Tag: கோப்பை

  • திரும்பாதிருத்தல் மற்றும் பிற கவிதைகள் – எமிலி டிக்கின்ஸன்

    A Book

    “He ate and drank the precious words,

    His spirit grew robust;

    He knew no more that he was poor,

    Nor that his frame was dust.

    He danced along the dingy days,

    And this bequest of wings

    Was but a book. What liberty

    A loosened spirit brings!”

    (XXI)

    புத்தகம்

    மதிப்புமிக்கச் சொற்களை தின்று குடித்துவிட்டான்

    அவனின் ஆன்மவுணர்வு பெருக்கெடுத்து வளர்ந்தது

    அதற்குப்பின், தான் ஏழை என்பதை மறந்துவிட்டான்

    அவனின் தேகம் உடைந்துவிழுவது என்பதையும்

    மங்கலான நாட்களை ஆடிக்கழிக்க முடிந்தது

    பெற்ற இறக்கைகள் புத்தகமன்றி வேறில்லை

    இறுக்கம் களைந்த ஆன்மா கொணரும்

    சுதந்திரமே சுதந்திரம்!

    “I had no time to hate, because

    The grave would hinder me,

    And life was not so ample I

    Could finish enmity.

    Nor had I time to love; but since

    Some industry must be,

    The little toil of love, I thought,

    Was large enough for me.”

    வெறுக்க நேரமில்லை என்னிடம், ஏனெனில்

    கல்லறை என்னைத் தடுக்கும்

    மற்றும், வாழ்க்கை மிதமிஞ்சியதாக இல்லை

    என் பகையை தீர்த்துக்கொள்ளுமளவிற்கு.

    நேசிக்கவோ நேரமே போதவில்லை, ஆனால்

    கொஞ்சம் மெனக்கெடல் அவசியமென்பதால்

    அன்பிற்கான சிறு உழைப்பு மட்டும்

    எனக்கு போதுமானதாய் இருந்தது என்றெண்ணினேன்

    (XXII)

    Unreturning.

    ‘T was such a little, little boat

    That toddled down the bay!

    ‘T was such a gallant, gallant sea

    That beckoned it away!

    ‘T was such a greedy, greedy wave

    That licked it from the coast;

    Nor ever guessed the stately sails

    My little craft was lost!”

    (XXIII)

    திரும்பாதிருத்தல்

    குடாக்கரையில் தள்ளாடும்

    இது மிக மிகச் சின்ன படகு

    தள்ளிப்போகச் சைகை காட்டும்

    அது மகத்தான பெருங்கடல்

    கரையிலிருந்து தீண்டியது

    பொறாமை மிகுந்த ஓர் அலை

    கம்பீரமிக்க கப்பல்களாலும் கண்டுபிடிக்கவியலாமல்

    தொலைந்துபோனது என் மரக்கலம்

    (XXIII)

    “Whether my bark went down at sea,

    Whether she met with gales,

    Whether to isles enchanted

    She bent her docile sails;

    By what mystic mooring

    She is held to-day, —

    This is the errand of the eye

    Out upon the bay.”

    (XXIV)

    என் சிறு நாவாய் கடலில் இறங்கிச் சென்றது

    அது புயலைச் சந்தித்ததா

    அல்லது தனது பணிவான பாய்மரத்தை கீழிறக்கி

    மயங்கவைக்கும் தீவுகளை அடைந்ததா

    எத்தகைய புதிர் நங்கூரப் பிணைப்பில்

    அது இன்று பூட்டப்பட்டிருக்கிறது,-

    கண்கள் விடுக்கும் செய்தி இது

    கடற்கரைக்கு அருகிருந்து

    (XXIV)

    “Belshazzar had a letter, —

    He never had but one;

    Belshazzar’s correspondent

    Concluded and begun

    In that immortal copy

    The conscience of us all

    Can read without its glasses

    On revelation’s wall.”

    (XXV)

    பெல்ஷஸாரிடம் ஒரு கடிதம்

    ஒரே ஒரு கடிதம்

    பெல்ஷஸாரின் செய்தியாளர்

    அந்த அழியாப் பிரதியில்

    தொடங்கி முடித்த

    அனைவரின் மனசாட்சியை

    நம்மால் வாசிக்க முடியும்

    அதன் கோப்பைகளில்லா

    வெளிப்படுத்தும் சுவரில்

    பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

    מנא מנא תקל ופרסין

    Mede Mede Tekel Upharsin

    “Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

    அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் சைரஸ் கைப்பற்றுகிறார். சைரஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

    வெளிப்படுத்தும் சுவர் – எமிலி கேதலிக் சமய நம்பிக்கை கொண்டிருந்தவர். இங்கு அவர் சுவர் எனக் குறிப்பிடுவது ஜெருசலேமின் அழிந்து போன சாலமன் கட்டிய யூதர்களின் தலைமைக் கோயிலின் சுவர் (Wailing Wall) சிதிலத்தை. யூதர்கள் சுவர் முன்னால் நின்று அழும் சடங்கில் அவர்கள் அழும் காரணத்தை இறைவன் பெல்ஷஸாருக்கு அளித்த தகவலோடு ஒப்பு நோக்குகிறார் எமிலி.

