நேற்று எழுதிய ரம்ஜான் போஸ்டைப் படித்த பிறகு நண்பர் நிஷா மன்சூர் தொலைபேசியில் அழைத்தார். நேற்று எழுதிய “காபா காக்கப்பட்டது” இடுகையில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது என்றார். இந்த விடுபடலின் காரணத்தால் போஸ்ட் சற்று எதிர்மறையாக தொனிப்பதாகச் சொன்னார். ஒரு முக்கியமான தகவலும் விட்டுப் போயிருந்தது. அப்ரஹா அழைத்துப் பேசும் மக்காவின் தலைவர் “முத்தலிப்” என்று இடுகையில் சொல்லியிருந்தேன். அப்துல்-முத்தலிப் இப்னு ஹாஷிம் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும், நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்தின் தாத்தாவாகவும் இருந்தார். மக்காவில் உள்ள பெரும்பாலான மக்களைப் போலவே, அவர் குரைஷ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.
மக்காவை நெருங்கி வந்த அப்ரஹா தனது படையினருக்கு அளித்த முதல் உத்தரவு – கால்நடைகளைத் தாக்குவது. அவர்கள் முத்தலிப்பின் ஒட்டகங்களில் பலவற்றை எடுத்துச் செல்கின்றனர். மன்னர் தனது வீரர்களில் ஒருவரை மக்காவிற்கு அனுப்பி அப்துல்-முத்தலிப்பைச் சந்திக்கப் பணித்தான். அந்த வீரன், “நீங்கள் முதலில் அவருடன் சண்டையிடாவிட்டால் அவர் உங்களுடன் சண்டையிட இங்கு வரவில்லை என்று சொல்ல ராஜா என்னை அனுப்பியுள்ளார். மாறாக, அவர் இந்த இல்லத்தை (அதாவது கஃபாவை) அழிக்க வந்திருக்கிறார். பின்னர் அவர் இந்த நகரத்தை விட்டு வெளியேறிவிடுவார்” என்றான். அப்துல்-முத்தலிப், “எங்களுக்கு அவருடன் சண்டையிடும் திறன் இல்லை. நாங்கள் அவரை எதிர்கொள்ள முயற்சிக்க மாட்டோம்” என்றார்.
அப்ரஹாவின் தூதன் அப்துல்-முத்தலிப் உடன் அப்ரஹாவிடம் திரும்பி வந்தான். அப்துல்-முத்தலிப் ராஜாவின் அறைக்குள் நுழைந்தபோது, அப்ரஹா அவரைப் பாராட்டி கௌரவித்தான். பின்னர் அவன் மொழிபெயர்ப்பாளரிடம், “அவருடைய தேவையைப் பற்றிக் கேளுங்கள்” என்று கூறினான். மொழிபெயர்ப்பாளர் கேட்டதற்கு பதிலளித்த அப்துல்-முத்தலிப், “தாக்குதலின் போது என்னிடமிருந்து பறிக்கப்பட்ட இருநூறு (200) ஒட்டகங்களை எனக்குத் திருப்பித் தர வேண்டும் என்பதுதான் எனது தேவை.” என்று சொல்கிறார்.
அப்ரஹா தனது மொழிபெயர்ப்பாளரிடம், “அவரிடம் சொல்லுங்கள்: நான் உங்களை முதன்முதலில் பார்த்தபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் இப்போது நான் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்கவில்லை. உங்கள் மதத்தில் நீங்கள் புனிதமாகக் கருதும் ஒன்றை அழிக்க வந்தேன், அதைப் பற்றி நீங்கள் என்னுடன் விவாதிக்கவில்லை, மாறாக கடத்தப்பட்ட ஒட்டகங்களைப் பற்றி பேசுகிறீர்கள்!”
அப்துல்-முத்தலிப் பதிலளித்தார் – “நான் ஒட்டகங்களின் எஜமானன் (உரிமையாளர்); இந்த வீட்டைப் பொறுத்தவரை, அதாவது, கஃபாவைப் பொறுத்தவரை, அதைப் பாதுகாக்கும் ஓர் இறைவன் இருக்கிறார்.”
அப்ரஹா தனது ஒட்டகங்களை அவரிடம் திருப்பி அனுப்பிவிடுகிறான். மக்காவுக்குச் செல்லும் வழியில் படை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அஞ்சி அப்துல்-முத்தலிப் குரைஷிகளை மலைகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர் சொன்ன படி மக்காவாசிகள் செய்கின்றனர்.
இது நடந்த பின்னர் தான், அப்ரஹா யானையை காபாவை நோக்கி செலுத்தச் செய்கிறான். தவற்றைச் சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி.
இப்னு கல்துன் (1332–1406) – னுடைய magnum opus என்று கருதப்படும் “முகாதிமா” நூலில் நாகரிகங்களின் (அதாவது வம்சங்களின், அரசுகளின், ஆட்சி அமைப்புகளின்) எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு சுழற்சி வரலாற்றுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கருத்துக்கள் இஸ்லாமிய இறையியலில், குறிப்பாக தெய்வீக விருப்பம், நீதி (‘adl’) மற்றும் உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை (dunya) ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றியிருந்தன.
இப்னு கல்துனின் சுழற்சி வரலாற்றுக் கோட்பாடு
நாகரீகங்கள் அவற்றின் தவிர்க்க முடியாத வீழ்ச்சிக்கு முன் மூன்று முக்கிய நிலைகளைக் கடந்து செல்கின்றன என்று இப்னு கல்துன் முன்மொழிந்தார்:
1. எழுச்சி (நாடோடி வலிமை & Asabbiya ) – நாகரிகங்கள் வலுவான Asabbiya (சமூக ஒற்றுமை) கொண்ட ஒரு குழுவுடன் தொடங்குகின்றன. பாலைவன பழங்குடியினர் அல்லது போர்வீரர் குழுக்களிடையே பெரும்பாலும் காணப்படும் இந்த ஒற்றுமை, அவர்களை வெற்றி பெற்று ஆட்சியை நிறுவ துணை செய்கிறது. புதிய ஆளும் வர்க்கம் எளிமை, ஒழுக்கம், நீதி உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டு எழுச்சியடைகிறது.
