கணிதத்தில்
முற்றொருமைகளில் வரும்
அடுக்குகளின் விதிகளை
மகளுக்கு
கற்றுவிக்கும் முயற்சியில் தோற்று
துவண்டு ஓய்ந்தேன்.
“அடுக்குகளை கூட்டினால் மதிப்பு பெருகும்.
அடுக்குகளை கழித்தால் மதிப்பு குறையும்
அடுக்குகளை வகுக்க மேலடுக்குகளிலிருந்து
கீழடுக்குகளை கழிக்க வேண்டும்”
ஆறாம் வகுப்பு மாணவிக்கு
சமூகவியல் நியதிகள் புரியுமா
என்ற கேள்வி கூடவா
கணிதப் புத்தக ஆசிரியர்களுக்கு தோன்றியிராது?