Category: Poems

  • அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார். —- லட்சியம் என்பது வெறுமைஅது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க…

  • கையில் ஒளிந்த சீட்டு, இதயங்களை உடைக்கும் ஒளிர்வு, கூடுதல் நேரத்தில் அடித்த கால்பந்திலக்கு, வஞ்சகனின் வெள்ளி நாவு, துறவியின் காலைப் பிரார்த்தனை, நிறுவனத் தலைவனின் கரும் லட்சியம், தாயின் கடுமையான அன்பு – இவ்வனைத்திலும் இருப்பவன் நானே! சிறப்பு என்பது என் சாயல் – தங்கத்தில் எழுதப்பட்டாலும் நிழலில் செதுக்கப்பட்டாலும் கோயில்களில் என்னைத் தேடுகிறாயா? கூர்ந்து பார்— ஒவ்வொரு பிரகாசமான விஷயத்தின் பின்னிருக்கும் பிரகாசம் வெற்றியாளரின் நெஞ்சில் நிறையும் வெற்றி இவ்வுலகையே வளைக்கும் எஃகுத் தீர்மானம் –…

  • வானொலி அலைகளினூடேபதின்பருவத்தில்என் பிரக்ஞையில் நுழைந்ததுமத்திய கிழக்கு ஏற்றுமதி வாடிக்கையாளனின்அலுவலகத்தில் சிறையுண்ட அனுபவம்ஏமனில் நிகழ்ந்தது வேலையிலிருந்து துரத்திஎன் வலிமையை சோதித்ததுஷார்ஜா ஒரு முறை பையில் நிறைந்திருந்ததிர்ஹம்களைமேஜையில் கொட்டிசரக்கு எப்போது வரும்என்று வினவிய ஜோர்டான் காரன்பலமுறை எனை அழைத்துஎன் வேலை குறித்து கேட்ட கரிசனம் கதார்க்காரனின்தாராள மனதை உணரக் கிடைத்ததுதம்மாம் செல்லும்பஹரைனின் கடற்பாலத்தில் கூடப்பயணஞ் செய்தகோழிக்கோட்டு பெண்ணொருத்திஅபுதாபிக்காரனை கைபிடித்தகதையைக் கேட்டதுஒமானிய விமானத்தில் என் முறை வந்தபோதும்என்னை கவனிக்காமல்ரஸ் அல் கெய்மாக்காரனைகவனித்துவிட்டுப் பின்னர்எந்த ஐஸ்க்ரீம் வேணும்என்று எதியோப்பிய விற்பனைப் பெண் கேட்டதுதுபாய்…

  • இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்). — மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றனகூண்டோ வலிமையானது! அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்துஅது முடக்கப்பட்டுள்ளது. – அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம்…

  • சின்ன வயதில்எதிர்காலத் தேடல்முது வயதில்பழங்காலத்தை நாடல் முன்னோக்கி ஓடும் இளமைபின்னோக்கித் தாவ முயன்றுநிகழ் காலத்தின் சுவரில் மோதிஊமைக்காயமுறும் முதுமை

  • சின்ன வயதில்எதிர்காலத் தேடல்முது வயதில்பழங்காலத்தை நாடல் முன்னோக்கி ஓடும் இளமை –பின்னோக்கித் தாவ முயன்றுநிகழ் காலத்தின் சுவரில் மோதிஊமைக்காயமுறும் முதுமை

  • பனி நூறுபனி ஆறு அவள் கூற்று நள்ளிரவில் முதுபனியில்உடல்தளர்ந்த பழுப்புக் கரடிகொல்லைக் கதவைத் தட்டுகிறதுமின் திரையில் தெரிகிறதுஉனக்காக இல்லை, கரடியேகூடத்தில் பரிமாறியிருக்கும்ஸ்ட்ராபெர்ரி பழக்கொத்துகாக்க வைத்தவன் இன்னும் வரவில்லைசிசிடிவி காமிராவருங்காலத்தைக் காட்டுவதில்லைஎப்போதுமேதிறக்கச் சந்தர்ப்பம் தராதஇந்த வாசற்கதவு எதற்காக? (பாடியவர்: ஸ்ரீவள்ளி) பனி நூறுபனி ஏழு தோழி கூற்று முந்தைய நாள் பெய்த பனிப் பொழிவில்குழந்தைகள் ஆடினர்பொம்மை செய்தனர்கை கால் உடலோடுயாரும் பார்க்காதபோதுஅது உயிர்த்திருக்க வேண்டும்இன்று இளம் வெயில்பாதிக் கை காணோம்பாதிக் கால் சரிந்துவிட்டதுஒரு பக்கம் காது இல்லைஅதன் முன்…

