Author: Ganesh Venkatraman

  • அந்தப் பத்திரிகை மேஜையின் மீது திறந்த நிலையில் கிடக்கிறது. நான் அதன் பக்கத்தைத் திருப்புகிறேன் — பிறகு நிறுத்துகிறேன். ஒரு முழுப் பக்க விளம்பரம் என்னை உற்றுப் பார்க்கிறது. ஒளிரும் முகத்துடனும் அமைதியுடனும் இருக்கும் அனா டி அர்மாஸ், ஒரு வைர நெக்லஸை அணிந்திருக்கிறார். அந்த ஆபரணம் அவரது கழுத்தெலும்பில் வளைந்து, மேம்படுத்தவே தேவையில்லாத அவரது அழகை மேலும் மெருகூட்டுகிறது. ஒரு கணம், நான் எதைப் பார்க்கிறேன் என்று எனக்கே உண்மையாகத் தெரியவில்லை — அந்த நடிகையையா,…

  • எழுத்தாளர் விவேக் ஷான்பாக் அவர்களை ஓர் இணைய இதழுக்காக பேட்டி எடுத்த போது காஷ்மீர எழுத்தாளர் Zahid Rafiq பற்றிய அறிமுகத்தை தந்தார். அந்த எழுத்தாளர் தந்த ஒரு பேட்டி இணையத்தில் வாசிக்க கிடைத்தது. அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அவர் தந்த பதிலும் – Q You live in Srinagar, Kashmir. Where is the literary heart of Srinagar? A Lost, I guess, but around, diffused, trying to…

  • When I got back from a business trip, something in my room felt… off. It wasn’t messy. In fact, it was a little too tidy. My pillow looked like someone had bothered to fluff it. A different brand of toothpaste had appeared beside the sink. A used razor, not mine, lay in the bin. I…

    The Flatmate
  • அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார். —- லட்சியம் என்பது வெறுமைஅது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க…

  • Long before she became Madonna Raj, before her name danced in stadium lights, she was Meenakshi, the girl who bit into orange candy, squinted at the sun, and whispered, “You know what this tastes like? Ice-fruit.”  “What’s that?”  “It’s not a real fruit,” she said. “It’s something cold… that melts in your mouth… and makes…

  • “பாரதியின் காளி” வாசித்து முடித்துவிட்டேன். பாரதிப் பித்தர்களும் பாரதி எதிர்ப்பாளர்களும் எதிர்முனைகளாக இருபுறம் குவிந்து நிற்கிறார்கள். “பாரதி போல் உண்டா” என்ற வழிபாட்டு மன நிலையில் உள்ளோர் ஒரு புறம். வைதிக வர்ணாசிரமக் கருத்துகளின் மறைமுக ஆதரவாளர் என்று வர்ணிப்போர் இன்னொரு புறம். நான் பெரும்பாலும் முந்தைய நிலையில் வளர்ந்தவன். பின்னர் அவருடைய சில போக்குகள் – கனகலிங்கத்துக்கு பூணுல் அணிவித்த நிகழ்வு குறித்த வரலாறு – என்னை சற்று அவரிடமிருந்து விலக வைத்தது. பாரதியின் கவிதைகள்…

  • கையில் ஒளிந்த சீட்டு, இதயங்களை உடைக்கும் ஒளிர்வு, கூடுதல் நேரத்தில் அடித்த கால்பந்திலக்கு, வஞ்சகனின் வெள்ளி நாவு, துறவியின் காலைப் பிரார்த்தனை, நிறுவனத் தலைவனின் கரும் லட்சியம், தாயின் கடுமையான அன்பு – இவ்வனைத்திலும் இருப்பவன் நானே! சிறப்பு என்பது என் சாயல் – தங்கத்தில் எழுதப்பட்டாலும் நிழலில் செதுக்கப்பட்டாலும் கோயில்களில் என்னைத் தேடுகிறாயா? கூர்ந்து பார்— ஒவ்வொரு பிரகாசமான விஷயத்தின் பின்னிருக்கும் பிரகாசம் வெற்றியாளரின் நெஞ்சில் நிறையும் வெற்றி இவ்வுலகையே வளைக்கும் எஃகுத் தீர்மானம் –…

  • சத்தம் அழியக்கூடிய பொருள் எனும் விவாதம் நிறைய பவுத்த நூல்களில் இடம் பெறுகின்றன …. சத்தம் அநித்தம் என்றல்பக்கம், பண்ணப் படுத லாலெனல்பக்கத் தன்ம வசனமாகும்… (மணிமேகலை, 29 : 68-71) திக்நாகர் சொல்கிறார் : “அநித்ய: ஸப்தைதி பக்ஷ வசனம் க்ருதகத்வாத்இதி பக்ஷதர்ம வசனம்” (ப்ரமாண சமுச்சய) கிட்டத்தட்ட மொழியாக்கம் செய்தவை போல தோன்றுகிறதல்லவா? சத்தம் நிரந்தர பொருளல்ல ; அழியக்கூடியது, ஏனெனில் அது யாராலோ எதனாலோ எழுப்பப் படுபவை. இந்த வாதத்துக்கு ஏன் இத்தனை…