2. சிகரம் (அதிகாரத்துவ ஸ்திரத்தன்மை / செழிப்பு) – ஆட்சிக்கு வந்ததும், ஆளும் உயரடுக்கு அதிகாரத்தை மையப்படுத்தி நிர்வாக நிறுவனங்களை உருவாக்குகிறது. பொருளாதாரம், கலைகள், கலாச்சாரம் செழித்து வளர்கிறது. இருப்பினும், ஆட்சியாளர்கள் ஆடம்பரத்திலும் வசதியிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக மாறும்போது Asabbiya பலவீனமடையத் தொடங்குகிறது.
3. சரிவு (ஊழல் மற்றும் ஒற்றுமை இழப்பு) : ஆட்சியாளர்கள் தங்கள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, பழங்குடி வீரர்களுக்குப் பதிலாக கூலிப்படையினரை நம்பியிருக்க்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றனர். ஊழல், அநீதி, அதிக வரிவிதிப்பு ஆகியவை அரசை பலவீனப்படுத்துகின்றன. இறுதியில், வலுவான Asabbiya-வுடன் ஒரு புதிய குழு உருவாகிறது. பழைய வம்சத்தை தூக்கியெறிந்து, சுழற்சியை புதிதாகத் தொடங்குகிறது.
இஸ்லாமிய இறையியல் தொடர்புகள்
1. உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை – உலக அதிகாரம் தற்காலிகமானது என்ற குர்ஆனியக் கருத்தை இப்னு கல்தூனின் சுழற்சி பிரதிபலிக்கிறது:
“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகிறாய்”
குர்ஆன் 3:26)
நாகரிகங்கள் உயர்ந்து வீழ்ச்சியடைவது போல, செல்வமும் அதிகாரமும் அல்லாஹ்வின் சோதனைகள் (ஃபித்னா, குர்ஆன் 8:28).
2. ஒழுக்கம், நெறிமுறை தலைமைத்துவம் – இஸ்லாமிய இறையியல் நீதி (‘adl’)யை வலியுறுத்துகிறது. ஆட்சியாளர்கள் நீதியைக் கைவிட்டு ஊழல் செய்யும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்னும் இப்னு கல்தூன் கோட்பாடு குர்ஆனின் எச்சரிக்கையுடன் ஒத்துப்போகிறது:
“அல்லாஹ் நம்பிக்கைப் பத்திரங்களை அவை யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கும்படியும், மக்களிடையே நீங்கள் தீர்ப்பளிக்கும்போது நீதியுடன் தீர்ப்பளிக்கும்படியும் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.” (குர்ஆன் 4:58)
3. தெய்வீக விருப்பத்தின் பங்கு (Qadar) – இப்னு கல்துனின் கோட்பாடு சமூக, பொருளாதார சக்திகளை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், வரலாறு தெய்வீக விருப்பத்தின்படி (Qadar) விரிவடைகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், ஊழ்வலி வாத விளக்கங்களைப் போலல்லாமல், மனித agency-யை வலியுறுத்தினார் – சமூகங்கள் அவற்றின் சொந்த தார்மீகச் சிதைவின் காரணமாக வீழ்ச்சியடைகின்றன, முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளினால் அல்ல.
4. மனநிறைவுக்கு எதிரான எச்சரிக்கைகள் – வெற்றியில் விளையும் ஆணவம், மனநிறைவுக்கு எதிராக குர்ஆனும் ஹதீஸும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றன. ஆட்சியாளர்கள் மிகவும் வசதியடைந்து, நீதியுணர்வை இழந்துவிடும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்று இப்னு கல்துன் குறிப்பிட்டார். – “எத்தனையோ ஊர்களை – அநியாயம் செய்த நிலையில் அவற்றை நாம் அழித்திருக்கிறோம்; அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் பாழ்பட்டுக் கிடக்கின்றன.” (குர்ஆன் 22:45)
இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா பிரதேச பொருளாதாரத்தின் முக்கிய அங்கம்.
அப்போது ஏமனில் உள்ள சனாவை ஆட்சி செய்த அபீசீனியாவை பூர்வீகமாய்க் கொண்ட மன்னன் அப்ரஹாவுக்கு காபாவுக்கு இணையாக வேறொரு புனித த்தலத்தை கட்டி விட வேண்டும் என்ற எண்ணம். சினாயில் ஒரு தேவாலயத்தை அமைத்து, அதை அல்-குலைஸ் எனப் பெயரிட்டான். அரபு யாத்திரிகர்கள் மக்காவின் கஅபாவில் திரளாமல், அல்-குலைஸில் திரளச் செய்ய வேண்டும் என்று எண்ணினான். காபாவை அழித்தால் தான் இது சாத்தியம் என ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு காபாவை நோக்கிப் புறப்பட்டான்.
காபாவின் வாயிலுக்கு சற்று தூரத்தில் நல்ல கூட்டம். குரைஷிகள் எதிர்க்கத் தயாராக நிற்கிறார்கள் என்று தோன்றியது! முத்தலீப் என்ற அவர்களின் தலைவர் அப்ரஹாவைச் சந்தித்து தமது கால்நடைகளை கூட்டிக் கொண்டு மக்காவின் மலைப்பிரதேசங்களுக்குச் சென்று விடுவதாகவும் தமது மக்கள் குழுவைத் தாக்க வேண்டமென்றும் கேட்டுக் கொண்டார். அப்ரஹாவுக்கு ஓரே சிரிப்பு! “சரியான பயந்தாங்கொள்ளிகள் இவர்கள்” என்று நினைத்துக் கொண்டான்.