  • சுவரில் ஒரு கடிதம்

    பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

    מנא מנא תקל ופרסין
    Mede Mede Tekel Upharsin

    “Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

    அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் டரியஸ் கைப்பற்றுகிறார். டரியஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

    That very night Belshazzar the Chaldean (Babylonian) king was killed, and Darius the Mede received the kingdom.

    — Daniel 5:30–31[1]

  • ருபைய்யத்துக்கு இன்னொரு தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் ?

    ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில்  இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான வகையில் பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வாயிலாகவாவது நம்மால் வாசிக்க முடிகிறதேயென்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

    Rumi & Hafez

    ஹஃபிஸ் கிட்டத்தட்ட ரூமி போலத்தான். படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த சுஃபி இலக்கியத்தின் பிதாமகர்கள் இவ்விருவரும். செபெஹ்ரி ஒரு நவீன கவி. ஓவியக் கலையிலும் தேர்ந்தவர் என்பதால் அவருடைய சொற்களுக்கு வர்ண தூரிகையின் குணம் உண்டு. இருப்பினும் ரூமி, ஹபீஸ் போன்றோரின் படைப்புகளைப் போன்று செபெஹ்ரியின் அனைத்து கவிதைகளையும் எளிதாக உளவாங்கிக் கொள்ள முடிவதில்லை. வாசகரின் உழைப்பை அதிகம் கோருபவையாக உள்ளன செபெஹ்ரியின் கவிதைகள். 

    Sohrab Sepehri

    ரூமிக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஓமர் கய்யாம் வேறு ரகம். கணிதவியல், வானவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த கய்யாம் வாசகர்களை நன்கு ‘நக்கலடிக்கிறார்’. “எதைப் பற்றி எழுதியிருக்கிறேன் கண்டு பிடியுங்கள்” என்றுசவால் விடுகிறார். மது, போதை, என கிடடத்தட்ட அனைத்து “ருபைய்யத்”களிலும்  வருவதைப் பார்த்து “இது நம்ம ஆளு” என்று “குடிமக்கள்” அவரை கொண்டாடுவதை பார்த்தால் தன் கல்லறையிலிருந்து ஓமர் கய்யாம் வயிறு குலுங்க சிரிக்கக்கூடும். 

    எட்வர்ட் பிட்ஸ்ஜரால்ட்-டின் உலக புகழ் பெற்ற மொழியாக்கம் ஓமர் கய்யாமின் மீது உலக அரங்கில்  வெளிச்சம் பாய்ச்சியது. ஈரடிகள் எனப்படும் ருபைய்யத்களை வெறித்தனமாக தன் வாழ்நாள் முழுதும் திரும்பத்திரும்ப மொழிபெயர்த்து வந்தார் எட்வர்ட். முதல்பதிப்புக்கு பிறகு தன் மொழிபெயர்ப்பில் பல திருத்தங்களை அவர் செய்தாலும் அவருடைய முதல் பதிப்பு கிட்டத்தட்ட ஒரு மறு-ஆக்கம் என்று பல பர்ஸிய மொழி வல்லுனர்களால் கருதப்படுகிறது. 

    கவிமணியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஒன்று ருபைய்யத்துக்கு உண்டு. அதிலிருந்து கீழ்வரும் வரிகள் மிகப்பிரபலம் :-

    வெய்யிற்கேற்ற நிழலுண்டு  வீசும் தென்றல் காற்றுண்டு 
    கையில் கம்பன் கவியுண்டு  கலசம் நிறைய மதுவுண்டு 
    தெய்வகீதம் பலவுண்டு  தெரிந்து பாட நீயுண்டு
     வையந் தருமிவ் வனமன்றி  வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

    கவிமணியின் மொழிபெயர்ப்பு இனிமையானது. மரபுக்கவிதை வடிவத்தில்  அவர் மறு ஆக்கமாக அதை மொழிபெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பில் வரும் “கம்பன் கவி” என்னும் motif ஓமர் கய்யாமின் உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல நம் மரபின் motif-களை பல இடங்களில் கவிமணி பயன்படுத்தியிருப்பார். மறு ஆக்கம் என்பதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எனினும், குறியீடுகளை, படிமங்களை திரும்ப திரும்ப சொல்லும் சுஃபி இலக்கியத்தின் ஒரு தன்மை கவிமணியின் மறு – ஆக்கத்தில் இல்லாமல் போய்விட்டதோ எனும் சம்சயம் எனக்குண்டு.

