மரம் போலவொரு
அழகான கவிதை
என் வாழ்நாளில்
என்னால் எழுத முடியாது.
பசி மிகுந்த
மரத்தின் வாய்
பூமித் தாயின்
வழியும் முலைகளில்
பொருத்தப்பட்டிருக்கும்.
கடவுளை தினமும்
பார்த்துக் கொண்டிருக்கும் மரம்
தன் இலைக் கரங்களை எழுப்பி
தொழுகை புரியும்.
கோடை காலங்களில்
வண்ணாத்திக் குருவியின் கூடுகளை
தொப்பிகளாக அணிந்து கொள்ளும்.
மார்பில் பனி பூசிக் கொண்ட
மரங்கள்
மழையுடன் கூடும்
என் போன்ற முட்டாள்களால்
கவிதை மட்டுமே
கிறுக்க இயலும்
கடவுளால் மட்டுமே
மரத்தினை படைத்தல் சாத்தியம்.
[ ஜாய்ஸ் கில்மர் எழுதிய “Trees” என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்]