அவனிடம் மிகப் பிரம்மாண்டமான ஆப்ரிக்க யானை ஒன்று இருந்தது. அதனை அடக்கி தன் படையின் பிரதம யானையாக வைத்திருந்தான். குரைஷிகள் நகரை விட்டு விலகிச் செல்லும் முன் படைகளை அனுப்பாமல் தனது பிரதம யானையை காபாவை நோக்கி முன்னகர்த்தினான். அப்போது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. தனது கால்களை மடக்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டது யானை. படை வீரர்கள் அதனை எழுப்பி ஓட வைக்க முயன்றனர். யானையோ ஏமன் போகும் திசையில் ஓடத் துவங்கியது. அதனைப் பிடித்து காபாவின் திசையில் துரத்தினாலோ அது சில அடிகள் ஓடி மறுபடியும் நின்று விட்டது. அதே சமயம் வானில் திடீரென ஆயிரக்கணக்கில் கடற் பறவைகள்! அவற்றில் அலகிலும் கால்களிலும் சிறுசிறு கற்கள்! வானிலிருந்து அப்ரஹாவின் படைகள் மீது கல் மழை! கற்களின் அளவு பச்சைப் பட்டாணியின் அளவாக இருந்தாலும் யார் மீதெல்லாம் அக்கற்கள் பட்டனவோ அவர்கள் வலியில் துடித்தனர். ஒரு சிலரின் கண்களில் கற்கள் பட்டு பார்வையிழந்தனர். அப்ரஹா திகைத்தான். “குரைஷிகள் ஓடி விட்டனர்! பறவைகளின் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை! யார் ஏவுகின்றனர் இவர்களை?” – படைகள் பயந்து போய் பின் செல்லத் தொடங்கின. அப்ரஹா அவர்களை ஓட வேண்டாமெனச் சொன்னான். அவனது வீர ர்கள் பயந்திருந்தனர். ஏமனை நோக்கித் திரும்பி ஓடினர். அவர்கள் கடந்து வந்த ஒவ்வொரு நிலத்திலும் அவர்களின் உடல் பாகங்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. அப்ரஹாவின் விரல் நுனிகள் விழத் தொடங்கின. ஒவ்வொரு விரல் நுனியும் விழுந்த பிறகு, அதைத் தொடர்ந்து சீழும் இரத்தமும் வெளியேறியது. அவர்கள் யேமனை அடைந்தபோது வெகு சிலரே எஞ்சியிருந்தனர். சில நாட்களில் அப்ரஹா இறந்து போனான்.
பின் வந்த சில பத்தாண்டுகளில் காபாவின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கப் போகும் நபியின் பிறந்த ஆண்டில் நடந்தது இது. காபாவின் அருகில் வாழ்ந்தவர்கள் பலதெய்வவாதிகள் – சிலைகளை வணங்கியவர்கள். அப்ரஹாவினுடைய படைகளின் அழிவு என்னும் அற்புத அடையாளம் – காபாவினருகில் வாழ்ந்தவர்களுக்காக அல்ல – அதே ஆண்டில் பிறந்த நபிக்காக நடந்தது.
“நபியே! யானை(ப் படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கிவிட்டான்.” (105:1-5)
இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்).
—
மேலிருந்து இங்கு வந்து இறங்கியது, அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா
இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில் தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது
அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றன கூண்டோ வலிமையானது!
அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை, உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்து அது முடக்கப்பட்டுள்ளது.
–
அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம் இது,
திரை விலக்கப்பட்டு, மகிழ்ச்சியுடன் முணுமுணுத்தவாறு விழித்திருக்கும் கண்களால் காண முடியாதவற்றை நோட்டம் விடுகிறது
புகழ்க்கீதம் பாடி உயரங்களுக்குத் திரும்புகிறது உலகில் இருந்தவரை மறைக்கப்பட்டவைகளை உணர்ந்தவாறே திரும்பினாலும் அதன் உடையில் கறைகள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
இத்தனை உயரத்தில் இருந்து அது ஏன் அவ்வாறு வீசப்பட்டது இருண்ட, மந்தமான, ஆழ்ந்த அடித்தளப் பள்ளத்திற்கு?
God is omniscient. A long debate about the nature of God’s knowledge continued for centuries. A long-standing attempt to explain Islamic theology using the reasoning of Greek philosophers such as Aristotle and Plato began during the Abbasid dynasty. The kings and caliphs, attracted by the concept of the philosopher-king, encouraged the movement to explain Islamic theology on the basis of Greek philosophies.
Among the philosophers who came in this line, Ibn Sina (980-1037 CE) occupies a prominent place. His views are one of the most debated aspects of Islamic theology. His views, especially about God’s knowledge of individual events and details that occur in the world, have caused much controversy. Ibn Sina argued that God does not know individual details directly, but knows them in a universal way. That is, instead of knowing each individual event in its small details, he considered that God knows the universal principles and laws that govern those details.
Some theologians considered that the claim that God has no direct knowledge of individual events to be inconsistent with the Islamic doctrine of God’s omniscience and omnipotence. Since the idea that Ibn Sina’s view was derived from the essence of Greek philosophy was widely held in the Islamic world, many considered it to be a departure from the basic tenets of Islamic theology. Imam al-Ghazali (1058–1111 CE) was a harsh critic of Ibn Sina’s philosophy, arguing that it contradicted Islamic principles.
Al-Ghazali asserted that God has direct and complete knowledge of every individual event, great or small. This, he argued, was entirely consistent with the Islamic doctrine of God’s omniscience and omnipotence.
Al-Ghazali considered Ibn Sina’s view to be a comparison of God’s knowledge with human knowledge. He also thought that this belittled God’s greatness and uniqueness.
He argued that philosophy and its systems had limitations in answering theological questions. In particular, he considered Greek philosophy (Aristotle and Plato) and its Islamic interpretations (Ibn Sina and al-Farabi) to be fundamentally at odds with Islamic principles.
Al-Ghazali’s reaction – by comparing Ibn Sina’s philosophy with Islamic principles – was to expose its shortcomings. It reaffirmed Islamic beliefs about the knowledge and omnipotence of God. This debate – between Islamic philosophy and theology – was a crucial conflict. It significantly changed the course of Islamic thought.
However, Ibn Sina’s philosophical views did not become completely obsolete. Over time, Ibn Sina’s epistemological ideas had a great influence on the West.
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஒரு நேர்காணல் வாயிலாகத்தான் முதன்முதலாக இப்னு ருஷ்த் பற்றி நான் அறிந்தேன். எழுத்தாளர் சல்மான் ருஷ்டி சொன்னார் : “குடும்பப் பெயரை ருஷ்டி என்று மாற்றுமளவிற்கு எனது தந்தை இப்னு ருஷ்தின் தத்துவத்தை வெகுவாகப் போற்றினார். என் தந்தை ஏன் அவர் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்பதை நான் பின்னர் உணர்ந்தேன். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள் நம்பமுடியாத அளவிற்கு நவீனமயமாக்கும் குரலாக இருந்தார் ருஷ்த்”
Ibn Rushd (1126 – 1198)
அவெரோஸ் என்றும் அழைக்கப்படும் இப்னு ருஷ்த், இடைக்கால அண்டலூசியாவில் வாழ்ந்த இஸ்லாமிய தத்துவஞானி, சட்ட நிபுணர் மற்றும் மருத்துவர். அவருடைய படைப்புகள் இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய சிந்தனைகள் இரண்டிலும், குறிப்பாக தத்துவம் மற்றும் இறையியல் துறைகளில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்பெயினின் கோர்டோபாவில் 1126 இல் பிறந்த இப்னு ருஷ்தின் அறிவுசார் பங்களிப்புகள் அரிஸ்டாட்டிலியன் தத்துவம், இஸ்லாமிய நீதியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியவை.
