தைரியம், அமைதி, நம்பிக்கை

How to Have Courage Calmness And Confidence - Paramahansa Yogananda

வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும்.

உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை ஆவதற்கு, முதலில் அவன் தன்னுடைய வரம்பெல்லைகள் என்று கருதிக்கொள்ளும் கற்பனையை விலக்கிக் கொள்ள வேண்டும்……

உண்மையான போர்வீரன்
நன்மை பயக்கும் மாறுதல்களை தைரியமாக தழுவிக்கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்கான நம்பிக்கைகள் தோல்விப்பயத்தால் எதிர்க்கப்படும் வரை, மனம் ஒரு போதும் அமைதியில் அமையாது. எனவே, மாறுதல்களை ஏற்பது மட்டுமே வாழ்வின் ஒரே மாறிலி. நமது வாழ்க்கை வெற்றி- தோல்விகளின், நம்பிக்கை-ஏமாற்றங்களின் முடிவிலா ஊர்வலம். ஒரு கணம், சோதனகள் எனும் புயற்காற்றால் நாம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறோம் ; சில கணங்களுக்குப் பிறகு, சாம்பல் நிற மேகங்களை வெள்ளிக் கோடுகள் வெளிச்சப்படுத்துகின்றன ; திடீரென்று வானம் மீண்டும் நீல நிறம் கொள்ளுகிறது.

அறிவார்ந்த கோட்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டே வாழ் நாட்களை வீணடித்து சாய்வு-நாற்காலியில் அமர்ந்து “தேடுபவனுடன்’ ஒப்பு நோக்கப்படும்போது, உண்மையாக தேடுபவன் தன் முன்னால் இருக்கும் கடின உழைப்பில் மனம் தேற்றிக் கொள்கிறான். உண்மையான போர்வீரன், அச்சமாக இருந்தாலும், தன் கை தேவைப்படும்போது தைரியமாக போர்க்களத்தில் குதிக்கிறான். ஆல்ப்ஸ் மலையின் உயரங்கள் நெஞ்சில் கலக்கமேற்படுத்தினாலும், மலையேறுபவன் உறுதியுடன் உயரங்களை அடையும் முயற்சியில் ஈடுபடுகிறான். உண்மை-தேடுபவன் தனக்கு சொல்லிக்கொள்கிறான் : “பூரணத்துவம் அடையும் பணி எவ்வளவு கடினமானது என்பதை நான் அறிவேன். ஆனால். அதற்காக என் எல்லாவற்றையும் நான் அளிப்பேன். கடவுளின் உதவியால், இக்காரியத்தில் நான் வெற்றி அடைவேன்” ஆழ்ந்த தினசரி தியான முயற்சிகளால் சதை-நணவுணர்ச்சியை கையகப்படுத்தி, மறந்திருந்த உள்ளுறை தெய்வீக ஆனந்தமெனும் விழிப்புணர்வை மீட்டெடுக்கிறான்.

பக்தனே, மனம் தேற்றிக்கொள். அதீதப்புலனின்பம், தோல்வி, ஏமாற்றங்களினால் உண்டான வறட்சிக் காலத்தில் எத்துணை பிளவுகளையும் வறட்சியையும் உன் இதயத்தின் மண் கொண்டிருந்தாலும், உள்ளார்ந்த நற்கருணையின் அமைதி பெருக்கினால் நீர் பட்டு மென்மையாகும். வதங்கிப் போன உன் ஆன்ம உற்சாகம் புதுப்பிக்கப்படும். ஒரு முறையாவது கடவுள் நற்கருணையின் திராட்சை ரசம் அருந்து. ஆர்வமிகுந்து ஆன்மீக தளத்தில் நீ தினமும் புதுப்பிக்கப்பட்ட ஆன்ம உணர்வெனும் மண்ணில் உழைத்து, ஆன்ம வெற்றி எனும் விதைகளை விதைத்து, அவை தெய்வீக ஆனந்தமெனும் பயிராய் நெடுக வளரக் காண்பாய். தொந்தரவு என்று நீ கருதும் எதையாவது எதிர்கொள்ளுகையில் ஊக்கமிழந்து, தோற்கடிக்கப்படுவதற்குப் பதிலாக நீ கற்றுக்கொள்ள வேண்டியதை என்னவென்று காணவும், சவாலை சந்திக்க தேவையான பலத்தையும் விவேகத்தையும் அதிகப்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்த பரம பிதாவிற்கு நன்றி செலுத்து.