  • ஏ ஐ 171 விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைத்து பிரயாணிகளும் விமானிகளும் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் செத்துப் போயினர். ஆனால் பகவத் கீதையின் பிரதியொன்று சற்றும் கருகாமல் தப்பித்தது. இது  சமூகஊடகங்களிலும் வாட்ஸப் உரையாடல்களிலும் பகிரப்பட்டது. துளி கூட பச்சாதாபமோ, சக-உணர்வோ இல்லாத மனிதர்கள்! இவர்களின் பக்திவுணர்வு போலியானது! “எனக்கு மட்டும் அருள்! வேறு யாருக்கும் அருளாதே!” என்று இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகமன்று. “உனக்கு தேங்காய் உடைக்கிறேன், எனக்கு செல்வத்தைக் கொடு, அதைக்கொடு, இதைக்கொடு”…

  • There was a time when I didn’t know the difference between popular taste and literary merit—nor did I need to. All I knew was that I was hooked. Every week, like clockwork, I would pick up the latest issue of Ananda Vikatan to read the next chapter of a serialised novel that had captured our…

  • Manju and I had always been different. She lived for romance, while I leaned towards stark reality. Her world was filled with the dreamy haze of movie love stories, whereas I preferred films that mirrored life as it was. “Isn’t romance a part of reality?” she would ask, teasingly. “Of course,” I would say, “but…

  • கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் முதலாம் சுலோகம் அர்ஜுனனின் கேள்வியிலிருந்து தொடங்குகிறது. எல்லோருக்கும் இருக்கும் சந்தேகந்தான் அர்ஜுனன் வழியாக வெளிப்படுகிறது. இருவகையான வழிபாடுகள் உள்ளன. முதல் வழி – உருவத்துடன் விளங்கும் ஈஸ்வரனின் வழிபாடு. அடுத்த வழி – சுத்தப்பிரம்மத்தின் வழிபாடு. எதை வணங்குவது சிறந்தது? விஷ்ணு என்ற பெயருடன் பாற்கடலில் துயின்று கையில் சங்கு, சக்கரம் ஏந்தியவரும் நீலமேனி உடைத்தவருமானவரைக் கும்பிடுவது சிறந்ததா? அழிக்க முடியாததும் கண்ணில் தென்படாததுமாய் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை வழிபடுவதா? எது சரியான…

  • நாவல் மீதான சட்டத் தடையை நீதி மன்றம் விலக்கிய பிறகு, The Satanic Verses என்ற சல்மான் ருஷ்டியின் மிகப் பெரும் சர்ச்சைக்குரிய நாவலை வாசிக்க நான் முடிவு செய்தேன். வாசிப்பு என்பது இங்கு இலக்கியரசனைக்காக மட்டுமல்ல. மாறாக, எழுத்துரிமைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைத்த ஒரு பெரிய எழுத்தாளருக்கு செலுத்தும் மரியாதையாகவும் இந்த வாசிப்பைச் செய்ய விரும்பினேன். ஆனால் வாசித்தபின் ஏற்பட்ட உணர்வு — மிகமிகச் சுமாரான ஒரு நாவல். பல இடங்களில், “இதை ஏன்…

  • Having started as a sales executive in an exports department of a SME, I do realise that I have come a long way. The career had its share of vicissitudes and highs. But it was full of dynamic changes. There was learning in every step of the way. I was sent to pick-up a visiting Taiwanese customer…

  • அந்தக் குவியலில் இருந்ததைநீ அறிந்திருக்கவில்லைஅது பிச்சைக்காரர்களைக் கொண்டிருப்பதாய்ஒரு பார்வையாளன் கண்டான்அவர்கள் தமது உள்ளங்கைகளின்வெற்றிடத்தை விற்கிறார்கள் பார்வையாளனுக்கு அவர்கள்அழுக்கு படிந்த தமது வாயை காண்பிக்கிறார்கள்;அவர்களைத் தின்று கொண்டிருக்கும் சொறிவகையை(அவனால் முடியக்கூடிய) பார்வைக்களிக்கிறார்கள் அவர்களின் திரிந்த பார்வையில்அவனின் அந்நிய முகம் கோணுகிறது;தங்களின் சேர்க்கையில் அவர்கள் மகிழ்கிறார்கள்,அவன் பேசுகையில் அவர்கள் உமிழ்கின்றனர். – Rainer Maria Rilke தமிழாக்கம் : அடியேன்