அரிஸ்டாட்டிலின் படைப்புகள் பற்றிய அவரது விளக்கங்கள் இப்னு ருஷ்தின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும். அரிஸ்டாட்டிலின் “மெட்டாபிசிக்ஸ்” மற்றும் “இயற்பியல்” பற்றிய அவரது விளக்கங்கள் ஐரோப்பிய கல்விமான்களிடையே செல்வாக்கு பெற்றவை. அவை முந்தைய இஸ்லாமிய தத்துவஞானிகளின் விளக்கங்களிலிருந்து வேறுபட்டு அரிஸ்டாட்டிலின் கருத்துகளுக்கு ஒரு புதிய விளக்கங்களை அளித்தன.
இப்னு ருஷ்த் இஸ்லாமிய நீதியியல் பற்றியும் விரிவாக எழுதினார். அரிஸ்டாட்டிலின் போதனைகளை இஸ்லாமிய இறையியலுடன் ஒப்பிட்டார் . “The Decisive Treatise” என்று அறியப்படும் நீதித்துறை பற்றிய அவரது பணி தத்துவத்திற்கும் மதத்திற்கும் இடையிலான உறவை எடுத்துரைத்தது. இந்நூலில் தத்துவமும் மதமும் இணக்கமாக இருக்க முடியும் என்று அவர் வாதிட்டார்.
அரிஸ்டாட்டிலிய இயற்பியலின் சிக்கலான வாதத்தின் மூலம் கடவுளின் இருப்பை நிரூபிக்க முடியும் என்று இபின் ருஷ்த் நம்புகிறார். இது ஒரு முதல் காரணத்தை நிறுவுகிறது. பொதுவாக இயற்பியல் வாதங்களைப் போலவே, வாதமும் ஒரு அடையாளமே (தலீல்), இது உலகின் அனுபவ அம்சங்களில் இருந்து தொடங்குகிறது. அவை காரண ரீதியாக பின்னால் இருந்தாலும் நம்மால் நன்கு தெரிந்து கொள்ளும்படியாக உள்ளன.
இப்னு சினா மற்றும் அஷ்அரைட் இறையியலாளர்களின் முன்னோடி மீப்பொருண்மை வாதங்களை அவர் நிராகரிக்கிறார். இவையனைத்தும் நிரூபணமாக குறைவுபட்டது மட்டுமல்லாமல், சாதாரணர் புரிந்து கொள்ளும், ஏற்கும் வகையிலும் இல்லை என்று நினைக்கிறார். கடவுள் ஒரு திறமையான காரணமாக (efficient cause) அல்ல, ஆனால் இறுதி மற்றும் முறையான காரணமாக பணியாற்றுகிறார் என்று இப்னு ருஷ்த் கூறுகிறார். நிஜத்தில் நகரும் வானசோதிகள் (Moving Bodies) மற்றொரு வானசோதியை அதன் ஆற்றல் நிலையிலிருந்து உண்மையான இயக்கத்திற்கு நகர்த்தும்போது திறமையான காரணத்தன்மை நிலவுகிறது. பரலோக காயம் ஏற்கனவே நித்தியமானதாக உள்ளதால் பரத்தின் களத்தில் திறமையான காரணத்திற்கு இடமில்லை. ஆகாயக் கோளங்களுடனான முதல் காரணத்தின் உறவு அறிவுக்குப் புலனாகும் – அதாவது, முதல் காரணத்தின் நித்திய எண்ணம் அறிவை ஊக்குவிக்கும் இறுதி காரணங்களாக செயல்படும் வடிவமாகும். “காலஞ்சேர்ந்தவை முற்றிலும் நித்தியமானதிலிருந்து முன்னெடுக்க முடியாதவை. அதன் பொருளில் அவை நித்தியமானவை என்றாலும் அதன் இயக்கங்களில் தற்காலிகமானவை” அறிவுயிர்களுக்கு மத்தியில் கடவுளுக்கு மட்டுமே இறுதிக் காரணமாக செயல்படக்கூடிய அறிவுசார் சிந்தனைக்கு வேறு இலக்கு இருக்க முடியாது. மாறாக, “முதல் வடிவம் தனக்கு வெளியே எதையும் நினைக்காது”. இது கடவுளின் தனித்துவமான எளிமையை ஒரு தூய மனதாகக் கணக்கிட உதவுகிறது, எப்போதும் கடவுளைத் தவிர வேறு எதனாலும் முழுமையாக உணரப்படாததாக அது இருப்பதாக விளக்குகிறது. ஆனால் – கடவுள் படைத்த உலகம் பற்றிய அறிவுணர்வு பற்றிய கேள்விகளுக்கு இது வழிவகுக்கிறது. கடவுள் கருத்தாக்கத்தைப் பற்றிய “மிகவும் வலிமையான சந்தேகம்” இதுவாகும். “கடவுளுக்கு விவரங்கள் தெரியாது” என்ற பார்வை தான் “மதக்கருத்துக்கு எதிரானவர் இப்னு ருஷ்த்” என்று அல் கஸாலியால் முத்திரை குத்த வைத்தது. இந்த அனுமானத்தை அசை போடுவதாகவும் இது குறித்து உறுதியாக இருப்பதை இப்னு ருஷ்த் மறுக்கிறார். கடவுள் தான் படைத்த உலகம் பற்றிய அறிவை தனக்கே உரிய முறையில் கொண்டிருக்கிறார் என்றும், பொதுமையாகவோ தனிப்பட்டதாகவோ இல்லாமல், உலகத்தால் ஏற்படுவது போல் அல்லாமல், உலகத்தின் காரணங்களாக அவருடைய எண்ணங்கள் விளைகின்றன. (I want to know God’s thoughts, rest are details என்று ஐன்ஸ்டைன் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது). தெய்வீக மனம் “தன் சுயத்தை நினைப்பது அனைத்து இருப்பினுடைய அதன் சிந்தனையை ஒத்ததாக இருக்கிறது”.
