Author: Ganesh Venkatraman

  • சர்ச்சைகளுக்கும் மேலான ஒரு சுமாரான சவாரி


    நாவல் மீதான சட்டத் தடையை நீதி மன்றம் விலக்கிய பிறகு, The Satanic Verses என்ற சல்மான் ருஷ்டியின் மிகப் பெரும் சர்ச்சைக்குரிய நாவலை வாசிக்க நான் முடிவு செய்தேன். வாசிப்பு என்பது இங்கு இலக்கியரசனைக்காக மட்டுமல்ல. மாறாக, எழுத்துரிமைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைத்த ஒரு பெரிய எழுத்தாளருக்கு செலுத்தும் மரியாதையாகவும் இந்த வாசிப்பைச் செய்ய விரும்பினேன்.

    ஆனால் வாசித்தபின் ஏற்பட்ட உணர்வு — மிகமிகச் சுமாரான ஒரு நாவல். பல இடங்களில், “இதை ஏன் எழுதிச் செல்கிறார்?” என்ற கேள்வி எழாமல் இல்லை. வழக்கம்போல், ருஷ்டியின் உரைநடை சில இடங்களில் பிரகாசிக்கிறது. ஆனால் அந்த ஆற்றல் நாவல் முழுமையும் நிலைத்திருக்கவில்லை. மையமற்ற கதை சொல்லல், குழப்பமூட்டும் பாத்திரங்கள், உணர்வளவாக மனதில் ஒட்டாத பாகங்கள் போன்றவை நல்ல வாசிப்பனுபவத்துக்குத் தடையாக இருந்தன.

    நாவலின் முக்கியமான பாத்திரமான ‘இமாம்’ ஒரு முன்னாள் இரானிய மத-அரசியல் தலைவரின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்டிருக்கலாம். தன்மீதான நேரடி பதிவாக உருவாக்கப்பட்டிருப்பதால் எழுந்திருக்கக் கூடிய சொந்தக் கோபந்தான் ஃபத்வாவுக்கான காரணமோ என்றெண்ணத் தோன்றுகிறது. உண்மையில் அந்தத் தலைவர் அறுநூறுக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட நாவலை வாசித்துவிட்டாரா என்பது கேள்விக்குறியே!

    நாவல் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பதற்கு காரணமான பகுதிகளை மிக உன்னிப்பாக வாசித்தேன். இஸ்லாமின் வரலாறு, சமயவியல் பற்றித் தொடர்ந்து வாசித்தும் சிந்தித்தும் வருவதால் ஆசிரியரின் அணுகுமுறையை கூர்மையாக அவதானிக்க முடிந்தது. முதல் பாதியில் வரும் பகுதி அப்படி ஒன்றும் பிரச்னைக்குரிய பகுதியாக தோன்றவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பகுதி பிரச்னைக்குரியது. பாத்திரங்களுக்கு வைத்துள்ள உர்துப் பெயர்கள் முதல் Alternative History -உத்தியில் சில வரலாற்றுப் பாத்திரங்களை கற்பனையாக எழுதிச் சென்றிருக்கும் விதம் வரை – எக்காலத்திலும் சர்ச்சையை எளிதில் கவர்ந்திழுக்கக் கூடியவை. அவற்றை எழுதும் போதே சர்ச்சையைக் கிளப்பும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றால் அதனை naivety என்று அழைப்பதா? இல்லையேல் அதிக சர்ச்சை அதிக விற்பனை என்னும் மேற்கத்திய எழுத்துலகின் பாணியைக் கைக்கொண்டார் என்று சொல்வதா? மூன்றாவதாக, வரலாற்றையும் புனைவையும் பின்னுதலில் குறியீடுகள், மாய எதார்த்தம் ஆகிய இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி பின்னர் வந்த நாவல்களில் வெளிப்பட்ட (Shalimar the Clown, The Enchantress of Florence) எழுத்துவன்மை இந்த நாவலில் கைகூடாததால் விளைந்த விபத்தா? இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் எழுத்தாளரின் இளமைக்கால அசட்டு தைரியம் என்றுதான் கூறத் தோன்றுகிறது. சர்ச்சைகள் மட்டுமே ஓர் இலக்கியத்தை உயர்த்த முடியாது. ஒரு வாசகராக எனக்கு இந்த நாவல் ஒரு இலக்கிய அனுபவத்தை நல்கவில்லை.

