சின்ன வயதில்
எதிர்காலத் தேடல்
முது வயதில்
பழங்காலத்தை நாடல்
முன்னோக்கி ஓடும் இளமை
பின்னோக்கித் தாவ முயன்று
நிகழ் காலத்தின் சுவரில் மோதி
ஊமைக்காயமுறும் முதுமை
சின்ன வயதில்
எதிர்காலத் தேடல்
முது வயதில்
பழங்காலத்தை நாடல்
முன்னோக்கி ஓடும் இளமை
பின்னோக்கித் தாவ முயன்று
நிகழ் காலத்தின் சுவரில் மோதி
ஊமைக்காயமுறும் முதுமை
சின்ன வயதில்
எதிர்காலத் தேடல்
முது வயதில்
பழங்காலத்தை நாடல்
முன்னோக்கி ஓடும் இளமை –
பின்னோக்கித் தாவ முயன்று
நிகழ் காலத்தின் சுவரில் மோதி
ஊமைக்காயமுறும் முதுமை
A Book
“He ate and drank the precious words,
His spirit grew robust;
He knew no more that he was poor,
Nor that his frame was dust.
He danced along the dingy days,
And this bequest of wings
Was but a book. What liberty
A loosened spirit brings!”
(XXI)
புத்தகம்
மதிப்புமிக்கச் சொற்களை தின்று குடித்துவிட்டான்
அவனின் ஆன்மவுணர்வு பெருக்கெடுத்து வளர்ந்தது
அதற்குப்பின், தான் ஏழை என்பதை மறந்துவிட்டான்
அவனின் தேகம் உடைந்துவிழுவது என்பதையும்
மங்கலான நாட்களை ஆடிக்கழிக்க முடிந்தது
பெற்ற இறக்கைகள் புத்தகமன்றி வேறில்லை
இறுக்கம் களைந்த ஆன்மா கொணரும்
சுதந்திரமே சுதந்திரம்!
—
“I had no time to hate, because
The grave would hinder me,
And life was not so ample I
Could finish enmity.
Nor had I time to love; but since
Some industry must be,
The little toil of love, I thought,
Was large enough for me.”
வெறுக்க நேரமில்லை என்னிடம், ஏனெனில்
கல்லறை என்னைத் தடுக்கும்
மற்றும், வாழ்க்கை மிதமிஞ்சியதாக இல்லை
என் பகையை தீர்த்துக்கொள்ளுமளவிற்கு.
நேசிக்கவோ நேரமே போதவில்லை, ஆனால்
கொஞ்சம் மெனக்கெடல் அவசியமென்பதால்
அன்பிற்கான சிறு உழைப்பு மட்டும்
எனக்கு போதுமானதாய் இருந்தது என்றெண்ணினேன்
(XXII)
—
Unreturning.
‘T was such a little, little boat
That toddled down the bay!
‘T was such a gallant, gallant sea
That beckoned it away!
‘T was such a greedy, greedy wave
That licked it from the coast;
Nor ever guessed the stately sails
My little craft was lost!”
(XXIII)
திரும்பாதிருத்தல்
குடாக்கரையில் தள்ளாடும்
இது மிக மிகச் சின்ன படகு
தள்ளிப்போகச் சைகை காட்டும்
அது மகத்தான பெருங்கடல்
கரையிலிருந்து தீண்டியது
பொறாமை மிகுந்த ஓர் அலை
கம்பீரமிக்க கப்பல்களாலும் கண்டுபிடிக்கவியலாமல்
தொலைந்துபோனது என் மரக்கலம்
(XXIII)
“Whether my bark went down at sea,
Whether she met with gales,
Whether to isles enchanted
She bent her docile sails;
By what mystic mooring
She is held to-day, —
This is the errand of the eye
Out upon the bay.”
(XXIV)
என் சிறு நாவாய் கடலில் இறங்கிச் சென்றது
அது புயலைச் சந்தித்ததா
அல்லது தனது பணிவான பாய்மரத்தை கீழிறக்கி
மயங்கவைக்கும் தீவுகளை அடைந்ததா
எத்தகைய புதிர் நங்கூரப் பிணைப்பில்
அது இன்று பூட்டப்பட்டிருக்கிறது,-
கண்கள் விடுக்கும் செய்தி இது
கடற்கரைக்கு அருகிருந்து
(XXIV)
“Belshazzar had a letter, —
He never had but one;
Belshazzar’s correspondent
Concluded and begun
In that immortal copy
The conscience of us all
Can read without its glasses
On revelation’s wall.”
