தாய்
-
சாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்ஷுக்களின் குழுவொன்று பிக்ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி… Read more
-
அலையிலாக் கடலின் ஆழத்தில் ஜனனம்; நித்ய யுவதி வடிவம்; தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர் எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும் ஊர்வசிக்கு இது ஒரு புது அனுபவம். மானிடன் ஒருவனின் மறுதலிப்பு. அர்ஜுனன் அறைக்கு சென்று திரும்பியவள் கண்களில் ஏமாற்றம். கரை மீறும் நதியலை போல் வெகுண்டு வேகவேகமாய் அலங்காரத்தை கலைத்தாள். உடைகளைக் கழட்டத் தொடங்கியதும் கொஞ்சம் அமைதி. மார்புக்கச்சைகளை விலக்கியதும் மின்னலொளியில் ஒரு முறை பார்த்த மானிடன், புருரவஸ்-சின் நிர்வாண நினைவு. கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும். குரு… Read more