  • The unread document : Leadership potential, lost in translation (to the Nephew of the Independent Director)

    Having started as a sales executive in an exports department of a SME, I do realise that I have come a long way. The career had its share of vicissitudes and highs. But it was full of dynamic changes. There was learning in every step of the way. I was sent to pick-up a visiting Taiwanese customer from the airport and to take him to a hotel. This was in 1995 when I was part of export department of a small company. I was persevering to form the English sentences carefully in my mind before uttering them to my Taiwanese Guest. My effort to enter into a coherent and interesting conversation did end interestingly. He gifted a beautiful pen and wished me well. On another occasion, I was asked to draft a letter to an American client who had lodged a big quality claim on our company. My boss had scribbled a few points very sketchily from which I prepared a three-paged decent letter under less than an hour. One step led to the other. I got a chance to work as exports executive in a food processing company in 1996. There were fax messages and regular long distance calls in English. Life indeed had changed. The baby now knows how to stand. My very first export order was secured on the basis of a fax drafted with a mistake in the price. My employer gracefully accepted to execute the order with a clear loss. That taught me to remain on alert even if one walks through the most familiar path. I was chosen the Best Employee in the very next year and was rewarded with a decent sum. The career slowly took shape; the shape becomes better and beautiful when the potter’s hands are skilled. The Skill comes forth when the hands continuously practise. 

     

    The most fulfilling career moments are when knowing that our learning and its implementation has resulted in the betterment of the organisation that we work for. The experience of having managed a warehousing operation in Europe helped in another job when European Warehousing Costs almost caused the closure of Stock and Sale operations. Tight stock management and time- managing the export shipments resulted in halving the costs and doubling the turnover. The bitter episode of losing a valuable customer due to inadequate technical support made me realise that the sale of speciality ingredients is not similar to selling a commodity. The Business person cannot be a catalogue salesman. He has to have the feel of the product he is trying to sell. A flavour salesman has to know the difference between top note and back note. A nutritional premix salesman has to be able to explain how RDA values are converted into a recipe. A fruit syrup salesman has to know the fruit content in his product. The adeptness of dealing with a number crunching Buyer of commodities will not help when it comes to dealing with R&D person who is working on a new project. The potter’s perseverance paid off eventually. When I am frequently posed the question “Are you a Food Technologist?”; I always resist the temptation to say yes. 

     

    +++++

     

    Someone had shared a quote somewhere recently; “If you do not know where you will be in the next 5 years, you are already there”. The words have been collated so beautifully into making an undisputable, powerful statement that also prompts the reader to ponder on where he stands right now in his career path.

     

    As a person in mid-forties, with a decade and a half remaining in active career, what kind of move could push me to the next level, both as a professional and as a person who seeks self-actualisation? Would I retire as a tired Business Development Professional? Is the career alley leading to its dead end?

     

    +++++

     

    How are profits made? Fetching higher prices is the most obvious answer for a Salesperson. The answer will keep changing depending on whom this question is posed to. Buying at better prices; acquiring the right technologies; reducing the labor; managing the finances well, etc. One question; but the answers are in multitude. Despite religions being in multiples, the God is always One. In the temple of commerce, every participant is a priest. Like any other temple, the reverence is the mood; Sincerity is always in the air.  

     

    So far I had always made profits for my employers by selling well. Can I continue to do that in different ways? Perhaps, looking at the ground from an elevation is one such possibility. Like that silent bird which flies at a height could inspire its chicks to unfold the wings. Like that roving bird in the sky could save the chicks from being snatched away by that cunning small animal. Do I have what it takes to be the Bird? The most beautiful birds that are alluring to the senses normally do not fly high. To remain in sight is their number one priority. When they think of the ability to fly long and far, they fear losing the looks and the frame; the transformation is the word they dread about the most. For me, the bird means flying. Losing the current pace for attaining higher momentum is a price that a bird should always be willing to pay at each stroke of its wings. 

     

    +++++

     

    Henry David Thoreau said “If you have built castles in the air, your works need not be lost; that is where they should be. Now put the foundations under them” I would like to do the reverse. Foundations are solid and steady. I would now like to learn the castle building.

