Category: Uncategorized

  • சக்கரவாளம் – துளிகள்

    இந்த வலைப்பக்கத்தில் பதிவான பௌத்தக் கட்டுரைகள் – சக்கரவாளம் – எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவரவிருக்கிறது. காலச்சுவடு நிறுவனம் பதிப்பிக்கிறது.


    பௌத்த நெறிமுறை மூல நூல்களில் – பாலி ஆகமங்களாக இருந்தாலும் சரி சம்ஸ்கிருத சூத்திர வகைமை நூல்களாக இருந்தாலும் சரி – அவற்றுக்கு நடுவே ததாகதரின் அகக்குரலின் மொழி அவ்வப்போது வரும். அந்த அகக்குரலின் மொழியை வாசிக்கும் போதெல்லாம் அவருடைய சிந்தனைக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரமை வருவது எனக்கு மட்டுமா எனத் தெரியவில்லை.

    மாகண்டிகர் சொல்வதைக் கேட்ட பகவான் சற்று யோசிக்கிறார். “ம்..இந்தப் பெண் அனுபமாவைப் பற்றி அன்பான வார்த்தைகளால் நான் பேசினால் காமத்தில் வியர்த்து விறுவிறுத்து இவள் இறந்துவிடக் கூடும். இவளைப் பற்றி கடுமையான வார்த்தைகளில் பேசிவிடுகிறேன்” பிறகு மாகண்டிகரை நோக்கி ததாகதர் பேசத் தொடங்கினார்.
    “பிராமணரே, மாரனின் புதல்விகளை சந்திக்கும் போதே நான் வேட்கை கொள்ளவில்லை. காமுறவில்லை. புலனின்பங்களில் சற்றும் விருப்பமில்லாதவன் நான். எனவே இந்தப் பெண்ணை கையால் தொடுவதை விடுங்கள், சிறுநீரும் மலமும் நிரம்பிய இவளின் உடலை என் பாதத்தால் கூடத் தொட முடியாது”
    (எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “நம் மகளை காதலிக்கப்போகும் கணவன் இவரல்ல”)