முஸ்லீம் சூழலில் இப்னு ருஷ்தின் செல்வாக்கு இப்னு சினாவின் பெரும் செல்வாக்குடன் ஒப்பிட முடியாதது, அல்லது ஐரோப்பாவில் இப்னு ருஷ்தின் சொந்த செல்வாக்குடன் கூட ஒப்பிட முடியாதது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இஸ்லாமிய சிந்தனையில் அவருக்கு எந்த தாக்கமும் இல்லை என்னும் கூற்று தவறானது. இப்னு சினா, அல்-கஸாலியைப் போலல்லாமல் இப்னு ருஷ்த் சுயசரிதை எழுதவில்லை என்பதால் அவரது வாழ்க்கையின் பல அம்சங்கள் தெளிவாவதில்லை. இப்னு ருஷ்தின் கருத்துக்கள் இஸ்லாமிய உலகில் சர்ச்சையை ஏற்படுத்தின என்பது உண்மைதான். ஆனாலும், அவரது படைப்புகள் இஸ்லாமிய உலகிலும் மற்றும் மேற்குலகிலும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு போற்றப்பட்டன. கிளாசிக்கல் கிரேக்க சிந்தனையை இடைக்கால ஐரோப்பாவிற்கு கடத்துவதில் ஒரு முக்கிய நபராக ருஷ்த் கருதப்படுகிறார்.
காசி நஸ்ருல் இஸ்லாம் – இந்த மகாகவிஞன் எந்தச் சிமிழிலும் அடங்காதவன். இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தீவிரவாதி. ஐநூறுக்கும் மேலான இந்து பஜன்களை இயற்றியவன். மகன்களுக்கும் மகளுக்கும் இந்து-முஸ்லீம் பெயர்களை இணைத்துச் சூட்டியவன். மூத்த மகனுக்கிட்ட பெயர் – கிருஷ்ண முகம்மது. வங்கதேசத்தின் தேசிய கவி. துர்காபூர் விமான நிலையத்துக்கு இவன் பேர் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கமும் வங்க தேசமும் போட்டியிட்டு இவனைச் சொந்தம் கொண்டாடுகின்றன. மகனும் மகளும் டாக்கா சென்று சேர்வதற்குள் கவிஞன் அடக்கம் செய்யப்பட்டு விட, அவனுடைய புதைக்கப்பட்ட தகனப்பெட்டியை மீண்டும் தோண்டியெடுத்து இந்தியாவுக்கு கொண்டு வந்து புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கரடுமுரடான நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகளின் அழகியல் குருதேவ் தாகூரின் அதிநவீன பாணியுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது. நவீன வங்க மொழியில் சமஸ்கிருதமயமான சொற்களை பயன்படுத்தி வந்த காலத்தில் பர்சிய-அரபு மூலச்சொற்களை பயன்படுத்துகிறான் என்பதால் இவன் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்தார் குருதேவ் ரவீந்திரர். “கூன்” (ரத்தம்) எனும் பர்சிய மூலச் சொல்லை இஸ்லாம் பயன்படுத்தியதால் விளைந்த மிகப்பெரிய இலக்கியச் சண்டை இது. “ரக்தோ”(ரத்தம்) என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவில்லை என்று வங்க இலக்கிய உலகமே இரண்டு பட்டது. 1941இல் ரவீந்திரர் மறைந்த போது கண்ணீர் விட்டு அழுதான். செயலாற்றிய இருபதாண்டுகளில் எண்ணற்ற கவிதைகளை பாடல்களை கட்டுரைகளை எழுதிக் குவித்தான். தன்னுடைய பாடல்களுக்கு தானே இசையமைத்து கிராமபோன் ரிகார்டுகளை HMV நிறுவனம் மூலமாக கொண்டு வந்தான். வங்காள மொழியின் திரைப்படம் இயக்கிய முதல் முஸ்லீம் இயக்குனராகவும் திகழ்ந்தான். தாகூர் இறந்த ஓராண்டில் இஸ்லாமை ஒரு வித நோய் பீடித்தது. ஐம்பதுகளை மனநோய் மருத்துவமனையில் கழித்தான். பின்னாளில் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்ற போது இந்தியாவில் அவனுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று ஐரோப்பிய மருத்துவர்கள் தெரிவித்தனர். நோயிலிருந்து மீளாமல் 1976 வரை வாழ்ந்தான். 1972இல் வங்கதேசம் தனி நாடான போது புது அரசு டாக்காவுக்கு அழைத்துச் சென்று அவனைப் பார்த்துக் கொண்டது.வங்க தேசத்தின் தேசிய கவி என்றும் அறிவித்தது.
—
ஈஸ்வரன்
இறைவனுக்காக வானையும் மண்ணையும் தேய்த்துப் பார்ப்பவன் யார்? மலையுச்சிகளில் ஏறியும் காடுகளில் உலவியும் திரிந்து கொண்டிருக்கும் நீ யார், துறவியே! புதையலை உன் மார்பில் கட்டிக்கொண்டு அதனை அனைத்திடங்களிலும் தேடித் திரிகிறாய் படைப்பு உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது நீயோ உன் கண்ணைப் பொத்திக் கொண்டுள்ளாய் படைத்தோனைத் தேடும் உன் முயற்சியில் நீ உன்னையேதான் தேடிக் கொண்டிருக்கிறாய் விருப்பக் குருடனே ! கண்ணைத் திற உன் வடிவை கண்ணாடியில் பார் அவனது நிழல் உன் முழு வடிவிலும் வார்க்கப்பட்டிருக்கும் வேதத்தின் அதிகாரிகள் மீது மலைப்போ அச்சமோ கொள்ள வேண்டியதில்லை நாயகனே! இறைவனின் செயலர்கள் இல்லை அவர்கள் அனைத்திலும் வெளிப்படும் அவன் அனைத்தின் மத்தியிலும் இருக்கிறான் நான் என்னைப் பார்க்கிறேன் காணாத என் படைப்பாளியை அடையாளம் கண்டுகொள்கிறேன் கடல்-வழி வணிகர்கள் நகை வர்த்தகம் புரிகின்றனர் அவர்கள் நகை வணிகர்கள் நகை செய்தவனை அறிந்தோம் என்று பாசாங்கு செய்கிறார்கள் முத்து விளையும் கடல்களின் ஆழத்தில் என்றும் அவர்கள் மூழ்கியதில்லை நூல்களை ஆராய்வதற்குப் பதிலாக, உண்மைக் கடலில் ஆழ்ந்துவிடு நண்பனே
கஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கம் 14ம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்து-பவுத்த மக்கள் பெரும்பான்மையாக இருந்த நிலப்பரப்பு எப்படி இஸ்லாமியமயமானது என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிப்போனபோது கிடைத்தது – அலீ ஹம்தானி – எனும் பெயர். இரானிலிருந்து எழுநூறு சீடர்களோடு வந்து சாதாரண கஷ்மீரிகளை இஸ்லாம் பக்கம் ஈர்த்தவர் ஹம்தானி.