    Epilogue :

    The writer of this document lost it forever. But fate, with its impeccable sense of irony, had other plans.

    Eight years after the job was filled (by none other than the nephew of the company’s Independent Director, of course), the document resurfaced in the most unexpected of places—buried deep within an old company file, sandwiched between a cafeteria menu and an outdated fire drill procedure. Who found it? The very nephew who had landed the job.

    In a gesture that was either noble or just plain mischievous, he passed it on to his son, a budding MBA student, hoping it might come in handy for his HR case study. After all, why let a good piece of writing go to waste when it could fetch a few academic brownie points?

    The professor, intrigued by the document’s eloquence and detailed career trajectory, skimmed through it and raised the obvious question:

    “Did this applicant at least get screened?”

    The student, without missing a beat, replied with a grin,

    “That wouldn’t have happened, Professor. My father prefers living a fiction in real life rather than writing it!”

    And thus, the unread document finally got read—just in the wrong place, at the wrong time, by the wrong audience.

    Courtesy – Kitaab.org

  • பிச்சைக்காரர்கள்————————-

    அந்தக் குவியலில் இருந்ததை
    நீ அறிந்திருக்கவில்லை
    அது பிச்சைக்காரர்களைக் கொண்டிருப்பதாய்
    ஒரு பார்வையாளன் கண்டான்
    அவர்கள் தமது உள்ளங்கைகளின்
    வெற்றிடத்தை விற்கிறார்கள்

    பார்வையாளனுக்கு அவர்கள்
    அழுக்கு படிந்த தமது வாயை காண்பிக்கிறார்கள்;
    அவர்களைத் தின்று கொண்டிருக்கும் சொறிவகையை
    (அவனால் முடியக்கூடிய) பார்வைக்களிக்கிறார்கள்

    அவர்களின் திரிந்த பார்வையில்
    அவனின் அந்நிய முகம் கோணுகிறது;
    தங்களின் சேர்க்கையில் அவர்கள் மகிழ்கிறார்கள்,
    அவன் பேசுகையில் அவர்கள் உமிழ்கின்றனர்.

    – Rainer Maria Rilke

    தமிழாக்கம் : அடியேன்

  • சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி – எமிலி டிக்கின்ஸன்

    சாலையில் தனித்து அலைந்து திரியும்
    இந்தச் சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!
    தொழிற்கள் குறித்து கவலையின்றி,
    அவசரங்களைக் கண்டு பயப்படாமல் !
    அதன் தனிமப்பழுப்பு நிற உடையைத்தான்
    கடந்து செல்லும் இப்பிரபஞ்சமும் அணிந்துள்ளது.
    சூரியனைப் போல சுதந்திரமாக,
    இணைந்தோ அல்லது தனியே ஒளிர்ந்தோ,
    சாதாரண எளிமையில்
    முழுமையான ஆணையை நிறைவேற்றுகிறது


    எமிலி டிக்கின்ஸன்

  • மத்திய கிழக்கு

    வானொலி அலைகளினூடே
    பதின்பருவத்தில்
    என் பிரக்ஞையில் நுழைந்தது
    மத்திய கிழக்கு

    ஏற்றுமதி வாடிக்கையாளனின்
    அலுவலகத்தில் சிறையுண்ட அனுபவம்
    ஏமனில் நிகழ்ந்தது

    வேலையிலிருந்து துரத்தி
    என் வலிமையை சோதித்தது
    ஷார்ஜா ஒரு முறை

    பையில் நிறைந்திருந்த
    திர்ஹம்களை
    மேஜையில் கொட்டி
    சரக்கு எப்போது வரும்
    என்று வினவிய ஜோர்டான் காரன்
    பலமுறை எனை அழைத்து
    என் வேலை குறித்து கேட்ட கரிசனம்

    கதார்க்காரனின்
    தாராள மனதை உணரக் கிடைத்தது
    தம்மாம் செல்லும்
    பஹரைனின் கடற்பாலத்தில்

    கூடப்பயணஞ் செய்த
    கோழிக்கோட்டு பெண்ணொருத்தி
    அபுதாபிக்காரனை கைபிடித்த
    கதையைக் கேட்டது
    ஒமானிய விமானத்தில்

