வெகு காலமாக
புரட்டப்படாத
புத்தகத்தின் பக்கங்களுக்குள்
கிடந்தது இலை
பச்சை மங்கி
வெண்மைப் பட்டுப் போன
ஆனால் வடிவம் குன்றா
அந்த இலையில்
வாசம் தொலைந்திருந்தது
பழைய புத்தகத்தின்
வாசனையை விரும்பி முகர்கையில்
இலையின் வாசமும்
சேர்ந்து வந்தது.
இலை கிடந்த பக்கத்தில்
காணாமல் போயிருந்த
எழுத்துகள் சில
இலையில் பதிந்திருந்தன