    அம்பத்தனுடன் வந்திருந்த மாணவர் குழு அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது ; ஆரவாரத்துடன் சத்தமெழுப்பியது. ஒரு மாணவன் எழுந்திருந்து ஆத்திரத்துடன் அம்பத்தனிடம் பேசினான். “இந்த அம்பத்தன் இழிகுலத்தில் பிறந்தவன் ; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனல்லன். சாக்கியர்களின் அடிமைப் பெண்ணின் வழி கிளம்பிய குடும்பக் கோட்டின் வழி உதித்தவன் ; சாக்கியர்கள் அம்பத்தனின் எஜமானர்கள். இவனை நம்பி நாம் குரு கோதமரை அவமதித்தோம்”
    புத்தர் அமைதியாக இருந்தார் ; அவர் மனதில் “இந்த இளைஞர்கள் அம்பத்தனைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார்கள் ; அம்பத்தனை இதிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டும்” என்று நினைத்தார்.
    (எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “அகந்தை அழிதல் 2”)
    ++++
    ஜாதகக் கதைகள் வியப்பூட்டும் இலக்கியம். சக்கரவாளம் நூலில் நான்கு ஜாதகக் கதைகள் வருகின்றன. எந்தெந்த கதைகளை நூலில் இணைப்பதற்கு எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் எனக்கு ஏற்படவில்லை. விலங்குகள் அல்லது மீன்கள் அல்லது பறவைகள் – இவை முக்கியப்பாத்திரமாக உள்ள கதைகளையே சக்கரவாளம் நூலில் சேர்ப்பது என்பதில் தெளிவாக இருந்தேன். மச்ச ஜாதகம், மகாசுக ஜாதகம், மகாகபி ஜாதகம் மற்றும் ஜவசகுன ஜாதகம் – இந்த நான்கு கதைகள் சக்கரவாளத்தில் வருகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ள சில மிருகங்கள் தோன்றும் கதைகளை ஈசாப்புக் கதைகளில் இணைத்திருக்கிறார்கள் என்ற சேதி ஜவசகுன ஜாதகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோதுதான் எனக்கு தெரிய வந்தது.
    +++++
    ஜாதகக்கதைகள் மற்றும் அவதான வகைமை கதைகள் – பௌத்தத்தின் மூல நூல்களின் வரிசையில் உள்ள இரண்டு வகை கதை நூல்களுக்கும் இடையில் இருக்கும் நுட்பமான வேறுபாடு – தேரவாத மற்றும் மகாயான அணுகுமுறைகளின் மாறுபாட்டை நிகழ்த்திக் காட்டுகிறது.
    ++++
    பத்தொன்பதாம் நூற்றாண்டின் பௌத்த அறிஞர் J S Speyer இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். புத்தர் எனும் சிறப்பான ஒரு நாயகரின் முற்பிறவிகளில் போதிசத்துவராக அவர் செய்த தியாகங்களின் கதைகளை ஜாதகக் கதைகள் பதிவு செய்கின்றன. பசித்த புலிக்கு தன்னுடலை உணவாக கொடுக்கிறார்; பிச்சையெடுக்கும் பிராமணருக்கு தன் மனைவியையும் குழந்தைகளையும் கொடுத்து விடுகிறார்; தன் இனக்குரங்குகளை காக்க தன் உயிரை விடும் குரங்காகிறார். இது போல எத்தனையோ தியாகங்கள். இதை வாசித்த சாதாரண மக்களிடம் இத்தகைய தியாகச் செயல்கள் புத்தர் போன்ற ஆளுமைகளால் மட்டுமே சாத்தியம் என்பதான புரிதல் நிலவியிருக்கலாம். புத்தர் செய்த தியாகங்கள் சாதாரண மக்களாலும் செய்யப்படக்கூடும் என்பதான தெளிவை ஏற்படுத்தும் இலக்குடன் திவ்யாவதான இலக்கியம் படைக்கப்பட்டிருக்கலாம். அவதான இலக்கியத்தில் ஒரு போதிசத்துவர் தான் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த புனிதரும் அவதானக் கதையின் நாயகராயிருக்கலாம்.”
    (எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “நம் மகளை காதலிக்கப்போகும் கணவன் இவரல்ல”)
    ++++
