Category: Uncategorized

  • இரண்டு புற பாறைகள் இடைவெளி குறைந்து கொண்டே நடுவில் இருக்கும் என்னை இறுக்கின. மூசசுத் திணறி இதயம் துடிதுடித்து நசுங்கி மரணிப்பது போல் இருந்த நொடிகளிலும் பாறைகள் சிந்திக்குமா என்ற கேள்வி எழுந்தது ஒரு பாறை நேரம் ; இன்னொரு பாறை சூழல் என்பதாக ஓர் உவமானத்தை யோசித்த போது ஒன்று தெளிவானது பாறைகளின் சிந்தனை என் சிந்தனையன்றோ! இல்லையில்லை…பாறைகளே என் சிந்தனையன்றி வேறில்லை பலங்கொண்ட புஜங்கொண்டு பாறைகளை தள்ளிப் பிளந்தெடுத்து கற்களாகப் பிய்த்தெடுத்து ஒவ்வொன்றாக எறியும்…

  • நேரம் சரியில்லை என்று சிந்தித்துக் கொண்டிருந்த மனதை யாரோ படித்து விட்டார்கள். ‘களுக்’ என சிரிக்கும் ஓசை. மனம் துணுக்குற்றது. ‘யார் சிரித்தது’ ‘நான் தான் நேரம்’ ‘நான் நினைத்ததை எப்படி அறிவாய் நீ?’ ‘உனக்குள்ளேயே இருக்கிறேன் ; உன்னை அறிய மாட்டேனா நான்?’ ‘எனக்குள் இருக்கிறாயா? இது என்ன நகைச்சுவை?’ ‘உனக்குள் தான் நான் இருக்கிறேன்…’ ‘இது எப்படி சாத்தியம்?’ ‘நடந்தவைகளை எண்ணி குற்றவுணர்வு அடைந்த போதெல்லாம் என்னுடைய நேற்றைய வடிவமாக உன்னுள் நான் இருந்திருக்கிறேன்’…

  • அலுவலகத்தில் நடக்கவிருந்த டவுன்ஹால் நிகழ்வில் இகீகை என்னும் ஜப்பானிய காட்செப்ட் பற்றி உரையாற்றலாம் என்று அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். வாழ்நாள் முழுக்க சலித்துப்போகாமல் ஒரு வேலையை செய்வோமாயின் அது எந்த வேலையாய் இருக்கும்? இந்த வினாவிற்கு விடையளிக்கத் தேவையான எண்ணச்சட்டகத்தை விவரிக்கிறது இகீகை. பதற்றம் மிகுந்த ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருந்தேன். எதற்கெடுத்தாலும் பயம். நிதானமில்லாமல் அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தது மனம். அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் படபடப்பு. சில சமயம் அழைப்புகளை ஏற்காமல் கூட இருந்திருக்கிறேன்.…

  • “இந்து கோயிலை உடைத்துவிட்டார்கள் ; அழித்துவிட்டார்கள்” என்று என்றோ நடந்த தாக்குதல்களை நினைத்து இன்றைய இந்துத்துவர்கள் வேற்று மதத்தவரின் மீது பகைமையுணர்வு கொள்வதும் வெறுப்பு காட்டுவதும் தினம் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. உடைந்த கோயில்களை பார்க்கும் போது வருத்தம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அந்த அழிப்பு நடந்த வரலாற்று காலத்தில் வன்முறை வாழ்வின் அம்சமாக இருந்தது. நில விஸ்தரிப்பை மட்டுமே இலக்காகக் கொண்ட பேரரசர்களின் அணுகுமுறைக்கு நியாயம் கற்பிக்கப்பட்டு வந்தது. கைப்பற்றிய வேறு நாட்டின் பண்பாட்டுச் சின்னங்களை அழித்து…

  • அவர்களுக்கு ஒரு தெரிவு அளிக்கப்பட்டது – அரசர்கள் ஆகலாம் அல்லது அரசர்களுக்குச் செய்தி தெரிவிப்பவர்கள் ஆகலாம். குழந்தைகள் வழக்கமாகத் தேர்ந்தெடுப்பதைப் போல அவர்கள் அனைவரும் செய்திகள் சேகரித்து அவற்றைத் தெரிவிப்பவர்கள் ஆனார்கள். ஆகையால் இந்த உலகைச் சுற்றித் திரிந்தபடி – அரசர்கள் இல்லாது போனபின் – அர்த்தமிழந்து போன தகவல்களை மட்டும் ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக் கொள்ளும் செய்தி தெரிவிப்பாளர்கள் அவர்கள். இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று அவர்களுக்கு விருப்பந்தான் ; என்ன செய்ய? அவர்கள்…

  • அது புதிதாய் என் கண்ணில் பட்டது. வெற்றிடமாகத் தெரிந்த இடத்தின் மேல் எதுவோ பூசப்பட்டிருக்கிறது. ஒரு சில கணங்கள் என் புலனுக்கு உணவானது அந்த தோற்றம். அருகில் நின்றவரிடம் அது பற்றி கேட்டேன். அது ஒரு நிறம் என்றார். அதன் பெயர் நீலம் என்றார். பின்னொரு சமயம் அந்த தோற்றம் மீண்டும் என் கண் புலனின் கவனத்துக்கு வந்த போது அது நீலம் என்று சொன்ன நபர் முதலில் என் ஞாபகத்துக்கு வந்தார். இந்த நீல நிறத்தை…

  • வந்த நட்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது முதற்கண் எனது தவறு. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தில் வேலை பார்க்கும் பெண் அவர். உடன் உள்பெட்டிக்குள் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் விதவை. தன் குழந்தை அமெரிக்காவில் தன் பெற்றோருடன் இருக்கிறான் என்ற தகவல்களுடன் தொடங்கியது பரிமாற்றம். ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க பெண் ராணுவ வீரரின் வாழ்க்கை, அனுபவம் பற்றி அறியக் கிடைக்கும் என்ற எழுத்தாளனுக்கிருக்கும் க்யூரியாஸிட்டி என்னை உரையாடலில் ஈடுபட வைத்தது. இரு மாதங்களுக்கு முன்னர் அவர் நெருங்கிய…

  • “A person may be burst out laughing while being caned and dissolve into tears when hit by a merest flower! It is the feeling that causes these waves of emotion. Who does not have this experience?”

