நீரூற்றி
களை பிடுங்கி
மருந்தடித்து
பாட்டு பாடி
பொறுமை காத்து……
வெகு நாளுக்குப் பிறகு
பூத்த மலரை
கையில் ஏந்தி பார்க்கையில்
இரு இதழ்கள் அளவு குறைந்தும்
ஒரிதழ் அளவு பெரிதுமாய் நீண்டு
விகாரமாக இருந்தது.
எனினும்
என் மலரை
பெருமையுடன் சட்டையில் குத்திக்கொண்டேன்.