காஷ்மீரின் ஆளும் ஷா மிர் வம்சத்து மன்னர்களை இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைபடுத்தி முழுக்க முழுக்க கஷ்மீரை இஸ்லாமியமயமாக்க வலியுறுத்தினார். இருப்பினும், இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் வேகம் பற்றி மிர் சயீத் அலி ஹமதானி-க்கும் சுல்தான் குதுப் அல்-தீனுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது. கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்து கொள்ள முடியாமல் சயீத் அலி ஹமதானி காஷ்மீரை விட்டு வெளியேறினார்.
இரானின் உயர் கலாச்சாரத்தை கஷ்மீர் பண்பாட்டு நிலப்பரப்பில் புகுத்த ஹம்தானிக்குப் பின் வந்த சீடர்கள் தொடர்ந்து முயன்ற போது எழுந்த மக்கள் இயக்கம் ரிஷி மரபு. இவ்வியக்கத்தின் நிறுவுனர் – நந்த் ரிஷி என்று அழைக்கப்படும் நூருத்தின் வலி. ஷேக் உல் ஆலம் எனும் சிறப்புப் பெயராலும் இவர் அறியப்படுகிறார்.
நந்த் ரிஷி காஷ்மீரிகளின் ஆன்மீக மற்றும் சமூக விவகாரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது கவிதைகள் மற்றும் போதனைகள் பாமர மக்களை பரவலாக சேர்ந்தடைந்தன. உள்ளூர் மக்களால் நந்த் ரிஷியின் பல்வேறு பாடல் வரிகள் அன்றாட வாழ்வில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டது. இது இன்றளவும் தொடர்கிறது. ஆன்மிகம், பக்தி, உண்மைத் தேடல் ஆகிய கருப்பொருள்களைத் தம் கவிதைகள் வாயிலாக ஆராய்ந்தார் நந்த் ரிஷி.
நந்த் ரிஷியின் சம காலத்தவர் லல்லா எனப்படும் லால் டேட். சைவ சமய சித்தரான லல்லா கஷ்மீரி மொழியின் முதல் இலக்கியவாதியும் கூட. நந்த் ரிஷி லல்லாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும் ரிஷியின் தாயார் லல்லாவின் நெருங்கிய தோழி என்றும் கூறப்படுகிறது. இந்து லல்லா – இஸ்லாம் நந்த் ரிஷி – இவர்கள் பற்றி ஏராளமான தொன்மைக்கு கதைகள் கஷ்மீர் மண்ணில் புழங்குகின்றன. ஆபப்ரம்ஷ – பிராகிருத மொழியை விட்டு கஷ்மீரி மொழியைப் பேசத் தொடங்கியிருந்தது கஷ்மீர். இந்து-பவுத்த சமூகத்திலிருந்து இஸ்லாம் சமயத்தின் பரவலாக்கத்தையும் கண்டு கொண்டிருந்தது பள்ளத்தாக்கு. நிலம் அதிரும் மாற்றங்களுக்கு நடுவே தூர வெளிச்சமாய் கஷ்மீரின் பண்பாட்டுத் தொடர்ச்சியை உறுதி செய்தனர் இந்த இரு ஆளுமைகள். லல்லாவின் “வாக்”, ரிஷியின் “ஷ்ருக்” – தனித்துவமிக்க வடிவங்களில் இருவரும் புனைந்த கவிதைகள் “கஷ்மீரியத்”தின் வேர்கள்!
மரணம் ஒரு சிங்கம் எப்படி அதனிடமிருந்து தப்பிக்க முடியும்? ஆட்டு மந்தையிலிருந்து ஆட்டுக்குட்டியைப் போல அது உன்னைத் தூக்கிச் செல்லும்
——————————————————————
பயம், பற்று, வன்முறை எண்ணம் நான் தவிர்த்தவை வாழ்நாள் முழுதும் நான் நடந்தது ஒற்றைப்பாதை சிந்தனையின் நீரில் குளித்து ஆனந்தத் தனிமை எனும் தங்குமிடம் நோக்கி நடந்தேன்
——————————————————————
முடிந்தால் பசித்தவர்க்கு உணவளி அம்மணமானவரின் ஜாதியைக் கேட்காதே ஆயிரம் மடங்கு அறத்தை ஆதாயமாய்ப் பெறு அன்புச் சகோதரரே, நந்தா அதை ஒருபோதும் இழக்க மாட்டீர்
——————————————————————
வீட்டு வாசலில் விழிப்பில் அமர்ந்திருப்பவருக்கு அவரது சொந்த சர்பத்தை அவர் வழங்குவார்: அவருடைய பக்தர்கள் வேறு யாரோ, ஆனால் ஒரே ஒரு பிரார்த்தனையில் அவர் ஆசீர்வதிப்பவர், செழிப்படைவார்
——————————————————————
என் பக்கத்தில் அவன் அவன் பக்கத்தில் நான் அவனுடன் ஆனந்தமாக உணர்கிறேன் வீணில், அவனைத் தேடி எங்கோ சென்றேன் என் நண்பனோ எனக்காக என் வீட்டில் எழுந்தருளினான்
——————————————————————
“சிவ சிவ”வெனும் கோஷம் சிவனை எழுப்பாது காங்கிர் கங்குகளில் நீயிடும் நெய்யை உட்கொண்டு வலுவாக இரு அல்லது உனக்குத் தேவையில்லையெனில் மற்றவர்க்குக் கொடு
——————————————————————
One of the oldest Sufi Shrine in Kashmir, dedicated to Nund Rishi – Charar e SharifSrinagar International Airport is named after Nund Rishi – Sheikh ul Alam Airport
In 2014, in Iraq’s northern city of Mosul one of its most well-known shrines was destroyed by the ISIS – the Tomb of Jonah. The shrine was built on what is regarded as the burial site of the biblical prophet known in the Quran as Yunus.
நினிவே நகரம் நீண்ட காலமாக அல்லாஹ்வின் செய்தியை மறந்து சிலை வழிபாடும் பாவமும் நிறைந்த நகரமாக மாறியிருந்தது. நகரவாசிகளைத் தனது ஒளியின் பாதையில் வழிநடத்த நினிவே நகரவாசிகளுள் ஒருவராகப் பிறந்திருந்த யூனுஸ் நபியை ஒரு தூதராக அனுப்ப முடிவு செய்தான் அல்லாஹ்.
