கையில் ஒளிந்த சீட்டு,
இதயங்களை உடைக்கும் ஒளிர்வு,
கூடுதல் நேரத்தில் அடித்த கால்பந்திலக்கு,
வஞ்சகனின் வெள்ளி நாவு,
துறவியின் காலைப் பிரார்த்தனை,
நிறுவனத் தலைவனின் கரும் லட்சியம்,
தாயின் கடுமையான அன்பு –
இவ்வனைத்திலும் இருப்பவன் நானே!
சிறப்பு என்பது என் சாயல் –
தங்கத்தில் எழுதப்பட்டாலும்
நிழலில் செதுக்கப்பட்டாலும்
கோயில்களில் என்னைத் தேடுகிறாயா? கூர்ந்து பார்—
ஒவ்வொரு பிரகாசமான விஷயத்தின் பின்னிருக்கும் பிரகாசம்
வெற்றியாளரின் நெஞ்சில் நிறையும் வெற்றி
இவ்வுலகையே வளைக்கும் எஃகுத் தீர்மானம் – அனைத்தும் நானே
ஊழல் என நீ அழைப்பதிலும்,
பிரகாசமாய் எரியும் என் சக்தி.
திசையைத் தேர்வது – உள்ளது உன்னிடம்
—
(கீதையின் பத்தாம் அத்தியாயத்தில் வரும் முப்பத்தியாறாம் செய்யுளை வாசித்தவுடன்)
Leave a comment