வருடம் முடிகிறது

சக்கரவாளம் கட்டுரைத் தொடர் இருபத்தியெட்டு இடுகைகளுடன் நிற்கிறது. கடும் அலுவலகப் பணிச்சுமை காரணமாக தவிர்க்க முடியாத இடைவெளி ஏற்பட்டுவிட்டது. கட்டுரைத்தொடரை மே மாதத்துக்குள் எழுதி முடித்துவிட வேண்டும்! பார்ப்போம் நடக்கிறதா என்று!

இவ்வலையில் பதியப்பட்டிருந்த இருபது சிறுகதைகளை நீக்கி விட்டேன். அச்சிறுகதைகளை  எல்லாம் ஒரு தொகுதியாக காலச்சுவடு நிறுவனம் வெளியிடவிருக்கிறது. தொகுதியின் தலைப்பு – டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில். அச்சிடப்பட்டவுடன் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

இவ்வருடம் இரண்டே இரண்டு சிறுகதைகள் தான் எழுதினேன். வரும் வருடத்தில்  அதிக எண்ணிக்கையிலான சிறுகதைகள் எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

இரண்டு நண்பர்களுக்கு என் நன்றியை நான் அவசியம் தெரிவிக்க வேண்டும் –  நட்பாஸ் மற்றும் ஸ்ரீதர் – என் கட்டுரைகள் பற்றியும் கதைகள் பற்றியும் தம் கருத்துகளைப் பகிர்பவர்கள். மின்னஞ்சல் வாயிலாக அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். சலிப்பு காட்டாமல் ஒவ்வொரு முறையும் படைப்பு பற்றிய குறை-நிறைகளை சொல்லுவார்கள். அவர்களின் மாறாத ஊக்கம் தான் என் முதல் சிறுகதைத் தொகுதி வரை என்னை வழி நடத்தியிருக்கிறது. இத்தனைக்கும் இருவரையும் நான் சந்தித்தது கிடையாது. 2016 – இல் இவ்விரு நண்பர்களையும் சந்தித்து விட வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

 

Capture