அந்தக் குவியலில் இருந்ததை
நீ அறிந்திருக்கவில்லை
அது பிச்சைக்காரர்களைக் கொண்டிருப்பதாய்
ஒரு பார்வையாளன் கண்டான்
அவர்கள் தமது உள்ளங்கைகளின்
வெற்றிடத்தை விற்கிறார்கள்
பார்வையாளனுக்கு அவர்கள்
அழுக்கு படிந்த தமது வாயை காண்பிக்கிறார்கள்;
அவர்களைத் தின்று கொண்டிருக்கும் சொறிவகையை
(அவனால் முடியக்கூடிய) பார்வைக்களிக்கிறார்கள்
அவர்களின் திரிந்த பார்வையில்
அவனின் அந்நிய முகம் கோணுகிறது;
தங்களின் சேர்க்கையில் அவர்கள் மகிழ்கிறார்கள்,
அவன் பேசுகையில் அவர்கள் உமிழ்கின்றனர்.
– Rainer Maria Rilke
தமிழாக்கம் : அடியேன்