  • பாவங்கள் பல செய்துவிட்டு அவற்றை கரைக்க கங்கை நதி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை அணுகினார் நாரத முனி. விதவிதமாக அவன் பண்ணிய பாவங்கள் பற்றிய விவரங்கள் கேட்டு பதறிப்போனார். யாத்திரீகனோ அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ‘கங்கை நதி சென்று நீராடி என் பாவங்களைக் கழுவிக் கொள்வேன்: கவலைப் பட ஏதும் இல்லை’ என்று கூறினான் அவன். நாரதர் ஆகாய மார்க்கமாக விரைந்து கங்கா தேவி முன் சென்று நின்றார். ‘என்ன பதற்றம் முனிவரே? ஏன்…

  • தனிமனித வழிபாட்டை எதிர்க்கும் நவீனவாதி நான். ஆனாலும் இன்று ஒரு விஷயம் நடந்தது. சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் ஒருவர் உரையாற்றப்போகிறார் என்ற அந்த விளம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் பார்த்தோம். மனைவியும் இளையமகளும் செல்வதாக உடன் முடிவெடுத்தனர். எனக்கு இரண்டு மனமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் இல்லை. கடமையா ஆர்வமா எது முக்கியம் என்ற ஊசலாடலில் என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நேற்றிரவு ஒரு யோசனை தோன்றிற்று. வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதி பெற்றேன்.…

  • நன்றி : காலச்சுவடு

  • தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.

  • எல்லியின் காணாமல் போதல் ஒரு விபத்து எனில் அவள் யார் என்ற கேள்விக்கான பதில் நம்முடைய கற்பனையில் என்னவாக இருக்கும்? அது விபத்தில்லை ; பிரக்ஞை பூர்வ நிகழ்வு எனில் நம்முடைய கற்பனையில் எல்லி யார்?

  • டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் – சிறுகதை தொகுப்பிற்கு சொல்வனம் (2/12/2016) இதழில் ஒரு விரிவான விமர்சனக்கட்டுரையை எழுதியிருக்கிறார் நண்பர் கிரிதரன். இங்கிலாந்தில் தகவல் தொழில்நுட்பப் பணியில் இருக்கும் கிரிதரன் சொல்வனம் இணைய இதழ் தயாரிப்பில் தொடர்ந்து தன் பங்களிப்பை வழங்கிவருகிறார். பிரதிகளை எடிட் செய்வதில் அவரிடம் இருக்கும் தனித்திறமையை நானறிவேன். சில வருடம் முன்னர் சொல்வனத்தில் வெளிவந்த என்னுடைய ஓரிரு கதைகளின் வடிவம் குறித்து அவருடன் நிகழ்த்திய  கருத்துப்பரிமாற்றம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.…

  • பழக்கம் எனும் மகாசக்தி பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன். +++++ நட்பு நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து…

  • Taxi Driver மிகவும் கொண்டாடப்படும் ஸ்கார்ஸீசியின் படம் – Taxi Driver. பார்த்து முடித்த பின் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில்? மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில்,…

  •     எங்கிருந்தாய் இதுவரை? விடையற்ற வினாவின்   சுவாரஸ்யம் விரியும்      இது சரியா? விடை தேடும் பிரயத்தனம்   விடுதலே மிகச்சரி     எங்கு செல்கிறோம்? இலக்குகள் தொலைத்து   நிகழ்வுகள்  லயித்து   வினாக்களில் திளைக்கிறோம்   என்ன முடிவு? வினாக்குறி விலகி   வியப்புக்குறி விழுந்து   விடை  நிகழும்  

  • அரட்டை கச்சேரி முடிய நள்ளிரவானது முன்னறிவிப்பின்றி கொட்டியது மழை ஐந்து நிமிட நடைத் தொலைவில் வீடு ஸ்லிப்பர் தூக்கியிறைத்து தோற்றுவித்த நீரூற்று பின் வர வேகமாய் நடந்தேன் தலையை நனைத்த நீர் உதட்டில் பட்டு உப்புக்கரித்தது வீட்டை அடைந்து தலை துவட்டி வழிந்த துளிகளும் உப்புகரித்தன களைந்த சட்டையை பிழிகையில் உருவாகியதோர் அறைக் குட்டை அரட்டையில் வயது என்னவென்று கேட்ட நண்பரிடம் சொன்ன பொய்யின் எண்ணுரு வடிவில் உப்புக்கறையுடன் வற்றிப் போனதந்த குட்டை என் மூச்சிரைச்சல் நிற்கும்…

  • இபா தன்னுடைய வலைதளத்தில் என் சிறுகதை தொகுப்பு – “டைசுங் நகரில் புத்தர் கோயிலுக்கு” மதிப்புரை எழுதியிருக்கிறார். முதுபெரும் எழுத்தாளருக்கு என் நன்றிகள்.  என் கால்கள் தரையில் மேவாமல் சற்று அந்தரத்திலேயே நிற்கின்றன. டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்   டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்

  • பஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார் :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)