    என் முறை வந்தபோதும்
    என்னை கவனிக்காமல்
    ரஸ் அல் கெய்மாக்காரனை
    கவனித்துவிட்டுப் பின்னர்
    எந்த ஐஸ்க்ரீம் வேணும்
    என்று எதியோப்பிய விற்பனைப் பெண் கேட்டது
    துபாய் மாலில்

    பல நிற அனுபவப் பரிசினை
    எனக்கு நல்கிய மத்தியக் கிழக்கு
    நாவல்களில்
    கவிதைகளில்
    சமய இலக்கியங்களில்
    இன்னமும் தொடர்பில் இருக்கிறது

    முகப்புச் செய்தி
    வாயிலாக அதை அறிய
    எனக்கு விருப்பமில்லையென
    எத்தனை முறை சொன்னாலும்
    அதற்குப் புரிவதில்லை

  • குருதி – Naomi Shihab Nye

    Naomi Shihab Nye – எனக்கு மிகப்பிடித்தமான கவிஞராகி வருகிறார். அவர் எழுதிய Blood கவிதையை மொழிபெயர்க்க விரும்பினேன். பாலஸ்தீனிய வம்சாவளியில் வந்த அமெரிக்கர் அவர். அமெரிக்கரா அரபியா என்ற அடையாளக் குழப்பம் அவருடைய கவிதைகளில் அடிக்கடி நிகழும் கருப்பொருள். Blood கவிதையிலும் இதே குழப்பம் தொடர்ந்தாலும், என்ன அடையாளம் கொண்டிருந்தாலும் “உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்” என்ற கடைசி வரியில் அடையாளத்தை தாண்டிய மனிதத்தை நோக்கி கவிதை பயணிக்கிறது.

    குருதி

    “ஓர் அசல் அரபிக்கு கைகளினால் ஈயைப் பிடிக்கத் தெரியும்”
    என் தந்தை சொல்வார். நிரூபிக்கவும் செய்வார்,
    ஈக்கொல்லியை ஏவ நிற்கும் விருந்தோம்பியின் கை சுழலும் முன்பே
    இரைச்சலிடும் பூச்சியை நொடியில் கையில் இறுக்கிக் கொள்வார்

    பாம்புகள் போன்று வசந்தங்களில் உள்ளங்கைகள் தோலுரிக்கும்
    தர்பூசணி ஐம்பது நோய்களுக்கு தீர்வு என்று உண்மையான அராபியர் நம்புவர்
    சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு இவற்றை மாற்றிக்கொண்டேன்.

    ஒரு பெண் கதவைத் தட்டி
    அந்த அரபியைச் சந்திக்க விரும்பினாள்
    இங்கு யாருமில்லை என்று சொன்னேன்
    அதற்குப்பின், என் தந்தை தாம் யாரென எனக்குச் சொன்னார்
    “ஷிஹாப்”-”சுடும் நட்சத்திரம்”
    நல்ல பெயர், வானத்திலிருந்து பெற்றது
    ஒரு முறை சொன்னேன் – “நாமிறக்கும் போது, அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோமா?
    ஓர் அசல் அரபி அதைத்தான் சொல்வான் என்றார்.

    இன்று தலைப்புச் செய்திகள் என் குருதியை உறைய வைக்கின்றன
    ஒரு சின்ன பாலஸ்தீனியன் முகப்புப் பக்கத்தில் சரக்கு வண்டியைத் தொங்கவிடுகிறான்
    அடிவேரிலா அத்தி மரம், மோசமான வேரின் பேரழிவு எங்களுக்கு மிகப்பெரிது.
    எந்தக் கொடியை நாம் அசைப்பது?
    நீலத்தில் பின்னிய மேசைத்துணியிலான
    கல்லையும் விதையையும் சித்திரிக்கும் கொடியை அசைக்கிறோம்

    என் தந்தையை அழைக்கிறேன்,
    செய்திகளைச் சுற்றிச்சுற்றியே எம் பேச்சு,
    அவருக்கு அது மிக அதிகம்
    அவரின் இரு மொழிகளாலும் அதை அடைய முடியவில்லை
    ஆடு, மாடுகளைத் தேடி நான் வயற்புறங்களுக்குச் செல்கிறேன், காற்றோடு புலம்ப:
    யார் யாரை நாகரீகமானவர் என்றழைப்பது?
    அழும் இதயம் எங்கு சென்று மேயும்?
    உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்?

