“சொற்ஜாலங்கள் கவிதை இல்லை
கடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை
புதிர்கள் கவிதை இல்லை
பிரகடனங்கள் கவிதை இல்லை
முழக்கங்கள் கவிதை இல்லை
பிரச்சாரங்கள் கவிதை இல்லை
வசனங்கள் கவிதை இல்லை”
எழுதிய எல்லாவற்றையும்
கிழித்துப் போட்டு விட்டு
வெண் தாளொன்றை
எடுத்து தயாராக வைத்துக்கொண்டு
”எது கவிதை இல்லை என்பது புரிந்தது;
ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?”
என்று கேட்ட போது
மௌனமே பதிலாய்க் கிடைத்தது.
வெண் தாளில்
ஒரு கறுப்பு புள்ளி மட்டும் வைத்து
எழுதுகோலை மூடி வைத்தேன்.