காற்றடித்த வேகத்தில்
காம்பொடிந்து தலை சாய்ந்த மலருக்குள்
தேன் குடித்த களைப்பில்
படுத்திருந்த பூச்சி
தலை குப்புர
தரையில் விழ
அதன் உடலொட்டிய
மகரந்தத் தூள் சிதறி
பக்கத்து செடியில்
பூத்திருந்த பூவுக்குள் சேர்ந்தது.
நன்றி : மாற்றுப்பிரதி (http://maatrupirathi.blogspot.in/2012/10/blog-post_9.html)