சுரங்கங்களைத் தோண்டு
நதிகள் இடையில் வந்தால்
அவற்றின் பாதையை மாற்றி விடு
மரங்களை வெட்டு
அணைகளைக் கட்டு
பள்ளம் தோண்ட
குண்டுவெடிப்பு நிகழ்த்து
பிளவு பட்ட பாறைத் துகற்களை
நதிக்குள் தள்ளு
நிலச்சரிவினால் இழந்த
மோட்டார் சாலைகளை மீட்க
மலையின் பக்கங்களை மேலும் செதுக்கியெடு
நதியில் இன்னும் பாறைகள் வந்து விழ வை
பச்சைப் போர்வையை
எடுத்து மலைகளைக் குன்றுகளாக்கு
காடுகளைக் களைந்து
வரிசை மேல் வரிசைகளாக
ஓய்வு விடுதிகளை நிறுவு
வியாபாரம் செய்
முன்னேற்றமொன்றே உனது குறிக்கோள்
ஊர்கள் அழிந்துவிட்டால்
புராணக் கதைகளைக் காரணம் காட்டிக் கொள்ளலாம்
* – சார்தாம் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் புனிதத்தலங்களாகிய – பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி – உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளன. ரிஷிகேஷ், அரித்வார் போன்ற மேலும் பல புராதனமான திருத்தலங்களும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தை தேவபூமி என்றும் அழைக்கின்றனர்.
please drafted i English sir., i know Tamil tospeak., but i don’t know Tamil script reading.
Thanks for the interest. Here is the link for the translation of the above poem :-
http://madversemusings.blogspot.in/2013/06/the-abode-of-gods-translation-of-tamil.html