துக்கம் என்பது என்ன?

பௌத்த சிந்தனையின் படி ‘துக்க’ என்னும் பாலி சொல் எதைக் குறிக்கிறது? பொதுவாக பௌத்த இலக்கியங்களில் அதிகம் கோடிட்டுக் காட்டப்படும் பிறப்பு, நோய், மூப்பு, சாவு முதலான நான்கு அடிப்படை துக்கங்களை மட்டும் அந்தச் சொல் குறிப்பதில்லை. பொதுவான அன்றாட வாழ்க்கையில் நம் சுயத்துடன் நம்மை நாம் பிணைத்துக் கொள்ளும் போது தோன்றும் அதிருப்தி நிலையையும் ‘துக்க’ எனும் சொல் குறிக்கிறது. ‘துக்க’ எனும் பாலி மற்றும் சமஸ்கிருதச் சொல்லை ஆங்கில மொழிபெயர்ப்புகளில் “suffering’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டமை ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் “துக்கத்தை” பொருள் கொள்ள வைக்கிறது. இதுவே பௌத்தம் ஓரு “pessimistic” சிந்தனை என்பதான கண்ணோட்டத்தை பரவலாக்கியது. What the Buddha Taught எனும் அதி முக்கியமான நூலில் ராஹுல வால்போல குறிப்பிடுவதாவது :

It is true that the Pali word Dukkha (or Sanskrit Duhkha) in ordinary usage means ‘suffering’, ‘pain’, ‘sorrow’, or ‘misery’, as opposed to the word Sukha meaning ‘happiness’, ‘comfort’ or ‘ease’. But the term Dukkha as the first noble truth, which represents Buddha’s view of life and the world, has a deeper philosophical meaning and cannotes enormously wider senses. It is admitted that the term dukkha in the First Noble Truth contains, quite obviously, the ordinary meaning of ‘suffering’, but in addition it also includes deeper ideas such as ‘imperfection’, ‘impermanence’,’emptiness’, ‘insubstantiality’. It is difficult therefore to find one word to embrace the whole conception of the term dukkha as the First Noble Truth, and so it is better to leave it untranslated, than to give an inadequate and wrong idea of it by conveniently translating it as ‘suffering’ or ‘pain’.

1970-களுக்குப் பிறகு மேற்கத்திய மொழிபெயர்ப்பாளர்கள் ‘துக்க’-வை மொழிபெயர்ப்புச் செய்யாமல் அப்படியே ஒரு கலைச்சொல்லாக பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள்.

‘துக்க’த்தின் வகைமைகளை பல பௌத்த சான்றோர்கள் தம் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘துக்க’த்தை மூன்று விதங்களில் பிரிக்கிறார்கள்.

(1) துக்க-துக்க – வாழ்க்கையின் அடிப்படை துக்கங்களான – பிறப்பு, நோய், மூப்பு மற்றும் சாவு – நான்கும் அனைத்து உயிர்களையும் பீடிப்பவை. இதிலிருந்து மீள்வது எவரும் இல்லை.

(2) விபரிணாம துக்க – வாழ்க்கையின் மாற்றங்களைப் பிடித்துக் கொண்டு அவற்றைத் தாள முடியாமல் நம் மனம் கொள்ளும் பதற்றம், உளைச்சல் போன்றவை துக்கத்தின் இரண்டாம் வகை.

(3) சம்கார துக்க – வாழ்க்கையின் மாறும் தன்மையை ஏற்காத காரணத்தால் அனைத்து உயிர் வகைகளிலும் உணரப்படும் பொதுவான அதிருப்தி நிலையை இந்த மூன்றாவது வகை குறிக்கிறது. எதுவும் நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருப்பதில்லை அல்லது காணும் பொருட்கள் அனைத்தும் நம் மதிப்பீட்டின்படி இருப்பதில்லை என்னும் ஒர் உணர்வு நிலை இறக்கும் வரை நம்முள் படிந்துகிடப்பதை இது குறிக்கிறது.

‘துக்க’த்தின் மூன்று பகுப்புகளை பற்றிப் பல பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் குறிப்பாக இரண்டு நூல்கள் பௌத்த இலக்கியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. புத்தகோஸர் பாலியில் எழுதிய விசுத்திமக்கா எனும் வினய நூல் (ஐந்தாம் நூற்றாண்டு) மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் அதாவது இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த ஆசாரியர் அஸாங்கர் சமஸ்கிருதத்தில் இயற்றிய அபிமானசமுச்சய எனும் சர்வாஸ்திவாத பௌத்த நூல். இந்த நூல்கள் மட்டுமல்லாது பல்வேறு பௌத்த நூல்களும் துக்கம் பற்றிய நுணுக்கமான புரிதலை நமக்கு வழங்கியிருக்கின்றன.

புத்தகோஸரும் அஸாங்கரும் பிற்காலத்தில் வந்தவர்கள். துக்கத்தின் நுணுக்கங்களை நிகாயங்கள் எனப்படும் பௌத்த இலக்கியங்கள் பேசியிருக்கின்றனவா? பேசியிருக்கின்றன. அதற்கு பல உதாரணங்களைத் தரலாம். மிகப்பிரபலமான சுத்தங்களில் ஒன்றான அனுராதா சுத்தத்தில் துக்கம் பற்றிய ஒரு நுட்பமான பார்வையை நமக்கு வெளிப்படுத்திவிடுகிறார் சாக்கியமுனி.

அனுராத சுத்தத்தில் ததாகதர் துறவி அனுராதாவுக்கு சொல்கிறார் :-

Both formerly & now, it is only stress that I describe, and the cessation of stress.

மேலே சொன்ன பிரகடனம் சுத்தத்தின் கடைசி வரிகள். அதற்கு முன்னதான ஒரு நீளமான உரையாடலில் ஒரு கேள்வி பதில் பரிமாறல் ஒன்றில் இவ்வாறு வருகிறது :-

“What do you think, Anuradha: Is form constant or inconstant?”

“Inconstant, lord.”

“And is that which is inconstant easeful or stressful?”

“Stressful, lord.”

அனுராதா சுத்தத்தின் இந்த மொழிபெயர்ப்பில் தனிஸ்ஸாரோ பிக்கு ‘துக்க’த்தை Stress என்றே ஆங்கிலப்படுத்தியிருக்கிறார். Stress என்ற சொல்லை மாற்றி ‘pain’ என்று எழுதினால் அந்த வாக்கியம் அரைகுறையான அர்த்தத்தை தருமல்லவா?

இவ்வளவு ஏன்? முதன்முதலாக சாரநாத்தில் ஐந்து துறவிகளுக்குப் போதித்த தம்மத்திலேயே புத்தர் ‘துக்க’த்தை வெறும் நான்கு அடிப்படை துன்பங்களாக மட்டும் பார்க்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறார். சாக்கிய முனியின் முதல் பிரவசனமான தம்மசக்கப்பவத்தன சுத்தத்திலேயே துக்கத்தின் வகைகளை அறுதியிட்டுக் கூறி விடுகிறார்.

“Now this, monks, is the noble truth of stress: Birth is stressful, aging is stressful, death is stressful; sorrow, lamentation, pain, distress, & despair are stressful; association with the unbeloved is stressful, separation from the loved is stressful, not getting what is wanted is stressful. In short, the five clinging-aggregates are stressful.

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.