Tag: மையம்

  • தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – ஈரானிய நாவல் குறித்து

    தெஹ்ரானில் ஒரு உயரமான கட்டிடம். மிகவும் வேறுபட்ட சமூக நிலைமைகள், மத அல்லது மத சார்பற்ற நோக்குநிலைகள், தார்மீக அல்லது ஒழுக்கக்கேடான நடத்தைகளை பிரதிபலிக்கும் அண்டை வீட்டார். பழமைவாத குடும்பங்கள், மூர்க்கத்தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட இளைஞர்கள் (மது, போதைப்பொருள், தேவையற்ற டீனேஜ் கர்ப்பம்), தொழில்முறை குற்றவாளிகள், ஏன் ஒரு செக்ஸ் வொர்க்கர் கூட – எல்லாம் கலப்பு, எல்லாம் முரண், எல்லாம் புதிர்.

    ரேடியோவில் மதச் சொற்பொழிவு ஒலிபரப்பை கேட்டுக்கொண்டே கொடூரமான கொலையைச் செய்கிறார்கள் குற்றவாளிகள். அந்தச் சொற்பொழிவில் வரும் மேற்கோள் – “தொழுநோயாளியின் கையில் பன்றி எலும்பு” – மனித இருப்பின் பரிதாபகரமான தன்மையின் வரையறை – ஷியா இஸ்லாமின் புனித இமாம்களில் ஒருவர் தந்தது. செக்ஸ் வொர்க்கர் நம்பிக்கையின்றி காதலிக்கிறாள். படித்த தாய் மூடநம்பிக்கை மற்றும் அதிசய சிகிச்சையின் மூலம் நோய்வாய்ப்பட்ட குழந்தை நலம்பெற ஆசைப்படுகிறாள். மிதமிஞ்சிய பணம் புரளும் குற்றவுலகம், அதில் ஊழலும் கலந்துள்ளது. பின்னணியில், சத்தமில்லாத, மிகவும் மாசுபட்ட பெருநகரத்தின் இடைவிடாத ஓசை. ஈரான் அதன் அனைத்து முரண்பாடுகளிலும் சிக்கலான தன்மையிலும், அங்கு வாழ்ந்த அனைவருக்கும் சாட்சியமளிக்கிறது. எனினும், இறுதி முடிவு விரக்தி தருவதல்ல. ஆனால் மனித பலவீனங்களை இரக்கத்துடன் நோக்குவது.

    மையத்தன்மையற்ற கதை சொல்லல். ஒரு திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் போல எழுதப்பட்டுள்ள நாவல். ஒரு காட்சிப் பொருளாய் ஒரு புறநகர்ச் சமூகத்தின் சித்திரிப்பு. நூறு பக்கம் மட்டுமே. இரண்டாயிரங்களின் முக்கிய ஈரானிய எழுத்தாளராக மொஸ்தஃபா மஸ்தூரை நிலை நிறுத்திய படைப்பு.

    நிச்சயமாக ஈரான் எனும் தேசம் சாடர்கள் (Chador) /அயத்துல்லாக்கள் நிரம்பிய தேசம் மட்டுமல்ல, அதே நேரம் இளம் ட்வீட்டர்கள் மற்றும் மேற்கத்திய சார்பு மதச்சார்பின்மைவாதிகள் மட்டுமே நிரம்பிய தேசமுமல்ல.

    அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் அல்லது பத்திரிகையாளர்களை விட அதிகம் உண்மையைச் சொல்ல முனைபவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள். அவர்களைக் கேட்போம். மொஸ்தஃபா மஸ்தூர் ஈரானைப் பற்றிச் சொல்வதைக் கேட்போம்.

    தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – மொஸ்தஃபா மஸ்தூர்
    தமிழில் – பீ எம் எம் இர்ஃபான்
    சீர்மை பதிப்பக வெளியீடு

  • தெய்வீக அன்பே இஸ்லாத்தின் மையம்

    Subscribe to continue reading

    Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.

  • ஞானியும் குடிகாரனும் – ரூமி

    ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்
    மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மா
    ஒரு பிச்சைக்காரனைப்போல்
    நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்
    அநாதியாய்
    சுதந்திரமாய்

    ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்
    சதுரங்கப்பலகையில்
    எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டு
    வட்டமிடுகின்றன அவை

    காதல் உனது மையமெனில்
    உன் விரல்களில் மோதிரமிடப்படும்

    அந்திப் பூச்சியினுள்
    ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது

    ஞானியொருவன்
    தூய இன்மையின்
    அழிக்கும் முனையைத் தொடுகிறான்

    குடிகாரனொருவன்
    சிறுநீர் கழிப்பதை
    பாவமன்னிப்பாகக் கருதுகிறான்
    பிரபுவே, என்னிடமிருந்து
    அசுத்தங்களை எடுத்துவிடுங்கள்

    பிரபு பதிலளித்தார்
    முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்
    புரிந்துகொள்
    உனது சாவி வளைந்திருந்தால்
    பூட்டு திறக்காது

    நான் அமைதியானேன்
    அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்
    எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்