கண்கள் மூடிப் படுத்திருக்கிறேன்
ஏதேதோ நினைவுகள்
அடுத்த நாள் பற்றிய எண்ணங்கள்
பகலில் நடந்தவை பற்றிய அசை போடல்கள்
விடியச் சில மணி நேரங்கள்
இத்தருணத்திற்கு மீண்டு இரவைப் பருகினேன்
மூடிய கண்களில் உறக்கம் படிந்தது
நீர் நகரும் சத்தம் கேட்டவாறிருந்தது
யாரோ எதுவோ கால் கழுவிக்கொண்டது
நீரளையும் ஓசை
கரை தட்டிய கால்கள்
தரையில் தள்ளிவிடும் நீர்
மனதில் வந்து தேங்குகிறது
மனம் சுத்தமாகட்டும்
புதுக்காலையில் புது மனம்
1.44 AM Fri 21 Jan