வாயிற்காவலன் – 2

இளைப்பாறும் மனது
களித்திருந்தது.
உல்லாசமான கற்பனைகளில்
திளைத்திருந்தது.
புறவுலகில் வரப்போகும்
காட்சிகளாக சிலவற்றை
முன்னரே தன் கற்பனையில்
விரித்துரைத்து தனக்கே சொல்லிக்கொள்ளும்
விளையாட்டு அதற்கு
விருப்பமான விளையாட்டு.
முன்னறிவிப்பின்றி
மனதின் தட்பவெப்பம்
மாறியது
சிறு காற்றழுத்த
தாழ்வு மண்டலம்
சூள் கொண்டது.
அது பெரிதாகும் அபாயமிருந்தது.
கற்பனைக் காட்சிகள்
மோசமான நிகழ்வுகளுக்கு
மாறும் வகையில்
திரைக்கதை மாற்றத்துக்கு
உள்ளாகிக் கொண்டிருந்தன.
பயவுணர்ச்சி பரவி
நரம்புக் குழாய்களிலிருந்து
சில ரசாயன திரவங்கள்
சுரக்கத் துவங்கின.
காட்சிகளை உறையச் செய்யுமாறும்
எழுப்பும் ஒலிகளை நிறுத்துமாறும்
மனதுக்கு ஆணையிட்டேன்.
ஆழமாக சுவாசிக்குமாறு
மூளை கட்டளை பிறப்பித்தது.
சுவாசப்பைக்குள்
பதுங்கியிருந்து
மனதை தன் ஏவலுக்கு
ஆட்படுத்தி
அச்சவுணர்ச்சிகளை
உள்புகுத்தி
வேடிக்கை பார்த்த
பழைய சுவாசத்தை
துரத்தியனுப்பினேன்.
புது மூச்சு
உள் நிரப்பி
வெளியெடுத்து..
மீண்டும்
வேறு மூச்சை
உள் செலுத்தி
நுரையீரல் விழிப்புடன்
செயல்பட்டது.
சீரான
சுவாசத்தை கவனித்துக் கொண்டே
இதயத்தின்
மௌனமான துடிப்பை
கேட்டவாறிருந்தேன்.
அசைவற்று கிடந்த மனதிடம்
எண்ணங்களின் உற்பத்தியை
மீண்டும் துவக்கிக்கொள்ளலாம் என்றேன்.
மனதின் காட்சிகளும்
உரையாடல்களும்
தொடர்ந்தன.
என் கவனிப்பு தொடர்கிறது
மனவெளியில்
பயவுணர்ச்சியைக் கிளப்பும்
சிறு சலனங்கள்
எங்காவது உருவாகிறதா
என்று கவனித்துக் கொண்டிருக்கிறேன்

Comments

2 responses to “வாயிற்காவலன் – 2”

  1. […] வாயிற்காவலன் – 2 […]

Leave a reply to The Door Keeper 2 | இலைகள், மலர்கள், மரங்கள் Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.