    மிலரேபாவின் கவிதைகள் திபெத்திய பண்பாட்டின் சொத்து. யோகி – கவிஞரான மிலரேபாவின் வாழ்க்கைக் கதை ஒரு மந்திர யதார்த்தக் கதை போல. மிலரேபாவின் வாழ்க்கைக் குறிப்போடு சேர்த்து இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்து சக்கரவாளத்தில் சேர்த்திருக்கிறேன். அவரின் நூற்றுக்கணக்கான பாடல் – கவிதைகளில் இரண்டை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது என ஒரே குழப்பம். கடைசியில் random – ஆக இரண்டு கவிதைகளை எடுத்துக் கொண்டேன். ஒரு விமானப் பயணத்தில் விமானம் வேறொரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது அந்த இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்தேன் என்பது இன்னொரு சுவாரஸ்யம்!
    ++++
    வயதான ஆண்களுக்கு தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள் பட்டுப்போகும் மரங்கள்
    வளரும் இளைஞர்க்கு தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள் நுகத்தடி பூட்டிய காளைகள்
    இளம் கன்னியர்க்கு தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள்அலங்கரிக்கப்பட்ட பசுக்கள்
    எல்லா இளைஞர்க்கும் தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள் மூடிய அரும்புகள்
    அனைத்து குழந்தைகட்கும் தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள் பேய் பிடித்த கொள்ளைக்காரர்கள்
    தர்மமின்றி செய்யபடுபவை அனைத்தும்
    அர்த்தமும் குறிக்கோளுமற்றவை
    அர்த்தத்துடன் வாழ நினைப்போர்
    புத்த தர்மத்தை பின்பற்ற வேண்டும்
    (எனது சக்கரவாளம் நூலிலிருந்து – ‘மிலரேபா’)
    ++++
    பயணக்கட்டுரை ஒன்றை சேர்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஏனோ, கை கூடவில்லை! கட்டுரைகளுக்கு நடுவே பயணங்கள் பற்றிய சிறு குறிப்பு ஆங்காங்கே வரும், ஆனால் அவற்றை விரித்து எழுதவில்லை. சக்கரவாளத்தில் வரும் பௌத்த சிறப்பிடங்கள் – லடாக், சாரநாத், அயுத்தயா (தாய்லாந்து), போரோபுதூர் (இந்தோனேசியா),
    ++++
    கட்டுரைநூலை vet-செய்த நண்பர் கல்யாணராமன் பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். அவர் சொன்ன பெரும்பான்மையான ஆலோசனைகளை ஏற்று உரிய திருத்தங்களைச் செய்த பிறகு இன்னும் முழுமையாக இந்த நூல் வாசகரைச் சென்றடையும் என்ற உணர்வு ஏற்பட்டது.
    “நூலில் மகாயானம் உயர்ந்து ஒலிக்கிறதே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் கல்யாணராமன். “அப்படியில்லை ; தத்துவப் பிரிவுகளைத் தாண்டிய பௌத்தத்தின் ஒருமைப்பார்வையை விரித்துரைப்பது தான் நூலின் நோக்கம்” என்று அடித்துச் சொன்னேன்.
    ++++
    பிக்குகள் பணத்தைக் கையாளலாமா? என்பது பௌத்த சமூகங்களில் காலந்தோறும் இருந்து வரும் கேள்வி. இதற்கு மகாயான பௌத்தம் பின்பற்றப்படும் வடக்கு பௌத்த நாடுகளில் அளிக்கப்படும் வழக்கமான பதில் – தேரவாதம் எனப்படும் தெற்கு பௌத்தத்தில் தான் பிக்குகள் பணத்தைத் தொடக்கூடாது ; மகாயானத்தில் அப்படியில்லை; பிரயாணத்துக்குத் தேவையான பணத்தை மகாயான பிக்குகள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் – என்பது. பெய்ஜிங் நகரில் கட்டிட நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் சாம் லீ என்பவர் நடிகை செய்தது தவறு என்கிறார். அவரின் கருத்துப்படி தெற்கு பௌத்தத்தின் நியமங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வடக்கு பௌத்தத்தில் திணிக்கப்படக்கூடாது.
    முன்னாள் நடிகை தான் செய்தது சரியென்பதில் மிக உறுதியாய் இருக்கிறார்.
    “முக்தி நிலையை அடைய, பௌத்த சாதகர்கள் ஞானம், கருணை– இவ்விரண்டையும் கொண்டிருத்தலோடு பிரிவினை இதயம் இல்லாதவராய் இருத்தலும் அவசியம். உட்பிரிவுகள் இல்லாத மூல பௌத்தத்தை மீட்டெடுத்தலே எனது லட்சியம்” என்று முழங்குகிறார்.
    (சக்கரவாளம் நூலிலிருந்து….”செய்திகளில் பௌத்தம்)