  • உரிமையாளன் மீட்டுக் கொள்வான்

    நேற்று எழுதிய ரம்ஜான் போஸ்டைப் படித்த பிறகு நண்பர் நிஷா மன்சூர் தொலைபேசியில் அழைத்தார். நேற்று எழுதிய “காபா காக்கப்பட்டது” இடுகையில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது என்றார். இந்த விடுபடலின் காரணத்தால் போஸ்ட் சற்று எதிர்மறையாக தொனிப்பதாகச் சொன்னார். ஒரு முக்கியமான தகவலும் விட்டுப் போயிருந்தது. அப்ரஹா அழைத்துப் பேசும் மக்காவின் தலைவர் “முத்தலிப்” என்று இடுகையில் சொல்லியிருந்தேன். அப்துல்-முத்தலிப் இப்னு ஹாஷிம் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும், நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்தின் தாத்தாவாகவும் இருந்தார். மக்காவில் உள்ள பெரும்பாலான மக்களைப் போலவே, அவர் குரைஷ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

    மக்காவை நெருங்கி வந்த ​​அப்ரஹா தனது படையினருக்கு அளித்த முதல் உத்தரவு – கால்நடைகளைத் தாக்குவது. அவர்கள் முத்தலிப்பின் ஒட்டகங்களில் பலவற்றை எடுத்துச் செல்கின்றனர். மன்னர் தனது வீரர்களில் ஒருவரை மக்காவிற்கு அனுப்பி அப்துல்-முத்தலிப்பைச் சந்திக்கப் பணித்தான். அந்த வீரன், “நீங்கள் முதலில் அவருடன் சண்டையிடாவிட்டால் அவர் உங்களுடன் சண்டையிட இங்கு வரவில்லை என்று சொல்ல ராஜா என்னை அனுப்பியுள்ளார். மாறாக, அவர் இந்த இல்லத்தை (அதாவது கஃபாவை) அழிக்க வந்திருக்கிறார். பின்னர் அவர் இந்த நகரத்தை விட்டு வெளியேறிவிடுவார்” என்றான். அப்துல்-முத்தலிப், “எங்களுக்கு அவருடன் சண்டையிடும் திறன் இல்லை. நாங்கள் அவரை எதிர்கொள்ள முயற்சிக்க மாட்டோம்” என்றார்.

    அப்ரஹாவின் தூதன் அப்துல்-முத்தலிப் உடன் அப்ரஹாவிடம் திரும்பி வந்தான். அப்துல்-முத்தலிப் ராஜாவின் அறைக்குள் நுழைந்தபோது, அப்ரஹா அவரைப் பாராட்டி கௌரவித்தான். பின்னர் அவன் மொழிபெயர்ப்பாளரிடம், “அவருடைய தேவையைப் பற்றிக் கேளுங்கள்” என்று கூறினான். மொழிபெயர்ப்பாளர் கேட்டதற்கு பதிலளித்த அப்துல்-முத்தலிப், “தாக்குதலின் போது என்னிடமிருந்து பறிக்கப்பட்ட இருநூறு (200) ஒட்டகங்களை எனக்குத் திருப்பித் தர வேண்டும் என்பதுதான் எனது தேவை.” என்று சொல்கிறார்.

    அப்ரஹா தனது மொழிபெயர்ப்பாளரிடம், “அவரிடம் சொல்லுங்கள்: நான் உங்களை முதன்முதலில் பார்த்தபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் இப்போது நான் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்கவில்லை. உங்கள் மதத்தில் நீங்கள் புனிதமாகக் கருதும் ஒன்றை அழிக்க வந்தேன், அதைப் பற்றி நீங்கள் என்னுடன் விவாதிக்கவில்லை, மாறாக கடத்தப்பட்ட ஒட்டகங்களைப் பற்றி பேசுகிறீர்கள்!”