  • சோகம் நம்மைஆட்கொள்ளுகையில்நினைவுகளின், கவனத்தின்சின்ன சாகசங்களால்நாம் சில கணங்கட்குகாக்கப்படுகிறோம்:கனியின் சுவை, நீரின் சுவைகனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,லத்தின மொழிப் பாவகையின் சீர்,வீட்டைத் திறக்கும் சிறு சாவி,சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,வரைபடத்தின் நிறங்கள்,சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,மெருகேற்றிய நகம்,நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,நாம் எதிர்பார்க்காத உடல்வலி.எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றனபணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றனதொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.…

  • இந்தியா எனக்கு என்ன? – நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம் – சிறு குறை கொண்ட என் மகன்– தொடர் வெற்றி காணும் என் மகள் – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி – சாலையோர வாக்குவாதம் – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம் – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி – மேடு பள்ளங்களாலான…

  • ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மாஒரு பிச்சைக்காரனைப்போல்நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்அநாதியாய்சுதந்திரமாய் ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்சதுரங்கப்பலகையில்எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டுவட்டமிடுகின்றன அவை காதல் உனது மையமெனில்உன் விரல்களில் மோதிரமிடப்படும் அந்திப் பூச்சியினுள்ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது ஞானியொருவன்தூய இன்மையின்அழிக்கும் முனையைத் தொடுகிறான் குடிகாரனொருவன்சிறுநீர் கழிப்பதைபாவமன்னிப்பாகக் கருதுகிறான்பிரபுவே, என்னிடமிருந்துஅசுத்தங்களை எடுத்துவிடுங்கள் பிரபு பதிலளித்தார்முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்புரிந்துகொள்உனது சாவி வளைந்திருந்தால்பூட்டு திறக்காது நான் அமைதியானேன்அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்

  • பிரம்மாண்டம் ஜாக்கிரதை ஓ மனமே உன் இலட்சியங்களை விஞ்ச முடியாவிடில் தயக்கங்கலந்த முன்னெச்சரிக்கையுடன் அவற்றைப் பின்தொடர் முன்னகர்ந்து செல்லச்செல்ல மேலதிக விசாரணையும் கவனமும் உள்ளவனாய் நீ இருக்கவேண்டும் இறுதியில் ஜூலியஸ் சீஸரைப் போன்று உச்சியை அடையும்போதோ அத்தகைய புகழ்மிக்க மனிதனொருவனின் இடத்தை நீ பெறும்போதோ தமது பரிவாரங்கள் புடை சூழும் தலைவனைப் போன்று – தெருவில் செல்லும் சமயங்களில் அதிவிழிப்புடனிருத்தல் மிக அவசியம் சந்தர்ப்பவசமாக கும்பலிலிருந்து வெளிப்பட்டு கையில் கடிதத்துடன் அர்டெமிடோரஸ் உன்னை அணுகி "இக்கடிதத்தை உடனே…

  • 1 வரைபடத்தில் காண்கிறேன் வாழப்போகும் வீட்டை இடம், வீடு, எங்கு, எப்படி அனைத்தும் பிரக்ஞையில் கால ஓட்டம் பிரக்ஞையின் நகர்வு பிரக்ஞையை நகர்த்தி வீட்டுக்குள் வந்தடைந்தேன் அடுத்த இலக்கை அடைவதற்கு வரைபடத்தை காணவில்லை பிரக்ஞையை பின்னுக்கு நகர்த்தி தொடக்கத்துக்கு வந்தபோது பழுப்பேறி உளுத்துப்போன காகிதத்துண்டுகளே இரைந்து கிடந்தன. 2 கால இயந்திரத்தில் பயணித்தேன் வரைபடத்தை எடுக்க மறக்கவில்லை எதிர்காலத்தில் இருந்த வீட்டை அடைந்து உள்நுழையாமல் வரைபடத்தை மட்டும் சரிபார்த்தவாறு நின்றிருந்தேன். 3 வரைபடத்தை பறக்கவிட்டேன் வளைந்து வளைந்து…

  • கோயிலில் இருந்த மரம்    தனக்குள் கோயிலை அடக்கி வளர்கிறது    பாம்பென வேர்கள் படர்ந்து   இறுகின சன்னிதிகள் காலியான சந்நிதானத்துள் பிரதிஷ்டை கொள்ள வேண்டி ஓடின வேரின் கீழ் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் மரங்கள் கோயில்களுக்குள் புகுந்து கடவுளாகி மறைந்த பின்னர் சட்டகத்துள் வைத்து தொங்க விட  

  • தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு…. +++++ தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா? +++++ கல்லறையிலிருந்து எழுந்து வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும் இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும் நடுவழியில் சந்தித்துக் கொண்டன ஒன்றின் ஆவேசமும்…

  • சிறு தளிர்கள் உதிர்ந்து விழுந்தன மொட்டுகள் மூச்சுத் திணறி வாடிப்போயின வேர் வழி உருவிலா நஞ்சு பரவி மரம் தள்ளாடிற்று ஒரு மரம் அழித்து தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி அதி விரைவில் எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது கருத்தின் வடிவிலும் கொள்கையின் வடிவிலும் தீவிரம் என்னும் உடையணிந்து வாதம் எனும் மகுடியூதி மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.

