நேரமில்லை

நேரமில்லை..நேரமேயில்லை…
நான் செய்யவிரும்பும்
அனைத்தையும் செய்தற்கு…
ஏறுவதற்கு சிகரங்களின் உச்சிகள்,,,
உலாவுவதற்கு உகந்த காடுகள்…
படகில் பயணிக்க அலை திரள் கடல்கள்..
செல்வதற்கு எல்லா இடங்களும்…
அறிவதற்கு பூமிவாழ் எல்லா மனிதரும்…
இருக்கும் நேரமோ…
சிலரை அறிதற்கும்
சிலவற்றை செய்தற்கும்
செய்ய மீதமிருப்பவை பற்றி
செய்யுள் புனைதற்கும்

– எலீனோர் பார்ஜான்