
கோயிலில் இருந்த மரம்
தனக்குள் கோயிலை அடக்கி வளர்கிறது
பாம்பென வேர்கள் படர்ந்து
இறுகின சன்னிதிகள்
காலியான சந்நிதானத்துள்
பிரதிஷ்டை கொள்ள வேண்டி
ஓடின வேரின் கீழ் நின்று
புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்
மரங்கள் கோயில்களுக்குள் புகுந்து
கடவுளாகி மறைந்த பின்னர்
சட்டகத்துள் வைத்து தொங்க விட
Leave a reply to கோயில் மரம் – ரீ-மிக்ஸ் அல்லது ரீ-டன் – இலைகள், மலர்கள், மரங்கள் Cancel reply