Tag: பிரகாசம்

  • புனித முரண்பாடு

    கையில் ஒளிந்த சீட்டு,
    இதயங்களை உடைக்கும் ஒளிர்வு,
    கூடுதல் நேரத்தில் அடித்த கால்பந்திலக்கு,
    வஞ்சகனின் வெள்ளி நாவு,
    துறவியின் காலைப் பிரார்த்தனை,
    நிறுவனத் தலைவனின் கரும் லட்சியம்,
    தாயின் கடுமையான அன்பு –
    இவ்வனைத்திலும் இருப்பவன் நானே!
    சிறப்பு என்பது என் சாயல் –
    தங்கத்தில் எழுதப்பட்டாலும்
    நிழலில் செதுக்கப்பட்டாலும்

    கோயில்களில் என்னைத் தேடுகிறாயா? கூர்ந்து பார்—
    ஒவ்வொரு பிரகாசமான விஷயத்தின் பின்னிருக்கும் பிரகாசம்
    வெற்றியாளரின் நெஞ்சில் நிறையும் வெற்றி
    இவ்வுலகையே வளைக்கும் எஃகுத் தீர்மானம் – அனைத்தும் நானே

    ஊழல் என நீ அழைப்பதிலும்,
    பிரகாசமாய் எரியும் என் சக்தி.
    திசையைத் தேர்வது – உள்ளது உன்னிடம்

    (கீதையின் பத்தாம் அத்தியாயத்தில் வரும் முப்பத்தியாறாம் செய்யுளை வாசித்தவுடன்)