Tag: புள்ளி
-
அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார். —- லட்சியம் என்பது வெறுமைஅது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க…
-
“சொற்ஜாலங்கள் கவிதை இல்லை கடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை புதிர்கள் கவிதை இல்லை பிரகடனங்கள் கவிதை இல்லை முழக்கங்கள் கவிதை இல்லை பிரச்சாரங்கள் கவிதை இல்லை வசனங்கள் கவிதை இல்லை” எழுதிய எல்லாவற்றையும் கிழித்துப் போட்டு விட்டு வெண் தாளொன்றை எடுத்து தயாராக வைத்துக்கொண்டு ”எது கவிதை இல்லை என்பது புரிந்தது; ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?” என்று கேட்ட போது மௌனமே பதிலாய்க் கிடைத்தது. வெண் தாளில் ஒரு கறுப்பு புள்ளி மட்டும்…