நேற்றிரவு கின்டில் புத்தகம் வாங்கினேன். கான்ஸ்டன்டீன் கவாஃபியின் கவிதைகள்.
கவாஃபியின் கவிதைத் தொகுதியில் முதலில் வாசித்த கவிதை –
சுவர்கள்
முன்யோசனையின்றி, பரிவின்றி, வெட்கமின்றி
அவர்கள் உயரமான இந்த திண்சுவர்களை என்னைச் சுற்றி கட்டியிருக்கின்றனர்
இப்போது நானிங்கே விரக்தியில்.
வேறெதைப்பற்றியும் சிந்தனையெழவில்லை; இந்த விதி என் மனதை நுகர்கிறது;
வெளிப்புறத்தில் எனக்கு செய்ய நிறைய வேலைகள்.
இந்த சுவர்கள் கட்டப்படும்போது நான் ஏன் கவனிக்கவில்லை?
ஆனால் கட்டிடக்காரர்களின் அல்லது பிற சத்தங்களை நான் கேட்கவேயில்லை.
புலப்படாமல், அவர்கள் என்னை இவ்வுலகத்திலிருந்து மூடிவிட்டார்கள்.
மொழியாக்கம் : அடியேன்