யூனுஸ் நபி உடனடியாக தனது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினார். தனது மக்களை அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் சிலை வழிபாட்டைத் தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்தார். அவருக்கு முன் பிறந்த தீர்க்கதரிசிகள் நிராகரிக்கப்பட்டதைப் போலவே ஆனால் நினிவே மக்களால் யூனுஸும் நிராகரிக்கப்பட்டார். அல்லாஹ்வின் பயங்கர கோபத்தை அவர்களுக்கு நினைவூட்டி அவர்களை அல்லாஹ்வின் பாதைக்கு வர அழைத்தார். அவர்களோ, “நாங்களும் எங்கள் முன்னோர்களும் பல ஆண்டுகளாக இந்த தெய்வங்களை வணங்குகிறோம், இதனால் எங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை” என்றனர்.
நபி யூனுஸ் அவர்களுக்கு உதவ விரும்பினார், அதனால் தன் விடாமுயற்சியைக் கைவிடவில்லை. அவர்களின் அறியாமையைப் பரிவுடன் அணுகினார். அவர்களின் கடுமையான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அல்லாஹ்வின் தண்டனை குறித்து எச்சரித்தவண்ணமிருந்தார்.
மேலும் யூனுஸின் வார்த்தைகளை வெற்று அச்சுறுத்தல்களாக நினைத்து தாங்கள் சிறிதும் பயப்படவில்லை என்று தெரிவித்தனர். யூனுஸ் நபி மனம் உடைந்தார்; அவர் தனது மக்களை கைவிட்டார். தன்னை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை ஏற்கும் ஒரு சமூகத்தை வெகு தொலைவில் கண்டடையலாம் என்ற நம்பிக்கையில், அல்லாஹ்வின் அனுமதியின்றி, நினிவே நகரத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
நினிவேயின் அமைதியான வானம், அல்லாஹ்வின் கோபத்தைத் துப்புவதற்குத் தயாராவதுபோல் சிவப்பாக மாறியது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மலை உச்சியில் தங்களுக்கு மேலேயிருந்த வானத்தை பயம் நிறைந்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றிய யூனுஸின் எச்சரிக்கையை அவர்கள் நினைவு கூர்ந்தனர், மேலும் அவர்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையைக் கண்டு அஞ்சினர். புதிய நம்பிக்கையுடன், முழங்காலில் விழுந்தனர்; கைகளை நீட்டி அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் வேண்ட ஆரம்பித்தார்கள். இந்த நேர்மையான மனந்திரும்புதலால் தூண்டப்பட்ட அல்லாஹ், தண்டனையை நீக்கி, குடிமக்களை மன்னித்து, அவர்கள் மீது தனது ஆசீர்வாதங்களைப் பொழிந்தான்.
வானம் தெளிந்தபோது மக்கள் தங்கள் அன்பிற்குரிய நபி யூனுஸ் அல்லாஹ்வின் பாதையில் அவர்களை வழிநடத்தும் பொருட்டு பாதுகாப்பாக நினிவேவுக்குத் திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்,
நினிவேயை விட்டு வெளியேறிய யூனுஸ் நபி தனது மக்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு சிறிய பயணிகள் கப்பலில் ஏறினார். கப்பல் பகலில் அமைதியான நீரில் நகர்ந்தது; ஆனால் இரவு வந்தவுடன் சூறாவளி கப்பலைத் தொட்டது. கப்பலை அங்குமிங்குமாக உலுக்கியது. கடல் நீர் மெல்ல மெல்ல புகுந்து, கப்பலை மெதுவாக மூழ்க ஆரம்பித்தது. பணியாளர்களும் பயணிகளும் உயிருக்கு அஞ்சத் தொடங்கினர்.
இரவு முழுவதும் சூறாவளி தொடர்ந்ததால் கப்பலின் சுமையைக் குறைப்பதற்காக சாமான்கள் மற்றும் மற்ற அனைத்து அதிகப்படியான சுமைகளையும் தூக்கி எறியுமாறு கப்பலின் மாலுமி உத்தரவிட்டார். அறிவுறுத்தப்பட்டபடி பணியாளர்கள் கப்பலின் அதிகப்படியான சுமையை வெளியேற்றினர்; ஆனால், கப்பல் இன்னமும் கனமாக இருந்ததால் தொடர்ந்து மூழ்கிக் கொண்டிருந்தது. கேப்டனுக்கு வேறு வழியில்லை – அவர் தனது பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற யாரோ ஒருவரின் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் இருந்த பொதுவான நடைமுறையை செயல்படுத்தும் விதமாக பலி கொடுக்கப்படும் பயணியைத் தேர்வு செய்ய கேப்டன் சீட்டு குலுக்கிப் போட முடிவு செய்தார்.
சீட்டு போடப்பட்டு யூனுஸ் நபியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. யூனுஸ் ஓர் இளைஞர், நேர்மையானவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை சகபயணிகள் அறிந்திருந்தனர், எனவே அவர்கள் அவரை வெளியேற்ற மறுத்து மீண்டும் சீட்டு குலுக்கிப்போடும்படி கேப்டனை வேண்டிக் கொண்டனர்.
மீண்டும் சீட்டு குலுக்கிப் போடப்பட்டது. யூனுஸின் பெயரே மீண்டும் வந்தது. யூனுஸை தூக்கி எறிய மறுத்து, “நாங்கள் யூனுஸை இழக்கப் போவதில்லை. அவர் படகில் இருப்பது எம்மீது ஆசீர்வாதம். படகில் இருக்கும் சிறந்த மனிதர் அவர்; நாங்கள் அவரை அகற்றப் போவதில்லை” என்றனர் பணியாளர்கள். எனவே அவர்கள் மூன்றாவது முறையாக சீட்டு எடுத்தார்கள், யூனுஸின் பெயரே மீண்டும்! பயணிகள் குழப்பமடைந்தனர். யூனுஸ் நபி இது அல்லாஹ்வின் தீர்ப்பு என்பதை அறிந்திருந்தார். தனது இறைவனின் அனுமதியின்றி தனது மக்களை விட்டுவிட்டு வந்ததுதான் இதற்குக் காரணம் என்பதாக உணர்ந்தார். யூனுஸ் கப்பலில் இருந்து இருண்ட கொடூரமான அலைகளுக்குள் குதித்தார்.