  • சாலையில் தனித்து அலைந்து திரியும்இந்தச் சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!தொழிற்கள் குறித்து கவலையின்றி,அவசரங்களைக் கண்டு பயப்படாமல் !அதன் தனிமப்பழுப்பு நிற உடையைத்தான்கடந்து செல்லும் இப்பிரபஞ்சமும் அணிந்துள்ளது.சூரியனைப் போல சுதந்திரமாக,இணைந்தோ அல்லது தனியே ஒளிர்ந்தோ,சாதாரண எளிமையில்முழுமையான ஆணையை நிறைவேற்றுகிறது எமிலி டிக்கின்ஸன்

  • வானொலி அலைகளினூடேபதின்பருவத்தில்என் பிரக்ஞையில் நுழைந்ததுமத்திய கிழக்கு ஏற்றுமதி வாடிக்கையாளனின்அலுவலகத்தில் சிறையுண்ட அனுபவம்ஏமனில் நிகழ்ந்தது வேலையிலிருந்து துரத்திஎன் வலிமையை சோதித்ததுஷார்ஜா ஒரு முறை பையில் நிறைந்திருந்ததிர்ஹம்களைமேஜையில் கொட்டிசரக்கு எப்போது வரும்என்று வினவிய ஜோர்டான் காரன்பலமுறை எனை அழைத்துஎன் வேலை குறித்து கேட்ட கரிசனம் கதார்க்காரனின்தாராள மனதை உணரக் கிடைத்ததுதம்மாம் செல்லும்பஹரைனின் கடற்பாலத்தில் கூடப்பயணஞ் செய்தகோழிக்கோட்டு பெண்ணொருத்திஅபுதாபிக்காரனை கைபிடித்தகதையைக் கேட்டதுஒமானிய விமானத்தில் என் முறை வந்தபோதும்என்னை கவனிக்காமல்ரஸ் அல் கெய்மாக்காரனைகவனித்துவிட்டுப் பின்னர்எந்த ஐஸ்க்ரீம் வேணும்என்று எதியோப்பிய விற்பனைப் பெண் கேட்டதுதுபாய்…

  • Naomi Shihab Nye – எனக்கு மிகப்பிடித்தமான கவிஞராகி வருகிறார். அவர் எழுதிய Blood கவிதையை மொழிபெயர்க்க விரும்பினேன். பாலஸ்தீனிய வம்சாவளியில் வந்த அமெரிக்கர் அவர். அமெரிக்கரா அரபியா என்ற அடையாளக் குழப்பம் அவருடைய கவிதைகளில் அடிக்கடி நிகழும் கருப்பொருள். Blood கவிதையிலும் இதே குழப்பம் தொடர்ந்தாலும், என்ன அடையாளம் கொண்டிருந்தாலும் “உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்” என்ற கடைசி வரியில் அடையாளத்தை தாண்டிய மனிதத்தை நோக்கி கவிதை பயணிக்கிறது. – குருதி “ஓர் அசல்…

  • நேற்று எழுதிய ரம்ஜான் போஸ்டைப் படித்த பிறகு நண்பர் நிஷா மன்சூர் தொலைபேசியில் அழைத்தார். நேற்று எழுதிய “காபா காக்கப்பட்டது” இடுகையில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது என்றார். இந்த விடுபடலின் காரணத்தால் போஸ்ட் சற்று எதிர்மறையாக தொனிப்பதாகச் சொன்னார். ஒரு முக்கியமான தகவலும் விட்டுப் போயிருந்தது. அப்ரஹா அழைத்துப் பேசும் மக்காவின் தலைவர் “முத்தலிப்” என்று இடுகையில் சொல்லியிருந்தேன். அப்துல்-முத்தலிப் இப்னு ஹாஷிம் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும், நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்தின் தாத்தாவாகவும் இருந்தார்.…

  • இப்னு கல்துன் (1332–1406) – னுடைய magnum opus என்று கருதப்படும் “முகாதிமா” நூலில் நாகரிகங்களின் (அதாவது வம்சங்களின், அரசுகளின், ஆட்சி அமைப்புகளின்) எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு சுழற்சி வரலாற்றுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கருத்துக்கள் இஸ்லாமிய இறையியலில், குறிப்பாக தெய்வீக விருப்பம், நீதி (‘adl’) மற்றும் உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை (dunya) ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றியிருந்தன. இப்னு கல்துனின் சுழற்சி வரலாற்றுக் கோட்பாடு நாகரீகங்கள் அவற்றின் தவிர்க்க முடியாத வீழ்ச்சிக்கு முன்…