“அதே நீ”

கவிதை புத்தகங்களை அதிகம் சேர்ப்பதில்லை. அடிக்கடி படிக்க வைக்கும் அம்சம் இல்லையெனி்ல் எழுதியவை எளிதில் அழுகிப்போகும் உணவாகி விடும். கதைகள் போலில்லாமல் கவிதைகள் அதிர்வைத் தரவில்லையெனில் புத்தக ஷெல்பின் அடித்தட்டில் சென்றுறங்க வேண்டியதுதான். நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான Sri N Srivatsa அவர்கள் தாம் மொழிபெயர்த்த “முகமுகமாய்ப் பூத்த மரங்கள்” நூலைத் தந்தபோது மறுக்க முடியவில்லை. தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் வேறு தலைப்பு வைத்திருக்கலாம் என்று நண்பரிடம் சொன்னேன். கவிதைகளை நேற்றிரவு வாசிக்க ஆரம்பித்த போது என்னுடைய தலைப்பின் மீதான “விமர்சனம்” எத்தனை மேலோட்டமானது என்று உணர்ந்தேன்.

இயல்பான வாசிப்புக்காக தமிழ் மூலத்தைத் தான் முதலில் வாசித்தேன். நண்பர் ஶ்ரீவத்சாவுக்கு போன் செய்து அந்தக் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது “ஏனிந்த ஓரவஞ்சனை?” என்றார். “மொழிபெயர்ப்பை அப்புறம் வாசித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்” என்றேன்.

கவிதை நூல்கள் பற்றி குறிப்பெழுதுதல் எனக்கு மிகச்சிரமம். ஒரு கவிதை ஏன் அப்பீல் செய்கிறது என்பதற்கான தெளிவான புரிதல் எனக்கில்லை. உணவின் சுவையை சொற்களால் விவரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நேராக உணவின் விள்ளலை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலே உணவின் சுவையறிய உதவும்.

தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. உதாரணத்திற்கு நூலில் வரும் முதல் கவிதையை எடுத்துக் கொள்வோம்.

பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் Exஐ எப்போது கடைசியாக சந்தித்தோம் என்ற கேள்வி கவிதைசொல்லியின் மனதில் சுழல்கிறது. சந்திப்பின்போது கைத்தொலைபேசி எண் பகிரப்பட்டது என நாம் புரிந்து கொள்கிறோம். Ex-இன் குறுந்தகவல் வருகிறது. பதினான்கு வருடங்கள் என்று Ex-இன் பதில்! கவிதைசொல்லிக்கு மிக்க மகிழ்ச்சி. கைத்தொலைபேசி தரும் ப்ரைவஸி பழைய நெருக்கத்தை மீண்டும் உயிர்ப்பித்த மகிழ்ச்சி கவிதை சொல்லியை “அதே நீ” என்று குதூகலிக்கச் செய்கிறது. பலவித புதிர்ச்சுவையை எழுப்புகிறது இக்கவிதை.

நண்பரின் மொழிபெயர்ப்பு –

After a very long gap,
we met.
Only upon returning home
I calculated
after how many years.
You beat me to it.
As SMS landed
from the shared
mobile number
‘Fourteen long years’.
I have now reached you
as you were.
The same you.

இந்தக் கருவின் prequel ஆக இன்னொரு கவிதை 12ம் பக்கத்தில் வருகிறது.

“Distant laughter
Distant stare
Relationships
which cannot be
boxed in by courts”

தூரத்தை விலக்கி virtual நெருக்கத்தை மீளப்பெற்ற மகிழ்ச்சி நிலைக்கட்டும் என்று வாசகனை எண்ண வைக்கிறது – “அதே நீ”

Advertisement

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.