  • Nuclear travels

    Been avoiding the mini series Chernobyl despite very good reviews. Didn’t have the heart to watch it for no specific reasons. My daughters persuaded me to watch it and I succumbed.

    I have a faint memory of hearing about Chernobyl accident through radio news when I was waiting for my results of 12th standard board exams. The scale and details of the accident and its global impact are the subjects of this mini-series.

    I am introduced to a host of terms when watching the series. The melt down, Void positive coefficient, The Core, Light water coolants, U235, radioactive contaminants, water hammer, etc., Not that I would comprehend fully what I would be reading about these terms. But the series was effective, apart from the awareness it creates about the dangers and risks associated with the nuclear energy, in giving a bird’s eye view on how nuclear reactors work. For me, a science-ignorant person, there will be enough of seeking in the coming days.

    Years ago (in 1989) I had met a stranger on a bus journey from Madurai to Nagercoil. He was travelling from his new work place Kalpakkam to Liquid Propulsions System centre in Mahendragiri. I remember him talking about nuclear energy in detail and explaining by way of diagrams etc. Subsequently I was exchanging letters with him for a year or so. Now I don’t even remember the name of the stranger.

    Interestingly years later, I met a technician (of Tamil origin) who was working for a Nuclear Power Plant near Dortmund, Germany. The chance meeting happened with that gentleman on a flight journey from Frankfurt to Mumbai way back in 1997. I tried to enter into a conversation with him too about nuclear energy ; this time too, my inane questions were answered patiently and with smile.

    There was another travel experience related to the second major accident in a nuclear power plant, only the second incident of the melt down. I was travelling in Japan until 9th march 2011 for a week. On 11th March the Fukushima Daiichi accident happened. Unlike Chernobyl, this time there has been no human error. Nature by way of tsunami had a role in this accident.

  • மன நல விழிப்புணர்வு வாரம்

    Clinical Depression-ஐ வெறும் துக்கம் என்று கற்பிதம் செய்து கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருக்கையில் ஒரு நாள் சற்றே முயன்று என்னை நானே கவனித்துக்கொண்டு எழுத முயன்ற போது…


    என்னுள்ளில் நிகழும் உரையாடல்கள்
    இரைச்சலாக ஒலிக்கின்றன
    காதுகளை அடைத்துக் கொண்டாலும்
    இரைச்சல் அடங்குவதில்லை

    என்னைத் துரத்தும்
    நிழல்களிலிருந்து
    தப்பியோட முடிவதில்லை

    விடியலை தவிர்க்க
    தூங்காமல் இருத்தலும்
    விடிந்த பின்
    போர்வைக்குள் ஒளிந்து கிடப்பதுமாய்
    என் தினங்கள் நகர்கின்றன

    உண்மையில்
    தினங்கள் நகர்கின்றனவா

    துக்கம் என்றால்
    அழுது அதனைத் துரத்திவிடலாம்
    ஆனால் இது துக்கமன்று

    தினசரி காரியங்களில்
    ஈடுபடுதலை விட
    சிறைவாசம் மகிழ்ச்சி தருமோ!
    வீட்டில் ஒடுங்கிக் கிடத்தலில்
    உணரும் சுக பாவனையை
    எப்படி விவரிப்பது?
    ஆனால் வரும் நாட்களின்
    பயந்தோய்ந்த கற்பனைச் சித்திரங்கள்
    தோற்றுவித்தவாரிருக்கும் மிரட்சி
    முடிவதாகத் தெரியவில்லை

    யாரோ என்னை ஏமாற்றுகிறார்கள்
    என்று எண்ணவைத்தவாறே
    என் உடல் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது


     

    உதவியை நாடுதல் பலவீனமில்லை ; இத்தனை நாட்கள் பலத்துடன் இருந்ததற்கான அத்தாட்சி. மன நலத்தை பேணுவோம்.

    மே 13-19 – மன நல விழிப்புணர்வு வாரம்

  • ரோமா

    சர்வாதிகாரத்துக்கும் ஜன நாயகத்துக்கும் இடையிலான ஊசலாட்டம் மெக்ஸிகோவின் வரலாற்றில் பன்னெடுங்காலம், கிட்டத்தட்ட எண்பது வருட காலம் நீடித்தது. சுதந்திரம் வெறும் சாளர அலங்காரங்களாக நகரங்களில் ஒரு பாவனையாக பேணப்பட்டு கிராமப்புறங்களில் அரசு வன்முறை உயிர்களை குடித்துக் கொண்டிருந்தது. அரசாங்கத்துக்கெதிரான கருத்துகள் சகித்துக் கொள்ளப்படவில்லை. பத்திரிக்கை சுதந்திரம் ஒரு வெற்று பாவ்லாவாக நடைமுறையில் இருந்தது. நிலங்களை பங்கிட்டுத் தருகிறோம் என்ற வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு கிராமப்புற மக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருந்த சர்வாதிகார அரசுகள் நகரங்களில் மட்டும் ஒரு பொய்யான அமைதியைப் பேணின. 1968முதல் 71 வரை மக்களின் அதிருப்தி நகரங்களையும் எட்டின. மாணவர்களும் இளைஞர்களும் அணி திரண்டு நடத்திய அமைதிப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்றது அரசு. எண்ணற்றோர் காணாமல் போயினர். நூற்றுக் கணக்கானோர் சுட்டுத் தள்ளப்ப்ட்டனர். மெக்ஸிகன் திரைப்படம் ரோமாவில் இத்தகைய ஒரு மக்கள் போராட்டத்தை அரசு ராணுவத்தை ஏவி அடக்கிய காட்சி வரும்.