    அப்துல்-முத்தலிப் பதிலளித்தார் – “நான் ஒட்டகங்களின் எஜமானன் (உரிமையாளர்); இந்த வீட்டைப் பொறுத்தவரை, அதாவது, கஃபாவைப் பொறுத்தவரை, அதைப் பாதுகாக்கும் ஓர் இறைவன் இருக்கிறார்.”

    அப்ரஹா தனது ஒட்டகங்களை அவரிடம் திருப்பி அனுப்பிவிடுகிறான். மக்காவுக்குச் செல்லும் வழியில் படை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அஞ்சி அப்துல்-முத்தலிப் குரைஷிகளை மலைகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர் சொன்ன படி மக்காவாசிகள் செய்கின்றனர்.

    இது நடந்த பின்னர் தான், அப்ரஹா யானையை காபாவை நோக்கி செலுத்தச் செய்கிறான். தவற்றைச் சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி.

    காபா காக்கப்பட்டது

  • இப்னு கல்துனின் சுழற்சிக் கோட்பாடும் இஸ்லாமிய இறையியலுடன் அதன் தொடர்பும்

    இப்னு கல்துன் (1332–1406) – னுடைய magnum opus என்று கருதப்படும் “முகாதிமா” நூலில் நாகரிகங்களின் (அதாவது வம்சங்களின், அரசுகளின், ஆட்சி அமைப்புகளின்) எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு சுழற்சி வரலாற்றுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கருத்துக்கள் இஸ்லாமிய இறையியலில், குறிப்பாக தெய்வீக விருப்பம், நீதி (‘adl’) மற்றும் உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை (dunya) ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றியிருந்தன.

    இப்னு கல்துனின் சுழற்சி வரலாற்றுக் கோட்பாடு

    நாகரீகங்கள் அவற்றின் தவிர்க்க முடியாத வீழ்ச்சிக்கு முன் மூன்று முக்கிய நிலைகளைக் கடந்து செல்கின்றன என்று இப்னு கல்துன் முன்மொழிந்தார்:

    1. எழுச்சி (நாடோடி வலிமை & Asabbiya ) – நாகரிகங்கள் வலுவான Asabbiya (சமூக ஒற்றுமை) கொண்ட ஒரு குழுவுடன் தொடங்குகின்றன. பாலைவன பழங்குடியினர் அல்லது போர்வீரர் குழுக்களிடையே பெரும்பாலும் காணப்படும் இந்த ஒற்றுமை, அவர்களை வெற்றி பெற்று ஆட்சியை நிறுவ துணை செய்கிறது. புதிய ஆளும் வர்க்கம் எளிமை, ஒழுக்கம், நீதி உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டு எழுச்சியடைகிறது.

    2. சிகரம் (அதிகாரத்துவ ஸ்திரத்தன்மை / செழிப்பு) – ஆட்சிக்கு வந்ததும், ஆளும் உயரடுக்கு அதிகாரத்தை மையப்படுத்தி நிர்வாக நிறுவனங்களை உருவாக்குகிறது. பொருளாதாரம், கலைகள், கலாச்சாரம் செழித்து வளர்கிறது. இருப்பினும், ஆட்சியாளர்கள் ஆடம்பரத்திலும் வசதியிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக மாறும்போது Asabbiya பலவீனமடையத் தொடங்குகிறது.

    3. சரிவு (ஊழல் மற்றும் ஒற்றுமை இழப்பு) : ஆட்சியாளர்கள் தங்கள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, பழங்குடி வீரர்களுக்குப் பதிலாக கூலிப்படையினரை நம்பியிருக்க்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றனர். ஊழல், அநீதி, அதிக வரிவிதிப்பு ஆகியவை அரசை பலவீனப்படுத்துகின்றன. இறுதியில், வலுவான Asabbiya-வுடன் ஒரு புதிய குழு உருவாகிறது. பழைய வம்சத்தை தூக்கியெறிந்து, சுழற்சியை புதிதாகத் தொடங்குகிறது.

    இஸ்லாமிய இறையியல் தொடர்புகள்

    1. உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை – உலக அதிகாரம் தற்காலிகமானது என்ற குர்ஆனியக் கருத்தை இப்னு கல்தூனின் சுழற்சி பிரதிபலிக்கிறது:

    “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகிறாய்”

    குர்ஆன் 3:26)

    நாகரிகங்கள் உயர்ந்து வீழ்ச்சியடைவது போல, செல்வமும் அதிகாரமும் அல்லாஹ்வின் சோதனைகள் (ஃபித்னா, குர்ஆன் 8:28).

