நான் புழங்கும் அறைக்குள்
இரு அரவங்கள்
கருத்த நிறத்தினவாய் !
அவைகளின் நீளம் மாறும் தன்மையதாய் !
அறையில் பெண்களுடன் முயங்குதலின்
கண்ணாடி பிரதிபலிப்பில்
என் முகம் ஒரு பாம்பின் முகத்தை ஒத்திருக்கிறது.
கொடுங்கனவில் நடுநடுங்கி கண்விழித்து வியர்வை வழிய எழுந்தமர்கையில்
இன்னொரு பாம்பு படமெடுத்து பிரம்மாண்டமாய் நிற்கிறது.
ஒன்று கைக்குட்டை அளவினதாய் சுருங்கினால்
மற்றொன்று வெகு நீளமாய் வளர்ந்திருக்கும்.
இரண்டின் உடல்களும் இடறி
தலைகுப்புற நான் விழுந்தது பலமுறை!
அவற்றில் நான் தலை வைத்து அமைதியாய் உறங்குவதும் அவ்வப்போது நடப்பதுண்டு
அரவங்களிரண்டும் ஒரு நாள் காணாமல் போயின.
அறைக் கண்ணாடி
அன்றோடு என்னை பிரதிபலிப்பதை
நிறுத்திக்கொண்டது.