கோயில் மரம்
கோயிலை தனக்குள் அடக்கி வளர்கிறது
பாம்பென வேர்கள் படர்ந்து
இறுகின சந்நிதிகள்
காலி சந்நிதானத்துள்
பிரதிஷ்டை கொள்ள ஓடியது வேர்
மரங்கள் கடவுளாகி மறைந்த பின்னர்
சட்டகத்தில் தொங்கவிட
ஓடும் வேர்களின் பின்னணியில்
ஒரு புகைப்படம்

(பதினைந்தாவது முறையாக திருத்தியது)
மூலப்பதிவு : மரக்கோயில்