இறைத்தோட்டம்

  • நிசப்தங்கள் கவனமாகச் செதுக்கப்பட்ட உலகத்தில் நான் வாழ்ந்து வந்தேன். என் கணவர் அஸீஸ்,  எகிப்து நாட்டின் அமைச்சர், உயர்ந்த பதவியையும் மிகத் தாழ்ந்த உணர்ச்சி வேகத்தையும் கொண்டவர். விலை உயர்ந்த பட்டாடைகளும், குளிர்ந்த கல் சுவர்களும் மட்டுமே என் வாழ்க்கையாக இருந்தன. அப்போதுதான் அவர் அந்தச் சிறுவனை— ஹீப்ரு அடிமையை—வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் வளர்வதை நான் பார்த்தேன். அவனது அழகு என்பது வெறும் உடல் சார்ந்தது அல்ல; அது ஒரு அதிர்வு. அது அரண்மனையின் காற்றையே… Read more

  • அன்றைய ‘பட்டுப் பாதை’யில் அமைந்திருந்த நிஷாபூரின் அந்தத் தெரு, ஒரு வணிக வீதியாகக் காட்சியளிக்கவில்லை; அது அச்சமும் தூசியும் சுருண்டோடும் வற்றிய நதிபோல் கிடந்தது. வீசிய காற்றில் இரும்பின் கசப்பு கலந்திருந்தது; அது போர் நெருங்கி வருவதன் எச்சரிக்கை. அத்தரின் அந்தச் சிறு மருந்தகத்தின் கதவு திறந்திருக்க, உள்ளே பரீதுத்தீன் அத்தர் காய்ந்த சாமந்தி மலர்களைப் பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அங்கே நிலவியது நறுமணங்களின் தியானம். சட்டென்று யாரோ உள்ளே நுழைந்தார்கள். அத்தர் நிமிர்ந்து பார்த்தார். எல்லாவற்றையும் மீறி… Read more

  • நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதைத் தொகுப்பின் தலைப்புக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு — “நூர் அலா நூர்”. இந்தத் தலைப்பு எதைச் சொல்ல வருகிறது? திருக்குர்ஆனின் கவித்துவமான ஒரு வசனத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் இந்தத் தலைப்பு. இதனை ‘ஆயத் அந்நூர்’ (ஒளியின் வசனம்) என்பார்கள். “அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப்… Read more

  • இப்னு அரபியின் (Ibn ʿArabi) தத்துவ தரிசனத்தில் ‘கண்ணாடி’ (The Mirror) என்பது வெறும் உவமை மட்டுமல்ல; அது பிரபஞ்சத்தின் இருப்பையும், படைப்புக்கும் இறைவனுக்கும் இடையிலான நுட்பமான உறவையும் விளக்கும் ஒரு முழுமையான தரிசனம். அவரது புகழ்பெற்ற ‘ஃபுஸுஸுல் ஹிகம்’ (Fusus al-Hikam) நூலில், ‘ஆதமின் ஞானம்’ (The Wisdom of Adam) என்ற முதல் அத்தியாயத்திலேயே இக்கருத்து மிக ஆழமாக முன்வைக்கப்படுகிறது. 1. மெருகூட்டப்படாத கண்ணாடியும் ‘தஸ்வியா’வும் தொடக்கத்தில் பிரபஞ்சம் என்பது மெருகூட்டப்படாத, மங்கலான ஒரு… Read more

  • குர்ஆன் தன்னை தொடர்ச்சியான ஓர் ஒற்றை தெய்வீக சொற்பொழிவாக முன்வைக்கிறது; இருப்பினும் அதன் மேற்பரப்பில் பல பேசும் நிலைகள் தோன்றுகின்றன. இறைவன் பேசுகிறார், அவரைப் பற்றி பேசப்படுகிறது, அவரிடம் நேரடியாக உரையாடப்படுகிறது; தீர்க்கதரிசிகள், தேவதூதர்கள், ஜின்கள், விசுவாசிகள், நிராகரிப்பவர்கள் ஆகியோர் மேற்கோள் காட்டப்பட்ட குரல்களாக அதற்குள் ஒலிக்கின்றனர். இந்த பன்முகத்தன்மை பேச்சாளரைப் பிளவுபடுத்துவதில்லை; மாறாக, ஒரே தெய்வீக வார்த்தையின் மாறும் உறவுநிலைகளை வெளிப்படுத்துகிறது. வெளிப்பாட்டின் மூலத்தை குர்ஆன் தெளிவாக நிறுவுகிறது: “அது அவருக்கு அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை” (53:4).… Read more