  • ஏரி ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு ஏரி சலனமற்றிருக்கிறது சில நாட்களுக்கு முன் தயக்கமின்றி உன்னிடமிருந்து காலியான மதுக்கோப்பைகளை விட்டெறிந்திருந்தாய் அதில் மறுக்காமல் பெற்றுக்கொண்டது ஏரி பிறகொரு நாள் நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக் கழுவிச் சாம்பலையும் கரைத்தாய் நேற்றுகூடக் கசந்துபோன நம் உறவினை இகழ்ந்து எச்சில் துப்பினாய் தண்ணீரில் எந்தக் காலமொன்றில்லாமல் எல்லாக் காலங்களிலும் உன் கழிவுகளைக் கொட்டி உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய் இன்று இதில் எதையும் நினைவுறுத்தாது உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய் உன் அசுத்தங்களை அடித்துக்…

  • வான் வெளியைப் போர்த்தி பூமியில் இரவாக்கி சிறு சிறு துளைகளில் வெண்தாரகைகள் வைத்து உயிர்களுக்கு நித்ரை தருகிறாள் பறவைகளைப் பள்ளியெழுச்சி பாடவைத்து இருள் போக்குகிறாள் மகாமாயையை ஏவி யோகமாயை நடத்தும் அளவிலா விளையாட்டு இரவும் பகலும் அனவரதமும் +++++ ஒருமுறை நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி கருவொன்றை மாற்றி தன்னைப் புகுத்திக் கொண்டு சிசுவாய் வெளிப்பட்டு காற்றாய் மறைந்து அசரீரியாகி…… +++++ இன்னொரு முறை சுபத்திரையாகத் தோன்றி ஒற்றைப் பார்வையில் அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி சன்னியாச வேடமிடத் தூண்டி…

  • வளைந்தோடும் நதியின் கரையில் நீராடும் பார்த்தனின் இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம். வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய் அது பாதத்தை தீண்டிடவும் நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான். ஒளி ஊடுருவும் மாளிகையின் அறையில் விழித்தான் வெளியே நாற்புறமும் மீன்களும் நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன பார்த்தனின் முன் எரிகுண்டம் ; நெய்யிட்டு தீ வளர்த்தான். அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது அருகிருந்த பாம்பின் கண்களில் படர்ந்திருந்த இச்சைத்தீ. கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம் பாம்பு பெண் பாம்புப்பெண் தீச்சடங்கு முடியவும் “இது சாட்சி”…

  • அப்பா இருந்தார் அம்மா இருந்தாள் அண்ணன்மார் இருந்தனர் நானும் இருந்தேன்… இருந்தேனா? கண்ணாடியின் பிம்பத்திடமும் நிழற்பிரதிமையிடமும் பேசிக் காலங்கழித்திருந்தேன். தென்றலாய் நுழைந்த பிருகன்னளை என்னுள் ஆனந்தத்தை வீசினா….. விகுதிக் குழப்பங்கள் நெருடவில்லை! +++++ மிருதுவான கரங்கள் கடிவாளத்தை எவ்வாறு ஏந்தும்? அங்கம் அசைத்து அபிநயம் புரிபவனா குதிரையோட்டி? பிருகன்னளை ஆடவனாயிருக்கக்கூடுமா? பயந்தோடிய உத்தரகுமாரனுக்கு பதிலாக போரிட்டு கௌரவர்களை துரத்தினவன் அவனே தானா? சைராந்தரி சொல் கேட்டது பிழையோ? +++++ உத்திரையின் நித்திரையில் தோன்றிட்ட கனவுக்குள் அர்ஜூனனின் கைப்பற்றி…

  • அலையிலாக் கடலின் ஆழத்தில் ஜனனம்; நித்ய யுவதி வடிவம்; தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர் எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும் ஊர்வசிக்கு இது ஒரு புது அனுபவம். மானிடன் ஒருவனின் மறுதலிப்பு. அர்ஜுனன் அறைக்கு சென்று திரும்பியவள் கண்களில் ஏமாற்றம். கரை மீறும் நதியலை போல் வெகுண்டு வேகவேகமாய் அலங்காரத்தை கலைத்தாள். உடைகளைக் கழட்டத் தொடங்கியதும் கொஞ்சம் அமைதி. மார்புக்கச்சைகளை விலக்கியதும் மின்னலொளியில் ஒரு முறை பார்த்த மானிடன், புருரவஸ்-சின் நிர்வாண நினைவு. கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும். குரு…