Tag: வாதம்

  • சத்தம் அழியக்கூடிய பொருள் எனும் விவாதம் நிறைய பவுத்த நூல்களில் இடம் பெறுகின்றன …. சத்தம் அநித்தம் என்றல்பக்கம், பண்ணப் படுத லாலெனல்பக்கத் தன்ம வசனமாகும்… (மணிமேகலை, 29 : 68-71) திக்நாகர் சொல்கிறார் : “அநித்ய: ஸப்தைதி பக்ஷ வசனம் க்ருதகத்வாத்இதி பக்ஷதர்ம வசனம்” (ப்ரமாண சமுச்சய) கிட்டத்தட்ட மொழியாக்கம் செய்தவை போல தோன்றுகிறதல்லவா? சத்தம் நிரந்தர பொருளல்ல ; அழியக்கூடியது, ஏனெனில் அது யாராலோ எதனாலோ எழுப்பப் படுபவை. இந்த வாதத்துக்கு ஏன் இத்தனை…

  • எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஒரு நேர்காணல் வாயிலாகத்தான் முதன்முதலாக இப்னு ருஷ்த் பற்றி நான் அறிந்தேன். எழுத்தாளர் சல்மான் ருஷ்டி சொன்னார் : “குடும்பப் பெயரை ருஷ்டி என்று மாற்றுமளவிற்கு எனது தந்தை இப்னு ருஷ்தின் தத்துவத்தை வெகுவாகப் போற்றினார். என் தந்தை ஏன் அவர் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்பதை நான் பின்னர் உணர்ந்தேன். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள் நம்பமுடியாத அளவிற்கு நவீனமயமாக்கும் குரலாக இருந்தார் ருஷ்த்” அவெரோஸ் என்றும் அழைக்கப்படும் இப்னு ருஷ்த், இடைக்கால…

  • சிறு தளிர்கள் உதிர்ந்து விழுந்தன மொட்டுகள் மூச்சுத் திணறி வாடிப்போயின வேர் வழி உருவிலா நஞ்சு பரவி மரம் தள்ளாடிற்று ஒரு மரம் அழித்து தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி அதி விரைவில் எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது கருத்தின் வடிவிலும் கொள்கையின் வடிவிலும் தீவிரம் என்னும் உடையணிந்து வாதம் எனும் மகுடியூதி மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.