அல்லாஹ் கட்டளையிட்டபடி கடலில் உள்ள மிகப்பெரிய திமிங்கிலம் யூனுஸை விழுங்கியது. சுயநினைவின்றி இருந்த யூனுஸ் இருளால் சூழப்பட்டிருப்பதைக் கண்டு எழுந்தார்.
தனது கல்லறையில் தான் வந்தடைந்திருப்பதாக அவர் நம்பினார்; ஆனால் சற்று நேரத்தில் ஒன்று தெளிவானது. அவர் தனது கல்லறைக்குள் இல்லை. ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருப்பதை உணர்ந்தார்.
திமிங்கிலத்தின் ஆழமான வயிற்றில் இருந்த யூனுஸ் நபி அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து, “யா அல்லாஹ், இதுவரை யாரும் உனக்கு ஸஜ்தா செய்யாத இடத்தில், ஒரு மீனின் வயிற்றில் நான் உனக்கு ஸஜ்தா செய்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வை அழைத்தார், “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீ பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தேன்.” (21:87) ஆழ்கடலின் உயிரினங்கள் யூனுஸின் மனமுருகும் பிரார்த்தனையைக் கேட்டு திமிங்கிலத்தைச் சுற்றி ஒன்று கூடி அல்லாஹ்வின் புகழைக் கொண்டாடின.
இரக்கமுள்ள அல்லாஹ் யூனுஸின் மனந்திரும்புதலால் பெரிதும் ஈர்க்கப்பட்டான். தனது தூதரை அருகிலுள்ள கரையில் துப்புமாறு திமிங்கிலத்திற்கு கட்டளையிட்டான். திமிங்கிலம் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அருகில் உள்ள கரைக்குச் சென்று யூனுஸை வெளியேற்றியது. திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த அமிலங்களின் விளைவாக யூனுஸின் உடல் வீக்கமடைந்தது. சுடும் சூரியன், பலமாக வீசும் காற்று – இவற்றினால் யூனுஸுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே யூனுஸுக்கு பக்கத்தில் மீது நிழல் தரும் மரம் வளருமாறு அல்லாஹ் செய்தான். உணவும் நிழலும் அவருக்குக் கொடுக்குமாறு மரத்தைப் பணித்தான். அவரை மன்னிக்கும்படி நேர்மையான அழைப்பை யூனுஸ் விடுத்திராவிட்டால் மறுமை நாள் வரை திமிங்கிலத்தின் வயிற்றிலேயே இருந்திருக்க நேரிட்டிருக்கும் என்ற தகவலை அவருக்குத் தெரிவித்தான் அல்லாஹ்.
யூனுஸ் முழுமையாக குணமடைந்ததும், தனது பணியை முடிக்க நினிவேக்கு திரும்பினார். தனது சொந்த ஊருக்கு யூனுஸ் திரும்பி வந்ததில் நினிவே நகர மக்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். நினிவேயின் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். யூனுஸ் தனது மக்களுடன் சேர்ந்து தனது இறைவனுக்கு ஸஜ்தா செய்து அவருடைய அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
ஆகா ஷாஹித் அலி – ஆங்கிலத்தில் எழுதிய கஷ்மீரக் கவி. அரசியல் கவியாக இருந்தாலும், சமயம் மற்றும் கலாசாரக் கருப்பொருட்களில் இணக்கமாயிருந்தவர். அவரின் “தொழுகை விரிப்பு” என்னும் கவிதை மிகப்புகழ் பெற்றது. இஸ்லாமிய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் தொழுகையைப் பற்றிய இக்கவிதையை வாசிக்கும்போது விசுவாசமும் ஆனந்தமும் நிரம்பிய மனவுணர்வுடன் தொழுகை விரிப்பில் முழங்கால்படியிட்டு இந்தக் கவிதையில் ஏறக்குறைய நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. மதக் குறிப்புகள் மற்றும் படிமங்களைப் பயன்படுத்தி தொழுகைச் சடங்கின் வீரியம் மற்றும் முக்கியத்துவத்தின் உணர்வை கவிதையினுள் உருவாக்குகிறார் ஷாஹித். தனது பாட்டிக்கு கவிதையை அர்ப்பணிக்கும் ஷாஹித், ஹஜ்ஜின் வருடாந்திர விழாவை, மக்காவுக்கான முஸ்லீம் புனிதப் பயணத்தை, சோகம் மற்றும் சோர்வு ஆகியவற்றின் தொனிகளுடன் இணைக்கிறார்.
சென்ற வருடம் இக்கவிதையை மொழிபெயர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சியை கைவிட வேண்டியதாயிற்று. இன்று மாலை கவிதையை மீண்டும் மொழியாக்கம் செய்ய முயன்றேன். முயற்சி எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
தொழுகை விரிப்பு
தினத் தொழுகைகளுக்கு நடுவே அந்த ஐந்து இடைவெளிகள்
வீட்டின் பெண்கள் காய்கறிகளினூடே இழுக்கும் தடித்த இழைகள்
குளிர்காலத்துக்கென இலையுதிர் காலத்தில் உலரும் இஞ்சியின் ஜெபமாலை சலசலக்கும் மிளகாய்கள்
அந்த இடைவெளிகளில் மடிக்கப்படும் விரிப்பு – பாட்டி கொண்டுவந்த வரதட்சணையின் ஒரு பகுதி – ஆக, சாத்தானின் நிழல் புனிதம் குலைக்காமலிருக்க – கருஞ்சிவப்பில் நெய்த தங்க மினாராக்களுடன் மக்கா
பின்னர் சூரியாஸ்தமன பிரார்த்தனைக்கு அழைப்பு
வேலைக்காரர்களின் தொழுகை – அவிழ்க்கப்பட்ட வைக்கோல் விரிப்புகளில் அல்லது தோட்டத்தில்
கோடையில் புற்களின் மீது பிரார்த்தனைகள் முடிய விரும்பும் குழந்தைகள்
ஆபிரகாமுடைய தியாகத்தின் பட்டுக்கல்லை ஸ்பரிசித்த பெண்களின் நெற்றிகள்
சுவர்க்கத்திலிருந்து இறங்கிய கருப்புக் கல்லைச் சுற்றி வரும் வெள்ளையணிந்த பக்தர்கள்
இந்த ஆண்டு என் பாட்டி ஒரு யாத்ரீகர் மக்காவில் அவள் அழுகிறாள்
கல்லின் திரை விலக்கப்படுகையில் தூண்களைப் பிடித்துக்கொண்டு அவள் அழுகிறாள்