இந்தோனேசிய அம்பிகை – பிரஜ்னபாரமிதா

Prajnaparamita_Java_Front

கிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

புராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள். தர்மச்சக்கர முத்ரையை பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் வலது கை ஒரு நீலத் தாமரையின் மேல் இருக்கிறது ; அந்நீலத் தாமரையின் மீது பிரஜ்னபாரமித சூத்ரப் பனையோலை ஏடு வைக்கப்பட்டிருக்கிறது. தேவியின் உயர்ந்த ஞானநிலையையும் தெய்வீகத்தனமையையும் குறிக்க தலைக்குப் பின்னால் ஒளிவட்டமும் காட்டப்பட்டிருக்கிறது.

பிரஜ்னபாரமிதா மகாயான பௌத்தத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்று. இக்கோட்பாட்டின் புரிதலும் பயிற்சியும் போதிசத்துவ நிலையை அடைவதற்கு மிகவும் இன்றியமையாதன என்பது மகாயான பௌத்தர்களின் நம்பிக்கை. இப்பயிற்சிகளுக்கான வழிமுறைகளும் தத்துவங்களும் பிரஜ்னபாரமிதா என்ற சூத்திர வகைமை நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பிரஜ்னபாரமித சூத்திரங்களின் முக்கியமான சாராம்சம் எல்லாப் பொருட்களும் முழுப்பிரபஞ்சமும் (நம்மையும் சேர்த்து!) வெறும் எண்ணத்தோற்றங்கள் மட்டுமே ; கருத்தாக்ககட்டமைப்புகளேயன்றி வேறொன்றுமில்லை என்பதேயாகும்.

பிரஜ்னபாரமித கோட்பாடு போதிசத்வதேவியாக (பெண் போதிசத்வர்) உருவகிக்கப்பட்டு பெண் தெய்வ உருவங்கள் சமைக்கப்பட்டன. நாலந்தாவில் கிடைத்த அரும் பொருட்களில் பிரஜ்னபாரமிதா பெண்தெய்வ உருவங்களும் உண்டு. புராதன ஜாவா மற்றும் கம்போடிய கலைகளிலும் பிரஜ்னபாரமிதா பெண் சிலைகள் காணப்படுகின்றன.

தற்போதைய வங்காளம், பீகார் மற்றும் ஒடிஷா சேர்ந்த ராச்சியத்தை பால் அரசர்களில் ஒருவரான தேவபாலர் (கி.பி.815-854) ஆண்ட போது, ஸ்ரீவிஜய மகாராஜா பாலபுத்ரா நாலந்தாவின் முக்கிய பௌத்த மடாலயம் ஒன்றைக் கட்டினார். அதற்குப் பிறகு ஜாவாவை வந்தடைந்த “அஷ்டசஹஸ்ரிக பிரஜ்னபாரமித சூத்ரத்தின்’ வாயிலாகவே பிரஜ்னபாரமிதா தேவியின் வழிபாடு துவங்கியிருக்கக்கூடும்.

எட்டாம் நூற்றாண்டில் தாராதேவி வழிபாடு ஜாவாவில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர், மத்திய ஜாவாவில் எட்டாம் நூற்றாண்டில் கலசான் என்ற ஊரில் கட்டப்பட்டதொரு கோயிலில் முதன்முதலாக தாரா என்னும் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு மிகப் பிரசித்தமாக இருந்தது. பிரஜ்னபாரமிதாவின் சில செயல்பாடுகளும் பண்புகளும் தாரா தேவியோடு நிறைய ஒத்துப் போகும். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தாந்திரீக பௌத்தத்திற்கு கீர்த்திநகாரா என்ற அரசனின் ஆதரவு கிட்டவும், சுமத்ராவிலும் கிழக்கு ஜாவாவிலும் பிரஜ்னபாரமிதா சிலைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன.

பிரஜ்னபாரமிதாவின் வழிபாடு இன்றளவும் திபெத்திய பௌத்தத்தில் நிலைத்திருக்கிறது. திபெத்திய வஜ்ராயன பௌத்ததில் அவள் ”ஷெராப்க்யி ஃபாரொல்டுசின்மா” என்று அழைக்கப்படுகிறாள். அவள் ‘ஓம் ஆஹ் திஹ் ஹம் ஸ்வா;’ (om ah dhih hum svah) என்ற மந்திரத்தால் வழிபடப்படுகிறாள்.

Tibetan Prajnaparamita

1 Comment

  1. சிறப்பான தகவல்… நன்றிகள் பல… வாழ்த்துக்கள்…

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.