  • நேற்று எழுதிய ரம்ஜான் போஸ்டைப் படித்த பிறகு நண்பர் நிஷா மன்சூர் தொலைபேசியில் அழைத்தார். நேற்று எழுதிய “காபா காக்கப்பட்டது” இடுகையில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது என்றார். இந்த விடுபடலின் காரணத்தால் போஸ்ட் சற்று எதிர்மறையாக தொனிப்பதாகச் சொன்னார். ஒரு முக்கியமான தகவலும் விட்டுப் போயிருந்தது. அப்ரஹா அழைத்துப் பேசும் மக்காவின் தலைவர் “முத்தலிப்” என்று இடுகையில் சொல்லியிருந்தேன். அப்துல்-முத்தலிப் இப்னு ஹாஷிம் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும், நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்தின் தாத்தாவாகவும் இருந்தார்.… Read more

  • இப்னு கல்துன் (1332–1406) – னுடைய magnum opus என்று கருதப்படும் “முகாதிமா” நூலில் நாகரிகங்களின் (அதாவது வம்சங்களின், அரசுகளின், ஆட்சி அமைப்புகளின்) எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு சுழற்சி வரலாற்றுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கருத்துக்கள் இஸ்லாமிய இறையியலில், குறிப்பாக தெய்வீக விருப்பம், நீதி (‘adl’) மற்றும் உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை (dunya) ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றியிருந்தன. இப்னு கல்துனின் சுழற்சி வரலாற்றுக் கோட்பாடு நாகரீகங்கள் அவற்றின் தவிர்க்க முடியாத வீழ்ச்சிக்கு முன்… Read more

  • இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா… Read more

  • இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்). — மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றனகூண்டோ வலிமையானது! அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்துஅது முடக்கப்பட்டுள்ளது. – அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம்… Read more

  • Philosophy and Faith 

    God is omniscient. A long debate about the nature of God’s knowledge continued for centuries. A long-standing attempt to explain Islamic theology using the reasoning of Greek philosophers such as Aristotle and Plato began during the Abbasid dynasty. The kings and caliphs, attracted by the concept of the philosopher-king, encouraged the movement to explain Islamic… Read more

  • எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஒரு நேர்காணல் வாயிலாகத்தான் முதன்முதலாக இப்னு ருஷ்த் பற்றி நான் அறிந்தேன். எழுத்தாளர் சல்மான் ருஷ்டி சொன்னார் : “குடும்பப் பெயரை ருஷ்டி என்று மாற்றுமளவிற்கு எனது தந்தை இப்னு ருஷ்தின் தத்துவத்தை வெகுவாகப் போற்றினார். என் தந்தை ஏன் அவர் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்பதை நான் பின்னர் உணர்ந்தேன். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள் நம்பமுடியாத அளவிற்கு நவீனமயமாக்கும் குரலாக இருந்தார் ருஷ்த்” அவெரோஸ் என்றும் அழைக்கப்படும் இப்னு ருஷ்த், இடைக்கால… Read more

  • ஈஸ்வரன்

    காசி நஸ்ருல் இஸ்லாம் – இந்த மகாகவிஞன் எந்தச் சிமிழிலும் அடங்காதவன். இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தீவிரவாதி. ஐநூறுக்கும் மேலான இந்து பஜன்களை இயற்றியவன். மகன்களுக்கும் மகளுக்கும் இந்து-முஸ்லீம் பெயர்களை இணைத்துச் சூட்டியவன். மூத்த மகனுக்கிட்ட பெயர் – கிருஷ்ண முகம்மது. வங்கதேசத்தின் தேசிய கவி. துர்காபூர் விமான நிலையத்துக்கு இவன் பேர் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கமும் வங்க தேசமும் போட்டியிட்டு இவனைச் சொந்தம் கொண்டாடுகின்றன. மகனும் மகளும் டாக்கா சென்று சேர்வதற்குள் கவிஞன் அடக்கம் செய்யப்பட்டு விட,… Read more

  • கஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கம் 14ம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்து-பவுத்த மக்கள் பெரும்பான்மையாக இருந்த நிலப்பரப்பு எப்படி இஸ்லாமியமயமானது என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிப்போனபோது கிடைத்தது – அலீ ஹம்தானி – எனும் பெயர். இரானிலிருந்து எழுநூறு சீடர்களோடு வந்து சாதாரண கஷ்மீரிகளை இஸ்லாம் பக்கம் ஈர்த்தவர் ஹம்தானி. காஷ்மீரின் ஆளும் ஷா மிர் வம்சத்து மன்னர்களை இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைபடுத்தி முழுக்க முழுக்க கஷ்மீரை இஸ்லாமியமயமாக்க வலியுறுத்தினார். இருப்பினும், இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் வேகம் பற்றி மிர் சயீத்… Read more

  • நினிவே நகரம் நீண்ட காலமாக அல்லாஹ்வின் செய்தியை மறந்து சிலை வழிபாடும் பாவமும் நிறைந்த நகரமாக மாறியிருந்தது. நகரவாசிகளைத் தனது ஒளியின் பாதையில் வழிநடத்த நினிவே நகரவாசிகளுள் ஒருவராகப் பிறந்திருந்த யூனுஸ் நபியை ஒரு தூதராக அனுப்ப முடிவு செய்தான் அல்லாஹ். யூனுஸ் நபி உடனடியாக தனது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினார். தனது மக்களை அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் சிலை வழிபாட்டைத் தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்தார். அவருக்கு முன் பிறந்த தீர்க்கதரிசிகள் நிராகரிக்கப்பட்டதைப் போலவே ஆனால்… Read more

  • ஆகா ஷாஹித் அலி – ஆங்கிலத்தில் எழுதிய கஷ்மீரக் கவி. அரசியல் கவியாக இருந்தாலும், சமயம் மற்றும் கலாசாரக் கருப்பொருட்களில் இணக்கமாயிருந்தவர். அவரின் “தொழுகை விரிப்பு” என்னும் கவிதை மிகப்புகழ் பெற்றது. இஸ்லாமிய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் தொழுகையைப் பற்றிய இக்கவிதையை வாசிக்கும்போது விசுவாசமும் ஆனந்தமும் நிரம்பிய மனவுணர்வுடன் தொழுகை விரிப்பில் முழங்கால்படியிட்டு இந்தக் கவிதையில் ஏறக்குறைய நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ​​​​​​மதக் குறிப்புகள் மற்றும் படிமங்களைப் பயன்படுத்தி தொழுகைச் சடங்கின் வீரியம் மற்றும்… Read more

  • சீர்மை பதிப்பகம் விலை : ரூ 100 இணைய வழி ஆர்டர் செய்ய – https://www.commonfolks.in/books/d/iraithottam Read more

  • அல்லாமா இக்பால் போன்ற ஓர் ஆளுமை துணைக்கண்டம் அதற்கு முன்னர் கண்டதில்லை. கவி நயமும் தத்துவமும் அவருள்ளில் ஒருங்கே குடி கொண்டிருந்தன. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்ட அவர் தத்துவம் கற்பித்தார். சட்டம் பயிற்சி செய்தார். அரசியலில் ஈடுபட்டார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பாகிஸ்தானை உருவாக்கும் யோசனையை ஆதரித்ததால் அங்கு தேசியக் கவிஞராக போற்றப்பட்டபோதும், இந்தியாவின் மகத்துவத்தைக் கொண்டாடும் புகழ்பெற்ற தேசபக்தி பாடலை எழுதினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் சர் பட்டம்… Read more

  • புல்லே ஷாவைப் பற்றி அறியப்படும் தகவல்கள் தொன்மங்கள் போல தொனிக்கின்றன. அவர் பிறந்த துல்லியமான தேதி மற்றும் பிறந்த இடம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே உடன்பாடு இல்லை. அவரது வாழ்க்கை பற்றிய சில “தகவல்கள்” அவரின் எழுத்துக்களிலிருந்தும் பிற “தகவல்கள்” வாய்வழி மரபுகள் வாயிலாகவும் பெறப்பட்டவை. ஷா ஹுசைன் (1538 – 1599), சுல்தான் பாஹு (1629 – 1691), மற்றும் ஷா ஷரஃப் (1640 – 1724) போன்ற கவிஞர்களின் வரிசையில் பஞ்சாபி கவிதையின் சூஃபி பாரம்பரியத்தை… Read more