நுழைவதும் வெளிவருவதுமாகவும்
இருந்தேன்.
ஒவ்வொரு கனவிலும்
எண்ணற்ற நிகழ்வுகள்
எல்லா நிகழ்வுகளிலும் நான்!
கனவுகளுக்குள் நான் நுழையவில்லையென்று
பின்னர் தான் தெரிந்தது
என்னைச் சுற்றிலும்
கனவுகள்
ஓடியும் பாய்ந்தும்
சென்று கொண்டிருக்கின்றன
நான் பாய்ந்து செல்லும்
கனவுகளை நோக்கும் சாட்சியாக மட்டும்
நின்று கொண்டிருக்கிறேன்.