இதுவரை தமிழ் கதைப்பரப்பில் அதிகம் பேசப்படாத களம் மற்றும் நிலப்பரப்பு ; வரலாற்றின் முக்கிய காலகட்டம் ; வெறும் தகவல்களை அடுக்கினாலே ஒருநாவலுக்கிணையான விறுவிறுப்பை தரக்கூடிய வரலாற்றுக் காலம் ; ஆனால், தகவல்களின் குவியல் கட்டுரையாகும். நாவலாக முடியுமா? தகவலையும் கற்பனையையும் கலந்து கொத்திப்பூசி ஒரு கதையை எழுப்பும் பிரயத்தனத்தில் இரவுபகலாக எண்ணங்களை பதனப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சிறுதுளையிலிருந்து பீறிடும் நதிக்கான காத்திருப்பில் அலைவுறுகிறேன். தலைப்பை கூட முடிவுசெய்தாயிற்று – ஒருமுறை தொட்ட நதி.
ஒரு முறை தொட்ட நதி – தலைப்பு அற்புதம்.வாழ்த்துகள்.இன்னும் தங்கள் நூல் சக்கர
வளாகம் படிக்க எடுக்கவில்லை..சென்னைக்கும் – கோவைக்குமான அலைச்சல்.சென்னையில்
பேத்தி பிறப்பு. இடையில் தொற்றுச் சூழல் – மனைவி சென்னையில் , நானும் கோவையில்
என் வீட்டில் இல்லை, புற நகரில் அக்கா வீட்டில்..புத்தகம் கைவசமில்லை..
On Tue, Mar 31, 2020, 6:32 PM இலைகள், மலர்கள், மரங்கள் wrote:
> hemgan posted: “இதுவரை தமிழ் கதைப்பரப்பில் அதிகம் பேசப்படாத களம் மற்றும்
> நிலப்பரப்பு ; வரலாற்றின் முக்கிய காலகட்டம் ; வெறும் தகவல்களை அடுக்கினாலே
> ஒருநாவலுக்கிணையான விறுவிறுப்பை தரக்கூடிய வரலாற்றுக் காலம் ; ஆனால்,
> தகவல்களின் குவியல் கட்டுரையாகும். நாவலாக முடியுமா? தகவலையு”
>
தாத்தா ஆயிட்டிங்களா….கங்கிராஜுலேஷன்ஸ்….ஃபோனில் நாளை அழைக்கிறேன்..
மன்னிக்க , நூலின் சரியான பெயர் : சக்கர வாளம் – எனத் திருத்திக் கொள்கிறேன்.
சார் என்னை embarrass பண்றீங்க…:)))