அலறுகிறேன்
அரற்றுகிறேன்
கதறுகிறேன்
பதில் இல்லை
மனம் சற்று அமைதியுற்ற பின்
சரண் அடையும் மனப்பாங்குடன்
வழிகாட்டலை வேண்டுகிறேன்
சுவரின் எழுத்துக்களிலோ
யாரோ யாருடனோ நடத்தும் உரையாடலிலோ
யதேச்சையாக புரட்டிய பக்கத்திலோ
கிடைத்து விடுகிறது எனக்கான பதில்
இது அற்புதம் எனில் நிந்தையாகிவிடும்
மனித குலத்தின் மீதான
மறைமுக நையாண்டி என்று சொல்லிக் கொள்ளலாம்.