(XXV)
பெல்ஷஸாரிடம் ஒரு கடிதம்
ஒரே ஒரு கடிதம்
பெல்ஷஸாரின் செய்தியாளர்
அந்த அழியாப் பிரதியில்
தொடங்கி முடித்த
அனைவரின் மனசாட்சியை
நம்மால் வாசிக்க முடியும்
அதன் கோப்பைகளில்லா
வெளிப்படுத்தும் சுவரில்
பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.
מנא מנא תקל ופרסין
Mede Mede Tekel Upharsin
“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”
அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் சைரஸ் கைப்பற்றுகிறார். சைரஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.
வெளிப்படுத்தும் சுவர் – எமிலி கேதலிக் சமய நம்பிக்கை கொண்டிருந்தவர். இங்கு அவர் சுவர் எனக் குறிப்பிடுவது ஜெருசலேமின் அழிந்து போன சாலமன் கட்டிய யூதர்களின் தலைமைக் கோயிலின் சுவர் (Wailing Wall) சிதிலத்தை. யூதர்கள் சுவர் முன்னால் நின்று அழும் சடங்கில் அவர்கள் அழும் காரணத்தை இறைவன் பெல்ஷஸாருக்கு அளித்த தகவலோடு ஒப்பு நோக்குகிறார் எமிலி.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.
מנא מנא תקל ופרסין
Mede Mede Tekel Upharsin
“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”
அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் டரியஸ் கைப்பற்றுகிறார். டரியஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.
That very night Belshazzar the Chaldean (Babylonian) king was killed, and Darius the Mede received the kingdom.
— Daniel 5:30–31[1]
இந்தியா எனக்கு என்ன?
– நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம்
– சிறு குறை கொண்ட என் மகன்
– தொடர் வெற்றி காணும் என் மகள்
– பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு
– தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி
– சாலையோர வாக்குவாதம்
– ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை
– முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம்
– சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி
– மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை
– பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு
– நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம்
– பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை
– நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை
– ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல்
– பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு
– ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம்
– குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை
– வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு.
– இன்னும் நிறைய…..
மிக முக்கியமாக என் சுவாசம்
அனைவர்க்கும் குடியரசு தின நல் வாழ்த்துகள்
நேற்றிரவு கின்டில் புத்தகம் வாங்கினேன். கான்ஸ்டன்டீன் கவாஃபியின் கவிதைகள்.
கவாஃபியின் கவிதைத் தொகுதியில் முதலில் வாசித்த கவிதை –
சுவர்கள்
முன்யோசனையின்றி, பரிவின்றி, வெட்கமின்றி
அவர்கள் உயரமான இந்த திண்சுவர்களை என்னைச் சுற்றி கட்டியிருக்கின்றனர்
இப்போது நானிங்கே விரக்தியில்.
வேறெதைப்பற்றியும் சிந்தனையெழவில்லை; இந்த விதி என் மனதை நுகர்கிறது;
வெளிப்புறத்தில் எனக்கு செய்ய நிறைய வேலைகள்.
இந்த சுவர்கள் கட்டப்படும்போது நான் ஏன் கவனிக்கவில்லை?
ஆனால் கட்டிடக்காரர்களின் அல்லது பிற சத்தங்களை நான் கேட்கவேயில்லை.
புலப்படாமல், அவர்கள் என்னை இவ்வுலகத்திலிருந்து மூடிவிட்டார்கள்.