    2. ஒழுக்கம், நெறிமுறை தலைமைத்துவம் – இஸ்லாமிய இறையியல் நீதி (‘adl’)யை வலியுறுத்துகிறது. ஆட்சியாளர்கள் நீதியைக் கைவிட்டு ஊழல் செய்யும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்னும் இப்னு கல்தூன் கோட்பாடு குர்ஆனின் எச்சரிக்கையுடன் ஒத்துப்போகிறது:

    “அல்லாஹ் நம்பிக்கைப் பத்திரங்களை அவை யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கும்படியும், மக்களிடையே நீங்கள் தீர்ப்பளிக்கும்போது நீதியுடன் தீர்ப்பளிக்கும்படியும் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.” (குர்ஆன் 4:58)

    3. தெய்வீக விருப்பத்தின் பங்கு (Qadar) – இப்னு கல்துனின் கோட்பாடு சமூக, பொருளாதார சக்திகளை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், வரலாறு தெய்வீக விருப்பத்தின்படி (Qadar) விரிவடைகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், ஊழ்வலி வாத விளக்கங்களைப் போலல்லாமல், மனித agency-யை வலியுறுத்தினார் – சமூகங்கள் அவற்றின் சொந்த தார்மீகச் சிதைவின் காரணமாக வீழ்ச்சியடைகின்றன, முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளினால் அல்ல.

    4. மனநிறைவுக்கு எதிரான எச்சரிக்கைகள் – வெற்றியில் விளையும் ஆணவம், மனநிறைவுக்கு எதிராக குர்ஆனும் ஹதீஸும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றன. ஆட்சியாளர்கள் மிகவும் வசதியடைந்து, நீதியுணர்வை இழந்துவிடும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்று இப்னு கல்துன் குறிப்பிட்டார். – “எத்தனையோ ஊர்களை – அநியாயம் செய்த நிலையில் அவற்றை நாம் அழித்திருக்கிறோம்; அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் பாழ்பட்டுக் கிடக்கின்றன.” (குர்ஆன் 22:45)

    #ரம்ஜான்போஸ்ட் : 8.3.2025

  • காபா காக்கப்பட்டது

    இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா பிரதேச பொருளாதாரத்தின் முக்கிய அங்கம்.

    அப்போது ஏமனில் உள்ள சனாவை ஆட்சி செய்த அபீசீனியாவை பூர்வீகமாய்க் கொண்ட மன்னன் அப்ரஹாவுக்கு காபாவுக்கு இணையாக வேறொரு புனித த்தலத்தை கட்டி விட வேண்டும் என்ற எண்ணம். சினாயில் ஒரு தேவாலயத்தை அமைத்து, அதை அல்-குலைஸ் எனப் பெயரிட்டான். அரபு யாத்திரிகர்கள் மக்காவின் கஅபாவில் திரளாமல், அல்-குலைஸில் திரளச் செய்ய வேண்டும் என்று எண்ணினான். காபாவை அழித்தால் தான் இது சாத்தியம் என ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு காபாவை நோக்கிப் புறப்பட்டான்.

    காபாவின் வாயிலுக்கு சற்று தூரத்தில் நல்ல கூட்டம். குரைஷிகள் எதிர்க்கத் தயாராக நிற்கிறார்கள் என்று தோன்றியது! முத்தலீப் என்ற அவர்களின் தலைவர் அப்ரஹாவைச் சந்தித்து தமது கால்நடைகளை கூட்டிக் கொண்டு மக்காவின் மலைப்பிரதேசங்களுக்குச் சென்று விடுவதாகவும் தமது மக்கள் குழுவைத் தாக்க வேண்டமென்றும் கேட்டுக் கொண்டார். அப்ரஹாவுக்கு ஓரே சிரிப்பு! “சரியான பயந்தாங்கொள்ளிகள் இவர்கள்” என்று நினைத்துக் கொண்டான்.

