அமைதி
-
அமைதியுடன் அவர்கள் நடக்கிறார்கள். தங்கள் இருப்பையும் தங்கள் நோக்கத்தையும் தவிர வேறு எதையும் அவர்கள் சுமப்பதில்லை. அமெரிக்கா முழுவதும் அவர்கள் பயணம் செய்கிறார்கள். வார்த்தைகள் தேவையில்லாத அமைதியின் வலிமை, அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் வெளிப்படுகிறது. அங்கே ஒரு நாய். மகிழ்ச்சியான ஆன்மா—அலோகா; அதன் பொருள் ‘ஒளி’. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இவர்களை அது தேர்ந்தெடுத்தது. ஒருமுறை தேர்ந்தெடுத்த பின், அவர்களை விட்டு விலக அது மறுத்தது. அசைக்க முடியாத விசுவாசத்துடன், இன்று வரை அவர்களோடு… Read more
-
அந்தப் பத்திரிகை மேஜையின் மீது திறந்த நிலையில் கிடக்கிறது. நான் அதன் பக்கத்தைத் திருப்புகிறேன் — பிறகு நிறுத்துகிறேன். ஒரு முழுப் பக்க விளம்பரம் என்னை உற்றுப் பார்க்கிறது. ஒளிரும் முகத்துடனும் அமைதியுடனும் இருக்கும் அனா டி அர்மாஸ், ஒரு வைர நெக்லஸை அணிந்திருக்கிறார். அந்த ஆபரணம் அவரது கழுத்தெலும்பில் வளைந்து, மேம்படுத்தவே தேவையில்லாத அவரது அழகை மேலும் மெருகூட்டுகிறது. ஒரு கணம், நான் எதைப் பார்க்கிறேன் என்று எனக்கே உண்மையாகத் தெரியவில்லை — அந்த நடிகையையா,… Read more
-
இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்). — மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றனகூண்டோ வலிமையானது! அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்துஅது முடக்கப்பட்டுள்ளது. – அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம்… Read more
-
சமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால… Read more
-
வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும். உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை… Read more