மொழியாக்கம் : அடியேன்
About Elly – பார்ப்பதற்கு முன்
சில வருடம் முன்னர் ஒரு டி வி டி கடையில் முதன்முறையாக பார்சி மொழிப்படம் ஒன்றை வாங்கினேன். அதற்கு முன்னர் தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை தேடிப்போய் பார்க்கும் வழக்கம் கிடையாது. டி வி டியின் அட்டைப்படமா, அப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது என்ற தகவலா எது என்னை அந்த டி வி டியை வாங்கத் தூண்டியது என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து டி வி டியை உடன் play செய்தேன். “என்னென்னமோ படங்களை வாங்கறே” என்று முதலில் முணுமுணுத்த மனைவியையும் சுண்டி இழுத்தது படத்தின் ஆரம்பம். இரண்டு மணி நேரம் ஓடிய படம் புரிந்து கொள்ள முடியாத மொழியில். உபதலைப்புகளே துணை. விறுவிறுப்பு ஓர் இடத்திலும் குறையாத காட்சி நகர்வுகள். மிகையற்ற நடிப்பு. யதார்த்தமான சித்தரிப்பு. சம காலத்திய இரானின் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அருமைப்பதிவு. பழைய மரபார்ந்த விழுமியங்களுக்கும் நவீனத்தன்மைக்கும் இடையில் நடக்கும் சுவாரசியமான மல்யுத்தம். பொருளாதார வர்க்கங்களுக்கிடையேயான மௌனப்போர். A Separation (2011) – க்கு விருது கிடைத்ததில் அதிசயமே இல்லை.

இந்திய கலாச்சாரத்துக்கு மிக அருகில் இருக்கும் இரான் கலாச்சாரப் பின்னணியில் தத்ரூபமான, கலையுணர்வு மிக்க, சற்றே hard-hitting படங்களை உலக திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்கள் இரானிய திரைப்படக் கலைஞர்கள். இரானின் முத்தான இயக்குனர்களில் முதன்மையானவர் Asghar Farhadi. ஆர்ட் படங்கள் என்ற பெயரில் சாதாரண திரைப்பட ரசிகர்களை தூரம் தள்ளும் படங்களில்லை இவை. நகர வாழ்க்கை வாழும் எந்த பார்வையாளனும் எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ளத்தக்க படங்கள். கொஞ்சம் யோசித்தாலும் இத்தகைய படங்கள் நம்மூர் சூழலிலும் எடுக்கப்பட முடியும். ஆனால் எடுக்கப்படுவதில்லை என்பது தான் நிதர்சனம். எண்பதுகளின் மலையாள திரையுலகு இத்தகைய மென்மையான சுவையுடனான படங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த ஆரோக்கியமான போக்கு தொன்னூறுகளின் துவக்கத்தில நின்று போனது நம் துரதிர்ஷ்டம்.

சென்ற வாரம் அமேசான் ப்ரைம் வீடியோவில் 2016க்கான சிறந்த அயல் நாட்டுப்படத்திற்கான விருதை மீண்டுமொருமுறை Asghar Farhadi-க்கு பெற்றுத்தந்த The Sales Man படத்தை ஸ்ட்ரீம் பண்ணினார்கள். ஆர்தர் மில்லரின் Death of a Sales Man நாடகத்தின் பார்சி மொழியில் அரங்கேற்றும் முயற்சியில் இருக்கும் குழுவின் நடிகர்கள் கதையின் நாயகன் – நாயகி ; நிஜ வாழ்க்கையில் இருவரும் தம்பதிகள். அவர்கள் வசிக்கும் வீட்டின் சுவர்கள் விரிசல் விடுகின்றன. குறிப்பாக படுக்கையறைச் சுவரில் பெரும் விரிசல். வேறு வீடு தேடுகிறார்கள். சக-நடிகரின் உதவியில் ஓர் வீடு கிடைக்கிறது. அந்த வீட்டின் முன்னாள் குடியாளரின் சாமான்கள் அங்கு இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் வீட்டு பால்கனியில் குவித்து வைத்துவிட்டு குடி புகுகிறார்கள் இமாதும் ராணாவும்! இமாத் கணவன் ; ராணா மனைவி. முன்னாள் குடியிருப்பாளரின் நிழல் அந்த வீட்டிலிருந்து வெளியேறாமல் இருக்கிறது. அதன் விளைவாக நிகழும் ஒரு சம்பவம் கணவன் – மனைவி இருவருக்கிடையிலான உறவை புரட்டிப் போட்டு விடுகிறது. Family Thriller என்னும் ஜனரஞ்சக feel good படமில்லை. இருவரின் உறவும் அவர்களுக்கே தெரியாதவாறு எப்படி transform ஆகிறது என்பதை சொல்லிச் செல்லும் படம். கதாநாயகன் இமாத் பாத்திரத்தில் நம்மூர் நாயக நடிகர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்னும் வாதம் எனக்கும் என் மனைவிக்குமிடையே ஒரு வாரமாகியும் ஓய்ந்தபாடில்லை. இன்று காலை அலுவலகத்துக்கு கிளம்பும் முன்னர் கவனத்துடன் வீட்டுச்சுவர்களை நோக்கினேன். ஒரு விரிசலும் காணப்படவில்லை!