    அவனிடம் மிகப் பிரம்மாண்டமான ஆப்ரிக்க யானை ஒன்று இருந்தது. அதனை அடக்கி தன் படையின் பிரதம யானையாக வைத்திருந்தான். குரைஷிகள் நகரை விட்டு விலகிச் செல்லும் முன் படைகளை அனுப்பாமல் தனது பிரதம யானையை காபாவை நோக்கி முன்னகர்த்தினான். அப்போது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. தனது கால்களை மடக்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டது யானை. படை வீரர்கள் அதனை எழுப்பி ஓட வைக்க முயன்றனர். யானையோ ஏமன் போகும் திசையில் ஓடத் துவங்கியது. அதனைப் பிடித்து காபாவின் திசையில் துரத்தினாலோ அது சில அடிகள் ஓடி மறுபடியும் நின்று விட்டது. அதே சமயம் வானில் திடீரென ஆயிரக்கணக்கில் கடற் பறவைகள்! அவற்றில் அலகிலும் கால்களிலும் சிறுசிறு கற்கள்! வானிலிருந்து அப்ரஹாவின் படைகள் மீது கல் மழை! கற்களின் அளவு பச்சைப் பட்டாணியின் அளவாக இருந்தாலும் யார் மீதெல்லாம் அக்கற்கள் பட்டனவோ அவர்கள் வலியில் துடித்தனர். ஒரு சிலரின் கண்களில் கற்கள் பட்டு பார்வையிழந்தனர். அப்ரஹா திகைத்தான். “குரைஷிகள் ஓடி விட்டனர்! பறவைகளின் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை! யார் ஏவுகின்றனர் இவர்களை?” – படைகள் பயந்து போய் பின் செல்லத் தொடங்கின. அப்ரஹா அவர்களை ஓட வேண்டாமெனச் சொன்னான். அவனது வீர ர்கள் பயந்திருந்தனர். ஏமனை நோக்கித் திரும்பி ஓடினர். அவர்கள் கடந்து வந்த ஒவ்வொரு நிலத்திலும் அவர்களின் உடல் பாகங்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. அப்ரஹாவின் விரல் நுனிகள் விழத் தொடங்கின. ஒவ்வொரு விரல் நுனியும் விழுந்த பிறகு, அதைத் தொடர்ந்து சீழும் இரத்தமும் வெளியேறியது. அவர்கள் யேமனை அடைந்தபோது வெகு சிலரே எஞ்சியிருந்தனர். சில நாட்களில் அப்ரஹா இறந்து போனான்.

    பின் வந்த சில பத்தாண்டுகளில் காபாவின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கப் போகும் நபியின் பிறந்த ஆண்டில் நடந்தது இது. காபாவின் அருகில் வாழ்ந்தவர்கள் பலதெய்வவாதிகள் – சிலைகளை வணங்கியவர்கள். அப்ரஹாவினுடைய படைகளின் அழிவு என்னும் அற்புத அடையாளம் – காபாவினருகில் வாழ்ந்தவர்களுக்காக அல்ல – அதே ஆண்டில் பிறந்த நபிக்காக நடந்தது.

    “நபியே! யானை(ப் படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கிவிட்டான்.” (105:1-5)

    ரம்ஜான்போஸ்ட் – 6.3.25

  • ஆன்மாவைப் பற்றி

    இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்).

    மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,
    அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா

    இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்
    தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது

    அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றன
    கூண்டோ வலிமையானது!

    அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,
    உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்து
    அது முடக்கப்பட்டுள்ளது.

    அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம் இது,

    திரை விலக்கப்பட்டு, மகிழ்ச்சியுடன் முணுமுணுத்தவாறு
    விழித்திருக்கும் கண்களால் காண முடியாதவற்றை நோட்டம் விடுகிறது

    புகழ்க்கீதம் பாடி உயரங்களுக்குத் திரும்புகிறது
    உலகில் இருந்தவரை மறைக்கப்பட்டவைகளை உணர்ந்தவாறே திரும்பினாலும் அதன் உடையில் கறைகள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

    இத்தனை உயரத்தில் இருந்து அது ஏன் அவ்வாறு வீசப்பட்டது
    இருண்ட, மந்தமான, ஆழ்ந்த அடித்தளப் பள்ளத்திற்கு?

    ரம்ஜான்போஸ்ட் : 3/3/2025