    நாடக காட்சியின் திரைச்சீலையாக பின்னணியில் வரலாற்று நிகழ்வுகள் தொங்கிக் கொண்டிருக்க – காதலனால் கருவுற்று பின்னர் அவனால் கைவிடப்பட்டு அந்த குழந்தையை சுமக்கும் ஒரு வேலைக்காரி, அவள் வேலை பார்க்கும் செல்வச் செழிப்பு மிக்க ஒரு குடும்பம் – அந்த குடும்பமும் ஓர் அதிர்வை சந்தித்துக் கொண்டிருக்கிறது ; குடும்பத் தலைவர் குடும்பத்தை கைவிட்டுச் சென்று விடுகிறார் – வேலைக்காரியும் அவள் வேலை பார்க்கும் குடும்பமும் தத்தம் பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டார்கள்? மாற்றங்களை எப்படி கடக்கிறார்கள்? – இதுதான் ரோமாவின் கரு.

    எழுத்தாளர் பாப்ஸி சித்வா ice-candy man நாவலில் இந்தியப் பிரிவினையின் பின்னணியில் ஒரு பணக்கார வீட்டு ஆயாவின் வாழ்வில் நிகழ்ந்தவற்றை அந்தப் பணக்கார வீட்டுக் குழந்தையின் பார்வையில் சித்தரித்திருப்பார். கிட்டத்தட்ட அதே பாணியில் ரோமா கதை செல்கிறது. ஆனால் ஆயாவின் பார்வையில்.

    மெக்ஸிகோ நகரில் மக்களின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டு (Corpus Christi Massacre) நிகழ்வு, கிராமப்புறங்களில் பறிக்கப்பட்ட நிலங்களின் மரங்கள் தீயூட்டப்படுதல், சர்வாதிகார அரசின் நிலப் பங்கிட்டு முயற்சிகள் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகள் என்பன போன்ற சமூக அமைதியின்மையின் பின்னணியில் நகரும் தினசரி வாழ்க்கையை ரோமா படம் பிடிக்கிறது. சமூகத்தின் அடிப்படையான குடும்பம் என்னும் அலகை ஒன்றுபடுத்தும் வலுவான பெண்களின் கதையையும் ரோமா சொல்கிறது.

    கருப்பு வெள்ளை காட்சிகளில் இத்தனை அழகியலை வெளிப்படுத்த முடியுமா? பின்னணி இசை இல்லாமல் வெறும் ஒலி வடிவமைப்பை பின்னணியாக வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரப் படத்தை எடுக்க அபரிமிதமான தைரியம் வேண்டும். படத்தின் இயக்குனர் – கதாசிரியர் – ஒளிப்பதிவாளர் அல்போன்ஸோ குவரோனிடம் தைரியத்துக்கு சற்றும் குறைவில்லை. ரோமாவின் இறுதிக் காட்சியில் காமிரா தெளிவான அகன்ற வானத்தை நோக்கும். வானில் விமானம் ஒன்று காமிராவின் ஒளி எல்லையைக் கடந்து செல்லும். தியானத்தை தூண்டக் கூடிய சித்திரத் துணுக்கு அந்த காட்சி. அந்த காட்சியினுள்ளிருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை.roma_theatrical_poster