    ஊழ் வலிமை, தர்க்கங்களின் பயனற்ற தன்மை, கடவுட்தன்மையின் துளி உலக விஷயங்களில் இருத்தல், கடந்த கால சோகங்கள் மற்றும் எதிர்கால கவலைகள் – இவற்றை ஒதுக்கி இன்றைய பொழுதில் மட்டும் கவனம்செலுத்துதல் – ஆகிய தரிசனங்களை வழங்கும் motif-கள் இந்தியமரபிலும் உண்டு. கவிமணியின் மொழிபெயர்ப்பில் அவை உரிமையுடன் பயன்படுத்தப்பட்டிருப்பது ருபைய்யத்தின் சுஃபி தன்மையை நீர்க்கச் செய்கிறதோ என்று நான் நினைக்கிறேன்.

    ருபைய்யத்துக்கு ஒரு நவீன தமிழிலான மொழிபெயர்ப்புக்கு இடமிருக்கிறது. மரபு வடிவத்தின் வரம்புகளின்றி வசனநடையிலான மொழிபெயர்ப்பு சுஃபி தரிசனங்களை உள்ளவாறே தமிழில் நிகழ்த்திக்காட்ட உதவும். ஒரே irony – மொழிபெயர்க்க இன்னொரு மொழிபெயர்ப்பையே – எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்டையே நம்பவேண்டியிருக்கிறது! சுமார் ஏழெட்டு ருபைய்யத்களை சாம்பிளுக்காக மொழிபெயர்த்தேன்.  அனைத்து ருபைய்யத்துக்களையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டு.

    —–

    ஜாம்ஷிட் மன்னன்
    குடித்து கும்மாளமிட்ட
    சபைகளில்
    சிங்கமும் பல்லிகளும்
    குதித்து விளையாடுகின்றன
    கிறித்துவர்களை
    வேட்டையாடிய பஹ்ராம்
    மீளாத் துயிலில் கிடக்க 
    அவன் தலையை காலால் 
    உருட்டியது ஒரு வனக்கழுதை

    __

    வாதம், முயற்சி
    என முடிவிலி தேடலில்
    எத்தனை காலம்?
    பழமற்றோ
    கசந்த பழத்துடனோ
    கவலையில் மூழ்குவதை விட
    கனிந்த திராட்சையுடன்
     சந்தோஷத்தில் திளைப்பது சிறந்தது.

    __

    தோழர்களே
    வெகுகாலம் கழித்து
    வீட்டில் 
    என் புது திருமணத்திற்கான
    கொண்டாட்டம்
    என் படுக்கையிலிருந்து
    மலட்டு தர்க்கத்தை துரத்தி 
    விவாகரத்து செய்துவிட்டு
    திராட்சைக் கொடிமகளை 
    மனைவியாய்க் கொண்டேன்

    — 

    கோப்பையை நிரப்பு ;
    நம் காலுக்கு கீழ்
    காலம் நழுவிச் செல்லுதல் பற்றி 
    பேசிப் பயன் என்ன?
    பிறக்காத நாளையும்
    இறந்த நேற்றும் –
    இவற்றுக்காக கவலைப்படுதல் வியர்த்தம்,
    இன்று இனிதாயுள்ளபோது!
    (XXXVII)

    __

     சுழலும் சொர்க்கத்திடமே
     நான் கேட்டேன்-
    “இருட்டில் தடுமாறும்
    சிறு குழந்தைகளை வழிநடத்த
    என்ன விளக்கை வைத்துள்ளது ஊழ்?”
    சொர்க்கம் சொன்னது : “கண்மூடித்தனமான புரிதல்”

    __

    உள்ளே வெளியே
    மேலே, சுற்றியெங்கும், கீழே –
    வேறொன்றுமில்லை
    சின்ன பெட்டிக்குள் நடக்கும் 
    மந்திர நிழல்கூத்து 
    மெழுகுவர்த்தியே சூரியன் 
    அதைச் சுற்றி
    வேதாள உருவங்கள்
    வருவதும் போவதுமாய்

     __ 

    ஆற்று விளிம்பில்
    ரோஜாக்களின் வீச்சு
    மூத்த கய்யாமிடம் 
    செந்நிற, பழம்பானம்
    இருண்ட கோப்பையுடன்
    தேவன் உன்னை அணுகுகையில் 
    அதை எடுத்துக்கொள் 
    தயங்காதே
            (XLVIII)

    __

    யாரும் இதற்கு பதிலளித்ததில்லை ;
    துரதிர்ஷ்டகரமாக பண்ணப்பட்ட
    கிண்ணமொன்று மௌனம் காத்து
    பின்னர் பேசியது:
    “மோசமான அனைத்துடனும் 
    சாய்வு கொண்டிருத்தலால்
    அவர்கள் என்னை நிந்திக்கிறார்கள்;
    குயவனின் கை அதிர்ந்ததா என்ன?” 
           ( LXIII)

    __ 

    Omar Khayyam