உன்னைத் தொழ
காரணம் வேண்டிக்
காத்திருந்தேன்
கடுந்துயரோ
கொடும்நோயோ
நலக்குறைவோ
பெரும் ஆசையோ
எதுவும் எனக்கில்லை
சாதாரண ஆசைகளின் பலிதம்
காலம் பொறுத்து கைகூடும் எனும்போது
தொழுதல் அவசியமா !
நன்றி செலுத்தலே
பிரார்த்தனை
எனச் சொல்லுவார்
ஆனந்த மனமே
நன்றிக்கான மனநிலை
ஆனந்தமான
மனநிலையை
என்றும் அருள்
உனக்கு நன்றி
சொல்ல வேண்டும்
வேண்டுதலன்றி
நன்றி கூடச் செலுத்தவியலாது
எல்லாம் அவன் செயல்
அவனளிப்பதை
மனமுவந்து ஏற்பதே
பிரார்த்தனை
காரணம் தேவையில்லை
இக்கணம்
நம்மை வந்தடையும்
அனைத்துக்கும் நன்றி சொல்
தூக்கத்தின் பலன்
தூக்கம்
தொழுதலின் பலன்
தொழுதல்