யதார்த்தத்தின் நிறம்.
இருட்டு, வெளிச்சம் – இவற்றின்
கலவை.
களைத்துப் போன வானம்
போர்த்திக்கொள்ளும் அமைதி.
ஒளிரும் பகலை
தன் கைகளால் தாழடைக்கும்
இரவின் நிழல்.
இளம் கருநிறச்சாயலில்
மெல்ல கட்டவிழும் பதாகை.
கனிந்த, முதிர்ந்த இசைக்குள் ஐக்கியமாகப் போகும்
இளம் சுருதி.
அதிரப் போகும் இடி மற்றும்
பெய்யப் போகும் மழைக்கான அறிகுறி.
சொற்களின் செயல்களின் நிறம்.
கறுப்புமின்றி வெளுப்புமின்றி
இரண்டுக்கும் நடுவிலான
சாம்பல் நிறம் ; ஒப்புதலின் நிறம்.
(பேராசிரியர் மாலதி மாதுர் எழுதிய ஆங்கில கவிதை – “Grey”- யின் தழுவல்)
நன்றி : மாற்றுப்பிரதி (http://maatrupirathi.blogspot.in/2012/10/blog-post_9.html)