வாழ்வின் சோதனைகளை மகிழ்ச்சியுடனும் தைரியத்துடன் சந்திக்கும் போது தான் கருமச்சுமைகள் குறைகின்றன. எதற்காவது உன் பயம் இன்னும் தொடருமானால், நீ கருமவினைகளிலிருந்து விடுபடவில்லையென்றே அர்த்தம். கருமத்தை சிதறடிக்க, நீ சந்திக்க வேண்டிய சோதனைகளை தவிர்க்க முயலாதே. கடவுளின் ஆனந்தம் நிறை அகத்தினுள் வசிப்பதன் வாயிலாக சோதனைகளிலிருந்து தைரியமாக மேலேழு.

தைரியம் பெற சில உறுதிமொழி
கஷ்டங்கள் போல் தோன்றுகிறவற்றை சமாளிக்க தேவையான தைரியமும், பலமும் அறிவுத்திறனும் எல்லா கணங்களிலும் உன்னிடம் இருக்கிறது. மனதளவில், உடலளவில் அசைவற்று இரு ; சமநிலை நிலவும் உன் உள்ளுறை மையத்தில் ஓய்வெடு ; அங்கு உன் பரம பிதவுடன் தொடர்புறவில் இரு. அவர் உனக்கு வழி காட்டுவார்.

கடவுள்-அமைதியெனும் மாறாத உள் நினைவில், நான் முதலில், கடைசியில், எல்லா நேரங்களிலும் பாதுகாப்பை தேடுவேன்.

நல் மனசாட்சியெனும் கொத்தளத்தில் நான் பாதுகாக்கப்படுகிறேன். என் பழைய இருட்டை நான் எரித்து விட்டேன். என் கவனமெல்லாம் என் இன்றைய ஒரு நாளில் மட்டும் தான்.

எல்லாப் பிர்சினைகளுக்கும் ஒரு சரியான தீர்வு உண்டு. இத்தீர்வினைக் காணும் விவேகமும் அறிவுத்திறனும், அதை முன்னெடுத்துச் செல்லும் பலமும் தைரியமும் என்னுள் உண்டு.

கடவுள் என்னுள்ளிலும் என்னைச் சுற்றியும் இருக்கிறார் ; என்னைக் காக்கிறார். எனவே, அவருடைய வழிகாட்டும் ஒளியை அடைத்து என்னை தவறெனும் குழியில் விழ வைக்கிற பயமெனும் பேரிருட்டை வெளியேற்றுவேன்.

இரகசிய பயம் பதற்றத்தையும் கவலையையும் உருவாக்குகிறது ; இறுதியான வீழ்ச்சியையும் தருகிறது. நம்முடைய திறமையில் நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும் ; சரியான காரணத்தின் வெற்றியிலும் நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த குணங்களைப் பெற்றிருக்காவிடில், எண்ணக்குவிப்பின் மூலமாக நம் மனதில் அவற்றை நாமே உருவாக்க வேண்டும், உறுதியான, நீண்ட, தொடர்ந்த பயிற்சியினால் இதை சாதிக்க முடியும்.

முதற்கண், நம்முடைய குறைகளை நாம் கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு, நமக்குள் மனத்திண்மைக் குறைபாடு இருக்குமானால், அக்குணத்தின் மேல நம் எண்ணத்தைக்குவிப்போம் ; பிரக்ஞை மிகுந்த முயற்சிகளினால், நம்முள் மனத்திண்மையை நம்மால் பெருக்க முடியும்.

