வாசல்

சிற்றூரில்

வாழ்ந்திருந்த சிறுவயதில்

விடியற்காலம்

வாசற்படியில்

நான் படிக்கும் சத்தத்தோடு

விதவிதமான பறவைகளின்

சத்தங்களும் சேரும்

சேவலின் கூவல்

காகங்களின் கரைச்சல்

குருவி, மைனாக்கள், மற்றும்

பெயர் தெரியா பறவைகள்

வரும் பகலுக்காக

ஆயத்தமாகும் சத்தங்கள்

இப்போதெல்லாம்

விடியற்காலத்தை

சந்திப்பதேயில்லை

பறவைகளின்

சத்தமும் கேட்பதேயில்லை

வாசல் மட்டும் இருக்கிறது….

பக்கத்து ஃப்ளாட்டின்

செருப்புகள் சிதறி

One response to “வாசல்”

  1. 29.1.2012 அன்று “நவீன விருட்சம்” இணைய இதழில் பதிவானது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.