்பை வேண்டிக்கொண்டார். நான் பிறந்த நாள் முதலே புனித ஜோசப் என் வாழ்வை தாங்கிப்பிடிக்கும் தூணாக விளங்குகிறார். நான் 1987இல் முதல்முறையாக சாண்டியாகோ (ஸ்பெய்ன்) புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பிய ஒவ்வொரு வருடமும் 19ந் தேதி மார்ச் அன்று – புனித ஜோசப்பின் பெயரில்… Read more

  • சிந்தனை படைப்பின் முதற்மட்டம். சொற்கள் அடுத்து வருவன. சொல்பவை எல்லாம் சிந்தனையின் வெளிப்பாடே! சொற்களின் இயக்க நிலை சிந்தனையை விட வலிமை வாய்ந்தன. சொற்கள் படைப்பின் இரண்டாம் மட்டம். அடுத்து வருவது செய்கை. செய்கைகள் என்பன நகரும் சொற்கள். சொற்கள் என்பன சிந்தனையின் வெளிப்பாடு. சிந்தனை என்பது வடிவப்படுத்தப்பட்ட யோசனை. யோசனை என்பது ஆற்றல்களின் கூடல். ஆற்றல் என்பது சக்திகளின் எழுச்சி சக்தி என்பது மூலகங்களின் உள்ளிருப்பு மூலகங்கள் என்பன கடவுளின் துகற்கள் – எல்லாவற்றின் பகுதிகள்… Read more

  • காகிதத்தில் வரையப்பட்டிருந்தவை. நேர்கோடுகள் தாம்! ஐயமில்லை. தரையால் ஈர்க்கப்பட்டு விழுந்தன அக்கோடுகள் ! இப்போது அவைகள் தம் நேர்த்தன்மையை இழந்து வளை கோடுகளாகியிருந்தன. +++++ நம் மனதில் உறையும் முழுமையான உட்பொருட்களின் நிழல்களே நாம் புறவுலகில் உணரும் பொருட்கள் என்றுரைத்தான் பிளேட்டோ. +++++ புறவுலகத்தின் ஏதொவோர் இயக்கத்தை வரைபடத்தில் குறித்தால் அருவமாக (abstract) மாறும். பருண்மை துறந்து கணிதவுலகத்தில் நுழைந்து விடுதலை பெறும் +++++ மூன்று பரிமாண உருவங்களும் நிகழ்வுகளும் காலவெளி என்றொரு நான்காவது பரிமாணத்துடன் சேர்ந்து… Read more

  • (RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்) இடம் காலம் என்ற இரட்டை தொடர்ச்சிகள் பிரக்ஞை என்றொரு மறைபொருளின் நூல் பொம்மைகள் நரைத்த மீசை இரைந்த முடி கொண்ட இயற்பியல் மேதை உணர்ந்து சொன்னான். +++++ சுவரில் சாய்ந்து அமர்ந்த படி உறங்கியபோது அண்ட வெளியில்… Read more

  • பெருநகரமொன்றின் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த அழகான சிறு ஊர். ஒரு புகைவண்டி நிலையம். ஒரு பேருந்து நிலையம். இரண்டு சினிமா தியேட்டர்கள்!. அவற்றில் ஒன்று ஊருக்கு வெளியே தென்னந்தோப்புக்கு முகப்பில் இருந்த ஒரு டூரிங் டாக்கிஸ். பெரும்பாலும் கறுப்பு-வெள்ளை படங்களே திரையிடப்படும். தீபாவளி – பொங்கலுக்கு மட்டும் வண்ணத்திரைப்படங்கள். சரியாக பராமரிக்கப்படாத நகராட்சி பூங்கா. பூங்காவிற்கு நடுவில் ஒர் அறை. அதற்குள்ளிருக்கும் வானொலிப்பெட்டியில் வரும் ஆறு மணி தமிழ் செய்திகள் பூங்காவில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகள்… Read more

  • கிளை நட்டு நீரூற்றி களை பிடுங்கி மருந்தடித்து பாட்டு பாடி பொறுமை காத்து…… வெகு நாளுக்குப் பிறகு பூத்த மலரை கையில் ஏந்தி பார்க்கையில் இரு இதழ்கள் அளவு குறைந்தும் ஒரிதழ் அளவு பெரிதுமாய் நீண்டு விகாரமாக இருந்தது. எனினும் என் மலரை பெருமையுடன் சட்டையில் குத்திக்கொண்டேன். Read more

  • வில் வித்தையில் தன் மானசீக குருவாக நினைத்திருந்த துரோணர் தன்னை சீடனாக ஏற்க மறுத்ததால் விரக்தியில் கொஞ்ச காலம் அலைந்து கொண்டிருந்த பிறகு, ஏகலைவனுக்கு ஒர் எண்ணம் பிறந்தது. துரோணர் என்ன துரோணர் ? அவர் மட்டும் தான் குருவா? கல்வித்துறையில் அரசு செய்த மாறுதல்களுக்கு பிறகு வீதிக்கு வீதி வில் வித்தை கற்றுத்தரும் தனியார் பள்ளிகள் முளைத்து விட்டனவே? அவற்றில் ஏதாவது ஒன்றில் போய் சேர்ந்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான் ஏகலைவன்.… Read more

  • முதலில் நம்பிக்கை என்ற சிந்தனை பின்னர். நம்புங்கள் என்ற சொல் நம்பினார்கள் பலர் ஏன் நம்பவேண்டும் என்று ஆய்ந்தனர் சிலர் ஆய்ந்தவர்களில் சில பேர் நம்பத்தொடங்கினர் சில பேர் நம்பத்தேவையில்லை என்றனர் மற்றவர்கள் இன்னும் ஆய்வைத் தொடர்கின்றனர் நம்புதலும் நம்பாதிருத்தலும் நம்புதல் பற்றிய ஆய்வும் என்று செய்கைகளே மிஞ்சின. உலகளாவிய பெருமனத்தின் ஒன்றிணைந்த சிந்தனை, சொல் மற்றும் செய்கைகள் சிருஷ்டியின் மூலக்கூறுகள் எனில் நம்பிக்கையின் சிருஷ்டியும் இவ்வாறே நிகழ்ந்திருக்கக்கூடும். Read more