இதே இயக்குனர் About Elly-யை 2009இல் எடுத்திருக்கிறார் ; படத்தின் ட்ரைலரை யூ-ட்யூபில் பார்த்தேன். மேற்சொன்ன இரண்டு படங்கள் போலவே இதுவும் சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கிறது. The Sales Man இல் நாயகியாக நடித்த Taraneh Alidoosti பிரதான பாத்திரமாக வருகிறார். என் கைக்கு கிடைத்திருக்கிற டி வி டியின் அட்டைப்படத்தில் “இது பற்றி எவ்வளவு குறைவாக முன்னரே அறிகிறோமோ அதுவே சிறந்தது” என்று விமர்சகர் ஒருவரின் மேற்கோள் காணப்படுகிறது. ரிவ்யூ படிக்காமல் படங்களுக்குச் செல்லும் தைரியத்தை இழந்து பல வருடங்களாகிவிட்டன. Asghar Farhadi என்ற பெயர் என் விரதத்தை முறிக்கும் தைரியத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது. இன்றிரவு “About Elly” படத்தை பார்த்து முடிக்கும் வரை இணையத்தில் அதன் ரிவ்யூக்களை படிக்கப் போவதில்லை.

About Elly – பார்த்த பின் சில குறிப்புகள்
“முடிவில்லாத கசப்புத்தன்மையை விட மேலானது கசப்பான முடிவு” என்று எதிர்பாராமல் சீக்கிரமே முறிந்து போன தன் முதல் திருமணத்தைப் பற்றி அஹ்மத் எல்லியிடம் சொன்னவுடன் அர்த்தமான மௌனத்துடன் உரையாடல் நிறைவு பெறுகிறது. கடற்கரை மணலில் பட்டம் விட முயலும் சிறு குழந்தைகளுக்காக பட்டத்தை மேலே செலுத்தி எல்லி பறக்க வைக்கும் காட்சியின் போது ஏதோ நிகழப்போகிறது என்ற அச்சமூட்டும் உணர்வு பற்றிக் கொள்கிறது. அதற்கடுத்த காட்சிகளில் வேகமும் பதற்றமும் மிகுத்து ஒரு பாத்திரமாக படம் நெடுக வரும் காஸ்பியன் கடலின் அலைகள் மூர்க்கமடைகின்றன.
எல்லி ஏன் காணாமல் போனாள்? என்னும் கேள்விக்கான தேடலாக கதை விரிந்தாலும் கதையின் ஒவ்வொரு பாத்திரமும் சொல்லும் சிறு பொய்கள் தாம் கருப்பொருள்கள். எல்லியின் நண்பியான செபிடேவுக்கு எல்லியின் முழுப்பெயர் என்ன என்று கூட தெரியாது. ஆனால் செபிடே எல்லியை தன் நண்பர் ஒருவருக்கு மணம் முடிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறாள். எல்லியின் புகைப்படம் ஏற்கெனவே அஹ்மதுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. புகைப்படத்திலேயே அவனுக்கு எல்லியை பிடித்துப்போய் விடுகிறது. ஆனால் அவனுடன் வரும் நண்பர்களுக்கு அஹ்மத் எல்லியை சந்திப்பது ஓர் எதேச்சையான நிகழ்ச்சி என்பது மாதிரியான எண்ணத்தை தோற்றுவிக்கிறான். தங்கும் விடுதி கிடைக்கவில்லை என்பதற்காக அஹ்மதும் எல்லியும் கல்யாணமானவர்கள் என்று செபிடே சொல்லும் பொய்யும் கூட எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. சிறு சிறு பொய்கள் ; ஆபத்தற்ற பொய்கள் ; வஞ்சகமிலாப் பொய்கள் ; வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் பொய்கள் சுவாசம் மாதிரி சதா நம்மை சூழ்ந்த வண்ணம் இருக்கின்றன ; இழுத்த சுவாசத்தை விடுவது மாதிரி நாமும் சிறு பொய்களை கக்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் காஸ்பியன் கடலுக்கு மேல் தெரியும் வானம் கறுத்துக் கொண்டே வருவது போன்ற காட்சியமைப்பு சவுகரியமான பொய்களில் மூழ்கி மேலும் மேலும் சரிந்து கொண்டிருக்கும் சமூகத்தின் படிமம்.