  • The Door Keeper 2

    The resting mind
    was happy.
    It was soaking
    merrily in imagination.
    To explain to itself
    in its imagination
    scenes to come
    in the outside world
    is its favourite game.
    Without prior notice,
    the mind’s climate
    changed.
    A small depression
    was formed.
    There was the danger
    of its enlargement.
    To turn towards
    disastrous consequences,
    changes came
    into the screenplay.
    Fear spread
    and chemicals
    started to secrete
    from nerves.
    I instructed the mind
    to freeze the action
    and stop making noises.
    Take deep breaths,
    the brain ordered.
    I drove away
    the stale breath
    that lurked
    inside the lungs
    making the mind
    subservient
    to its command,
    thrust in feelings of fear
    and watched.
    Fresh breath
    filled in,
    expelled,
    new breath
    inhaled again,
    the lungs acted
    with alertness.
    Observing
    regular breathing,
    I was listening
    to the silent
    beat of the heart.
    I told the motionless mind
    to start the thinking process
    again.
    Scenes of the mind
    and conversations
    continued.
    My observation continues.
    I am observing
    if tiny disturbances
    which set of
    the feeling of fear
    in the mindspace
    are forming anywhere.

     

    Translated by Sri N Vatsa

    To read the original –> https://hemgan.blog/2012/06/10/வாயிற்காவலன்-2-2/

  • நானுந்தான்

    சமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால நிகழ்வு பற்றிய பதிவு எழுதுவதன் நோக்கம் மானசீக குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி வைப்பதே.

    சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை மிக அருகில் இருந்து என் அலுவலக சூழலில் கவனித்திருக்கிறேன். அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நொய்டாவில் சில வருடங்களுக்கு முன்னால் வேலை பார்த்த சமயத்தில் என் உயர் அதிகாரியினுடைய காரியதரிசியின் அனுபவங்கள், அதே நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த ஒரு பெண் மேலாண்மை இயக்குனரின் கண்ணில் பட்டு அவரின் உதவியாளராக்கப்பட்டு அதிக சம்பளம் என்ற மகிழ்ச்சி ஒரு வாரம் மட்டுமே நிலைத்து நிற்க கிழிந்த உடைகளுடன் அவள் அழுது கொண்டே ஓடிப் போனதை அனைவரும் பார்த்த நிகழ்வு, மேலும் பல வருடம் முன்னர் புனாவில் வேலை பார்த்த ஒரு குட்டி நிறுவனத்தில் பத்தொன்பது வயது பெண் ஊழியரை தன் காதலி என்று வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டு அவளின் பெயருக்கு களங்கம் விளைவித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்….அகமதாபாதில் வேலை பார்த்த நாட்களில் நண்பன் ஒருவன் வேலை பார்த்த நிறுவனத்தில் ஓர் அழகான தமிழ்ப்பெண்ணை தன் சொந்த பண்டமாக உபயோகித்த அந்த நிறுவன முதலாளி…..இத்தகைய நிகழ்வுகள் என் நினைவில் திரும்ப வந்து என்னை இந்நாட்களில் குற்றவுணர்வில் மூழ்கடித்திருக்கின்றன. அமைதி. அதுதான் நான் செய்த குற்றம். தட்டிக் கேட்க முடியா கோழைத்தனம் நம்மை நாம் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நம்மிடமிருந்து பறித்து விட்டிருக்கிறது. அந்த மீ டு செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் மகளிர் பட்ட வலியை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் vicarious-ஆக உணர முயல்வார்களா? மேற்சொன்ன படியான நிகழ்வுகள் நடக்குமெனின் அதை கேள்வி கேட்கும் தைரியத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்வார்களா? வேலையிடத்தில் மகளிரை பாலியல் ரீதியாக நோக்குவதையோ பாலியல் இச்சைகளை பிரஸ்தாபிப்பதையோ அதற்கென அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்துவதையோ எண்ணிக் கூடப் பார்க்காதவனாக இருப்பேன் என்ற பிரதிக்கினையை ஒவ்வோரு ஆண்மகனும் ஏற்றுக் கொள்வானா? வெறும் வாய்வார்த்தையில் மட்டுமில்லாமல் தன் நடத்தை வாயிலாகவும் பெண்களுக்கு எப்போதும் மரியாதை செலுத்துபவனாக ஆண்கள் இயல்பு மாற்றம் கொள்வார்களா?

