மரம் வெட்டும் திருவிழா

மரம் வெட்டும் திருவிழா

காலனியில் இன்று

இனிப்பு விநியோகம்

முன்வாசலில் நின்ற

வயதான மரங்கள்

வெட்டப்பட்டு

கட்டிட பால்கனிகளில்

வெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ;

கலைந்த கூடோன்றுள்

கிடந்த பறவை முட்டைகளை

வீசியெறிந்து விளையாடி

குழந்தைகள் குதூகலிப்பதை

மரங்களின் இடத்தடையின்றி

நகர்ந்த வாகனங்களின்

உறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு

சுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில்

பால்கனிக்காரர்கள்

கண்டு களித்தார்கள்

மரண தினத்தை

கொண்டாடும் மரபு

மரம் மரணித்த அன்றும்

மாறாமல் தொடர்ந்தது

​@ studiothirdeye.com

செயல்முறை

சிந்தனைப்பாத்திரத்தில்

நிரம்பி வழிந்த சொற்கள்

காகிதப் பக்கங்களில் ஒட்டிக் கொண்டு

பின்னர்

வாசிப்பின் உஷ்ணத்தில்

எண்ணங்களாக ஆவியாகி

இன்னொரு சிந்தனைப் பாத்திரத்துள்

புகுந்து கொண்டன

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.