பயத்திலிருந்து நம்மை நாம் விடுவிக்க விரும்பினால், தைரியம் என்ற குணத்தின் மேல் நாம் தியானம் செய்ய வேண்டும் ; குறுகிய காலத்தில், பயமெனும் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெற்று விடுவோம். எண்ணக்குவிப்பு மற்றும் தியானம் மூலம், நம்மை நாம் ஆற்றல் மிக்கவராகவும், கவனத்தை குவிக்க இயல்பவராகவும் நம்மை ஆக்கிக் கொள்ள முடியும். தொடர்ந்த பயிற்சி ஒரு முயற்சியும் இன்றி ஒற்றைப் பிரசினையின் மேல் நம் எல்லா ஆற்றலையும் குவித்தலை சாத்தியமாக்கும். இது நம்முடைய இரண்டாவது இயல்பாகவும் மாறி விடும். இப்புது குணத்தை பெற்றிருப்பதன் வாயிலாக, பொருள் மற்றும் ஆன்மீக இலக்குகளை நம்மால் எளிதில் அடைய முடியும்.

துக்கம் புறநிலை இருப்பு இல்லாதது. வாய்மொழி வழி தொடர்ந்து பிரஸ்தாபிப்பதன் மூலம், அது இருக்கிறது. உன் மனதில் அதை மறுதளித்தால், அது இல்லாமல் போகிறது. இதை நான் ’ஹீரோயிஸம்’ என்பேன் ; அவனுடைய தெய்வீக அல்லது மூல இயற்கை என்பேன். துக்கத்திலிருந்து விடுதலை பெறுதற்கு, மனிதன் தன்னுடைய ”ஹீரோயிஸம்” மிகுந்த சுயத்தை வெளிப்படுத்துதல் அவசியம்.

ஒரு சாதாரண மனிதனுள்ளில் “ஹீரோயிஸம்” மற்றும் தைரியத்தின் பற்றாக்குறையே துக்கத்தின் ஆணிவேர். ”ஹீரோயிஸத்தின்” கூறு ஒருவனின் மனத்தில் குறையும் போது, கடந்து செல்லும் துக்கங்களுக்கு அவன் மனம் எளிதில் இணக்கமானதாக ஆகிறது. மனதின் வெற்றி வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை தருகிறது ; மனதின் தோல்வி துக்கத்தை தருகிறது. ஒவ்வொரு மனிதனுள்ளும் வெற்றிவீரன் விழித்திருக்கும் வரை, ஒரு துக்கமும் அவனுடைய இதயத்தை தொட இயலாது.

தொடர்ச்சியான பிரசினைகளை தோற்கடிப்பதைத் தவிர இவ்வாழ்க்கை ஒன்றுமில்லாதது. உன் கையில் தீர்வுக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு பிரசினையும் வாழ்க்கை உனக்கு விதித்திருக்கும் கட்டாயக் கடமையாகும். ஒரு தனி மனிதன் சூழ்நிலையின் மட்டத்துக்கு கீழ் மூழ்கும் போது, கெட்ட நேரத்தின் பாதிப்புக்கு சரணடைகிறான். அவனுள் பொதிந்திருக்கும் வீர தைரியத்தின் உதவியால், சூழ்நிலையைத் தாண்டி அவன் எழும்பொழுது, வாழ்வின் அனைத்து நிலைகளும், அவை எத்தனை அச்சுறுத்தும் படியாக இருந்தாலும் பனிப்போர்வை விலகி வானிலிருந்து எட்டிப்பார்க்கும் இதமான சூரிய ஒளி போன்றதாக இருக்கும். சாதாரண மனிதனின் துக்கங்கள் வாழ்வு நிலைகளின் உள்ளார்ந்தவை அல்ல. அவைகள் மனித மனத்தின் பலவீனங்களிலிருந்து பிறப்பவை.உன்னுள்ளிருக்கும் வெற்றிவீரனை விழித்தெழ வை; உன்னுள் உறங்கும் வீரனை தட்டி எழுப்பு;ஒரு துக்கமும் உன் சாளரத்தை இருட்டாக்காது.

[Translation of Excerpts from the Book “How to have Courage, Calmness and Confidence” By Paramahansa Yogananda, Publisher : Ananda Sangha Publications]

Advertisement

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.