வறட்சி நீங்குதல்

மண்டியிட்டு
திட்டில் தலை வைத்து
பார்க்கையில்
ஆழத்தில் போய்விட்ட நீர் மட்டம்
ஈரமிலா தொண்டையில்
சொற்களின் உற்பத்தி முடக்கம்.
வறண்ட கோடைக்கு நடுவே
பெய்த சிறு தூறலின்
ஒற்றைத் துளி
நாக்கை நனைத்தவுடன்
பெருகிய
வெள்ளத்தில்
கிணறு பொங்கி வழிந்தது.