    பாலியல் துன்புறுத்தலில் நான் பங்கேற்றிருக்கிறேனா? இந்த கேள்விக்கு பதில் இல்லையென்பதாக இருக்கலாம். ஆனால் அமைதி காத்திருக்கிறேன். இல்லையென்று சொல்ல முடியாது. அன்று காத்த அமைதி என்னையும் அந்த துன்புறுத்தல்களில் பகுதி-பங்கேற்பாளன் ஆக்கியிருக்கிறது. ஆம். குற்றவாளிதான். நானுந்தான்.

  • நசுங்கிய கால் பெருவிரல்

    இரண்டு புற பாறைகள்

    இடைவெளி குறைந்து கொண்டே

    நடுவில் இருக்கும் என்னை

    இறுக்கின.

    மூசசுத் திணறி

    இதயம் துடிதுடித்து

    நசுங்கி மரணிப்பது போல் இருந்த நொடிகளிலும்

    பாறைகள் சிந்திக்குமா என்ற கேள்வி எழுந்தது

    ஒரு பாறை நேரம் ; இன்னொரு பாறை சூழல்

    என்பதாக ஓர் உவமானத்தை யோசித்த போது

    ஒன்று தெளிவானது

    பாறைகளின் சிந்தனை

    என் சிந்தனையன்றோ!

    இல்லையில்லை…பாறைகளே என் சிந்தனையன்றி வேறில்லை

    பலங்கொண்ட புஜங்கொண்டு

    பாறைகளை தள்ளிப் பிளந்தெடுத்து

    கற்களாகப் பிய்த்தெடுத்து ஒவ்வொன்றாக எறியும்

    சிந்தனையைத் தொடங்கிய போது

    பெருமீசை தத்துவாசிரியனின் உருவத்துடன்

    நம்மைக் கொல்லாதிருக்கும் எதுவும்

    நம்மை பலவானாக்கும்

    என்கிற கூற்றைத் தாங்கிய சட்டகப்படம்

    கால் பெருவிரல் மீது விழுந்து

    வலி தாளாமல் நொண்டியடித்த தருணங்களில்

    பாறைகள், புஜங்கள், கற்கள், எறிதல்கள்

    அனைத்தும் மறைந்து

    வலியுணர்வில் குவிந்தது கவனம்

    கவனமும் ஒரு சிந்தனை

    என்ற வாதத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம்.

  • மனம் கரையும் நேரம்

    நேரம் சரியில்லை என்று சிந்தித்துக் கொண்டிருந்த மனதை யாரோ படித்து விட்டார்கள். ‘களுக்’ என சிரிக்கும் ஓசை. மனம் துணுக்குற்றது.

    ‘யார் சிரித்தது’

    ‘நான் தான் நேரம்’

    ‘நான் நினைத்ததை எப்படி அறிவாய் நீ?’

    ‘உனக்குள்ளேயே இருக்கிறேன் ; உன்னை அறிய மாட்டேனா நான்?’

    ‘எனக்குள் இருக்கிறாயா? இது என்ன நகைச்சுவை?’

    ‘உனக்குள் தான் நான் இருக்கிறேன்…’

    ‘இது எப்படி சாத்தியம்?’

    ‘நடந்தவைகளை எண்ணி குற்றவுணர்வு அடைந்த போதெல்லாம் என்னுடைய நேற்றைய வடிவமாக உன்னுள் நான் இருந்திருக்கிறேன்’

    ‘ம்..’

    ‘வரப்போவனவற்றை எண்ணி நீ பதற்றப்படும் போதெல்லாம் நான் நாளைய வடிவமாக உன்னுள் இருந்திருக்கிறேன்’

    ‘இப்போது எந்த வடிவத்தில் நீ இருக்கிறாய்?’

    ‘இப்போது இருப்பின் வடிவத்தை எய்திக் கொண்டிருக்கிறேன்… …தன்நிலையமைதி உன்னை சூழத் தொடங்கியவுடன் நீ என்னில் கரைந்து இல்லாது போய்விடுவாய் ‘

    சில கணங்களில் கேள்விகள் பதில்கள் எல்லாம் முடிந்து போய் மனமும் நேரமும் சங்கமித்து அடையாளங்களற்று இருப்பில் முழுவதுமாய் கரைந்து போயின.