ஓவியப்பெண்

நன்னம்பிக்கை
நெடுநாள் காத்திருப்பு முடிவடையும்.
ஓவியப்பெண் முகம் திரும்பாமலேயே
வேறு அருங்காட்சியகத்துக்கு போய்விடுவாள்.
வீட்டுக்கு இன்று திரும்பிப்போய்
"தண்ணி"யடிக்கவேண்டும்

கஞ்சத்தனம்
ஓவியப்பெண் உடையணியாமாலேயே
நிதர்சனமாய் பிரசன்னமானாள்.
சட்டகத்துக்கு நேர்கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்தவனை
காபி பருக அழைத்தாள்.
"காபி சரி. அப்புறம் உடை வாங்கித்தா என்று கேட்காதே"

சுயநலம்
சட்டகத்துள் நிர்வாணமான முதுகைக்காட்டி
சொரிந்து விடுமாறு கேட்டுக்கொண்ட
ஓவியப்பெண்ணை யாரும் செவிமடுக்கவில்லை !
"பாவிகள்…என்னை வரைந்த ஓவியனின் பிரஷை
ஏலத்தில் போட்டுவிட்டார்கள்"

ஜீவகாருண்யம்
ஓவியன் என்னை சேர்த்து
ஓர் எறும்பையும் வரைந்துவிட்டான்.
சாய்வாக குப்புற படுக்கவைத்து
கொஞ்சம் எனக்கு வசதி பண்ணித்தந்த ஓவியன்
பாவம், எறும்பை சுவரில் ஏற வைத்துவிட்டான்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.