நமக்கு நடுவில் வரும் ஓர் அந்நியர் திடீரென மறைந்து விடுகிறார் எனில் அந்நியர் மீதான கரிசனத்தை விட அந்த மறைவு நமக்கேற்படுத்தப் போகும் அசவுகர்யம் தான் பெரிதாகப் படும். அப்போது அந்த அந்நியர் பற்றி தெரிந்த மிகக் குறைந்த தகவல்களின் மேல் நம் கற்பனை வர்ணத்தைப் பூசி அந்த அந்நியரை அடையாளம் காண முயற்சிப்பது நம் பொது இயல்பு. எல்லி மறைந்து விட்டாள். எல்லி யார் என்ற கேள்விக்கு முதலில் பதில் தேட வேண்டும். அவள் யார்? நாயகியா? வில்லியா? துரோகியா? பயந்தவளா? கிடைக்கும் விடையைத் பொறுத்து அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிய வரலாம். எல்லியை முழுதாகத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிகிறது. அவளை அழைத்து வந்த செபிடேவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவளுக்குத் தெரிந்த விவரங்கள் மிகவும் குறைவு போலத் தெரிகிறது. பின் தன் நண்பனுக்கு நிச்சயம் செய்யும் முடிவுடன் எல்லியை பிக்னிக்குக்கு செபிடே ஏன் கூட்டிக்கொண்டு வரவேண்டும்? மேலோட்டமான சில விவரங்கள் மட்டும் தெரியும். பிறவற்றை செபிடே யூகம் செய்து கொண்டு பொறுப்பற்ற நிச்சயதார்த்த முயற்சியில் ஈடுபடுகிறாள என்று தானே அர்த்தம். நம்மை சுற்றியிருப்போர் பற்றி நாம் எப்படி தெரிந்து கொள்கிறோம்? முக்கால்வாசி யூகம் கலந்த கற்பனை வாயிலாகத்தான். அந்த கற்பனை கலாச்சார எதிர்பார்ப்புக்குள்ளும் சாதாரண மனித இயல்புக்குள்ளும் அடங்கியதாகவே இருக்கும். எல்லியின் காணாமல் போதல் ஒரு விபத்து எனில் அவள் யார் என்ற கேள்விக்கான பதில் நம்முடைய கற்பனையில் என்னவாக இருக்கும்? அது விபத்தில்லை ; பிரக்ஞை பூர்வ நிகழ்வு எனில் நம்முடைய கற்பனையில் எல்லி யார்?
மூலக்கருவைத் தவிர இன்னொரு விஷயமும் கவனிக்கத் தக்கது. நவீனத்துவப் பட்டை பொருத்தப்பட்டு ஜொலிப்பது போலத் தோன்றினாலும் சிறு கீரலில் ஆணாதிக்கத்தின் முகம் எளிதில் வெளித்தெரியும் செபிடே – அமிர் உறவு முறையில் செபிடேவின் கள்ளத்தனம் ஓர் எதிர்ப்புச் செயல் என்றே கருதத் தோன்றுகிறது. எல்லியைப்பற்றி செபிடேவுக்கு எவ்வளவு தெரியும் என்பது பற்றிய ஊகம் நம் எண்ணத்தில் ஊறி படத்தின் ட்யூரேஷனை ஒரு மணி நேரம் ஐம்பத்தொன்பது நிமிடத்துக்கும் அதிகமாக நீட்டி விடுகிறது. படத்தை பார்த்து முடித்து பதினைந்து மணி நேரங்கள் ஆகிவிட்டன. சிந்தனையில் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.
About Elly – க்கு அடுத்து….
Asghar Farhadi-யின் இயக்கத்தில் 2013இல் வெளிவந்த The Past அநேகமாக நான் பார்க்கப்போகிற அடுத்த படமாக இருக்கும். இந்த படத்தின் நல்ல ப்ரின்டை உப-தலைப்புகளுடன் ஸ்ட்ரீம் செய்கிற நல்ல இணைய தளத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.